என் மலர்
விழுப்புரம்
- எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு, அந்த முடிவு இன்னும் வரவில்லை.
- பா.ம.க.வில் பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது.
தைலாபுரம்:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* செய்தியாளர்கள் எந்த கேள்வி எழுப்பினாலும் பதிலளிக்கத் தயார்.
* அன்புமணி மன்னிப்பு கேட்பது இங்கு பிரச்சனை இல்லை, நான் தொடங்கிய கட்சியில் நான் கூறியது படிதான் நடக்க வேண்டும்.
* என்னோடு தொடக்கத்தில் இருந்து பயணித்தவர்களுக்கு பதவி கொடுத்திருக்கிறேன்.
* எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு, அந்த முடிவு இன்னும் வரவில்லை.
* கலைஞர் பாணியில் என் மூச்சு இருக்கும் வரை நான் தான் பா.ம.க.விற்கு தலைவர், அன்புமணி செயல்தலைவர் தான்.
* கலைஞர் தி.மு.க. தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் எந்த முணுமுணுப்பையும் செய்யவில்லை.
* எந்த போஸ்டர்களையும் கிழிப்பது நாகரிகமான செயல் அல்ல.
* பா.ம.க.வில் பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது.
* நான் நியமித்தவர்கள் அனைவரும் நிரந்தர பொறுப்பாளர்கள்.
* 60-வது மணிவிழாவிற்கு அன்புமணி வராதது வருத்தமான மனநிலையை ஏற்படுத்தியது.
* பெரியாரையும் அண்ணாவையும் விமர்சித்திருப்பது வருத்தத்துக்குரியது
* தேர்தல் நெருங்கும் சமயத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டப்படும்
* கூட்டணி குறித்து பொதுக்குழுவில் தான் முடிவெடுக்கப்படும் என்றார்.
- டாக்டர்.ராமதாஸ் சொல்வது தான் முடிவு. அவர் சொல்வதை செய்யப் போகிறோம்.
- பிரச்சனை முடிய வேண்டும் என்று எனக்கு மட்டுமல்ல 2 1/2 கோடி வன்னியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதே ஆசை தான்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் வந்தார்.
தைலாபுரம் தோட்டத்தில் பா.க.ம. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் மாவட்ட செயலாளலர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது அதற்காக வந்துள்ளேன்.
கேள்வி:-ஆலோசனை கூட்டத்தில் ஏதேனும் முக்கிய முடிவு அல்லது பொதுக்கூட்டம் எது சம்பந்தமாக முடிவெடுக்க வாய்ப்புள்ளதா?
பதில்:- டாக்டர்.ராமதாஸ் சொல்வது தான் முடிவு. அவர் சொல்வதை செய்யப் போகிறோம்.
கேள்வி:- டாக்டர் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் இணைய வலியுறுத்தி உள்ளீர்களா?
பதில்:- தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
கேள்வி:- இணைவதற்கு வாய்ப்பில்லை என சிலர் கூறுகிறார்களே...
பதில்:- அப்படி இல்லை இணைவார்கள். எங்களது ஆசை இணைவது தான்.
பதில்:- அவரை பார்ப்பதும், பேசுவதும் புதியது அல்ல. அன்புமணி ராமதாஸ் எனது அண்ணன்.
கேள்வி:- உங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது உங்களை அன்புமணி சந்தித்தாரா?
பதில்:- இல்லை.
கேள்வி:- சேலத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உங்களுக்கு கூட்டுப்பிரார்த்தனை செய்தார்களே
பதில்:- கூட்டுப் பிரார்த்தனை என்பதை கலசம் வைத்து தான் பண்ண வேண்டும். நான் சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறேன். கூட்டுப்பிரார்த்தனை என்றால் இறந்தவர்களுக்கு தான் பண்ண வேண்டும்.
கேள்வி:- நீங்கள் சேலத்தில் நடந்த பா.ம.க. கூட்டத்தை புறக்கணிப்பதற்காக தான் உடல்நிலை சரியில்லை என்று கூறினீர்களா?
பதில்:- யார் சும்மா, சும்மா போய் மருத்துவமனையில் படுப்பார்களா. நான் தனியார் மருத்துவமனையில் படுக்கவில்லை. சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டேன். நீங்கள் அரசு மருத்துவமனையில் சென்று கேளுங்கள். எனக்கு என்னவென்று கேட்டால் கண்டிப்பாக கொடுப்பார்கள். மனம் அழுத்தம் அதனால் தான் மருத்துவமனைக்கு சென்றேன்.
பதில்:- டாக்டர்.ராமதாஸ் என்னுடன் தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருக்கிறார்.
கேள்வி:- பிரச்சனைக்கு எப்பொழுது முடிவு வரும்.
பதில்:- பிரச்சனை முடிய வேண்டும் என ஆசை தான். எனக்கு மட்டுமல்ல 2 1/2 கோடி வன்னியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதே ஆசை தான் விரைவில் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆகஸ்டு 10-ந்தேதி பூம்புகாரில் பா.ம.க. மகளிர் மாநாடு நடக்கிறது.
- பெரியார், அண்ணாவை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டது தவறு.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பா.ம.க.வில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார்.
அந்தவகையில், இதுவரை பா.ம.க.வில் 78 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார்.
இதனை தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட பொது செயலாளர் முரளி சங்கர், சமூக நீதிப்பேரவை கோபு, பொருளாளர் சையத் மன்சூர் உசேன் ஆகியோரை புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.
கூட்டத்தில் பா.ம.க. இணை பொதுச்செயலாளராக சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை டாக்டர் ராமதாஸ் நியமித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆகஸ்டு 10-ந் தேதி பூம்புகாரில் பா.ம.க. மகளிர் மாநாடு நடக்கிறது. அதை வெற்றிகரமாக நடத்த முடிவு செய்துள்ளோம்.
அருள் எம்.எல்.ஏ. எப்போதும் என்னுடன் தான் இருப்பார். இமயமலை உயரத்திற்கு பொறுப்பு கொடுத்திருக்கிறோம். இன்றைய கூட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளர், பொருளாளரை புதிய நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளோம்.
தற்போது வரை பா.ம.க. எந்த கூட்டணியில் போட்டியிடும் என்பதை முடிவு செய்யவில்லை. என்னுடன் இருக்கும் நிர்வாகிகள் தான் பா.ம.க. சார்பில் தேர்தலில் நிற்பார்கள். அவர்களுக்கு தான் சீட் வழங்கப்படும்.
சட்டமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றி பெறும் கூட்டணி அமைக்கப்படும். பா.ம.க.வில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்ற அதிகாரம் நிறுவனரான எனக்கே உண்டு.
பெரியார், அண்ணாவை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டது தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ம.க.வில் 78 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார்.
- டாக்டர் ராமதாசால் நீக்கப்பட்டவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பா.ம.க.வில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார்.
பா.ம.க.வின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக சையத் மன்சூர் உசேன் நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் தலைவராக இருந்த பாலு நீக்கப்பட்டு வக்கீல் கோபு நியமிக்கப்பட்டார்.
மேலும் பா.ம.க.வின் பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணன் நீக்கப்பட்டு முரளி சங்கர் நியமிக்கப்பட்டார்.
இதுவரை பா.ம.க.வில் 78 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார்.
டாக்டர் ராமதாசால் நீக்கப்பட்டவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார். இதனால் தந்தை-மகன் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.
இந்த நிலையில் புதிய மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் இன்று காலை முதலே தைலாபுரம் தோட்டத்திற்கு வரத் தொடங்கினார்கள். அவர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளர் முரளி சங்கர், சமூக நீதிப்பேரவை கோபு, பொருளாளர் சையத் மன்சூர் உசேன் ஆகியோரை புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.
- அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களை குறி வைத்து அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
- ராஜேந்திரன் புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டிவனம்:
சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து சதாசிவம் எம். எல்.ஏ.நீக்கப்பட்டுள்ளார்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நீடிக்கிறது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் நீடித்து வருகிறது.
அடுத்ததாக கூட்டுகின்ற பொதுக்குழுவின்போது தான் வெற்றி பெறுவதுடன் தனது பக்கம் தனிப் பெரும்பான்மை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கையில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார்.
அதிலும் குறிப்பாக அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களை குறி வைத்து அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்த சதாசிவத்தை டாக்டர் ராமதாஸ் இன்று பதவியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு பதிலாக ராஜேந்திரனை புதிய மாவட்ட செயலாளராக நியமித்து உள்ளார்.
நீக்கப்பட்ட சதாசிவம் மேட்டூர் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. ஆவார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் பல்வேறு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபோது எந்த கூட்டத்திலும் சதாசிவம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- என் மீது கோபம் இருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று அன்புமணி கூறியிருந்தார்.
- ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்து வருகிறார்.
பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையே அதிகாரப் போட்டி நிலவி வரும் நிலையில், இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, இருவரையும் சமாதானம் செய்ய முயன்ற நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முயற்சி தோல்வியை சந்தித்தது.
இதை அடுத்து கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், என் மூச்சு உள்ள வரை நான் தான் பா.ம.க. தலைவர் என்றும், அன்புமணியை பார்த்தாலே ரத்தம் ஏறுகிறது என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து, பா.ம.க. பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், மருத்துவர் ஐயா அவர்கள் நீண்ட ஆயுளுடன், 100 ஆண்டுகளுக்கு மேல், மன நிம்மதியுடன், நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியோடு வாழவேண்டும். ஒரு மகனாக அது என்னுடைய கடைமையும் கூட. என் மீது கோபம் இருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்து வருகிறார். அந்த வகையில், அவர் இன்று செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் அப்போது இருவருக்குமான மோதல் முடிவுக்கு வரும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்துவிட்டார். தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ள ராமதாஸ், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் எம்.எல்.ஏ. அருள் ஆகியோரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
- இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து செல்வது கட்சிக்கு பலமாக இருக்கும்.
- நாங்களும் பேசி சுமூக தீர்வு ஏற்படும் என சொல்லி இருக்கிறோம்.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் ஆசை எல்லாம் ராமதாஸ்-அன்புமணி இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான். நேற்று அன்புமணி ராமதாஸ் சொல்லி இருக்கிறார். அதை நாங்கள் மறுக்கவில்லை, இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த சூழல் உருவாகும் என நினைக்கிறோம். இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து செல்வது கட்சிக்கு பலமாக இருக்கும். அதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் நேற்று பொதுவெளியில் அன்புமணி மன்னிப்பு கேட்டது குறித்து கேட்டபோது, இதற்கு மேல் நான் எதுவும் பேசக்கூடாது. இருவரும் பேசி அடுத்த கட்டத்துக்கு சென்றால் பலமாக இருக்கும். எங்கள் மன உளைச்சலுக்கு ஒரு தீர்வாக இருக்கும். நாங்களும் பேசி சுமூக தீர்வு ஏற்படும் என சொல்லி இருக்கிறோம். ஆனால் சுமூகத் தீர்வு எட்டவில்லை. எல்லோரும் பேசுவதை விட இருவரும் சேர்ந்து பேசி நல்ல முடிவு எடுப்பது தான் நல்லது. அவர்கள் அரசியல் விவரம் புரியாதவர்கள் அல்ல. இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுப்பது தான் நல்லது என்றார்.
- ஆலோசனையில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
- பா.ம.க. சார்பில் 3 முறை தேர்தலில் நின்றவர் முரளி சங்கர்.
திண்டிவனம்:
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. செயலாளர்கள், தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் பா.ம.க. பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணனை அப்பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பா.ம.க.வின் புதிய பொதுச்செயலாளராக முரளிசங்கர் என்பவர் நியமனம் செய்து அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவருக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
புதிதாக நியமிக்கப்பட்ட முரளி சங்கர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராமதாஸ் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
- பா.ம.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வு கவலை அளிக்கிறது.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகிறார். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவர்கள் அப்பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை நிருபர்களை சந்தித்த ராமதாஸ் 2026 தேர்தல் வரை நான் தான் தலைவராக இருப்பேன். அதன் பின்னர் அன்புமணி இருந்து கொள்ளட்டும் என்றார். இதற்கிடையே நேற்று முன்தினம் டாக்டர் ராமதாஸ் திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். என உயிர் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவராக இருப்பேன் என்றார். மேலும் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இது அன்புமணி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. செயலாளர்கள், தலைவர்களுடன் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதில் கலந்து கொள்ள வந்த பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2 நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை டாக்டர்கள் யாரும் வர மாட்டார்கள் என டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியதால் இன்று இங்கு வந்துள்ளேன்.
பா.ம.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வு கவலை அளிக்கிறது. ராமதாசும், அன்புமணியும் மனம் விட்டு பேசினால் சுமூக முடிவு எட்டப்படும். சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே எனது ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இது அன்புமணி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தற்போதைய பொதுச்செயலாளரை மாற்றி விட்டு புதிய பொதுச்செயலாளர் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவர்கள் அப்பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்த ராமதாஸ் 2026 தேர்தல் வரை நான் தான் தலைவராக இருப்பேன். அதன் பின்னர் அன்புமணி இருந்து கொள்ளட்டும் என்றார். இதற்கிடையே நேற்று டாக்டர் ராமதாஸ் திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். என் உயிர் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவராக இருப்பேன் என்றார். மேலும் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இது அன்புமணி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. செயலாளர்கள், தலைவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்த உள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் நாளை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தற்போதைய பொதுச்செயலாளரை மாற்றி விட்டு புதிய பொதுச்செயலாளர் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பா.ம.க.வை தொய்வின்றி நடத்த எனக்கு ஆதரவு உள்ளது.
- என் உத்தரவுபடி செயல் தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் எனக்கு மகிழ்ச்சி.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, 2026 தேர்தல் வரை நான்தான் தலைவராக இருப்பேன். அதன் பிறகு எல்லாம் அன்புமணிதான் என கூறினார்.
இந்த நிலையில் இன்று அவர் தைலாபுரம் தோட்டத்தில் திடீரென நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, என் மூச்சு உள்ளவரை நான்தான் தலைவராக இருப்பேன் என கூறினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-
அன்புமணியின் செயல்பாடுகளால் அவருக்கு தலைவர் பதவி வழங்க மாட்டேன். குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என கூறியதை காப்பாற்ற முடியவில்லை. பா.ம.க.வை தொய்வின்றி நடத்த எனக்கு ஆதரவு உள்ளது.
கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறியதால்தான் அன்புமணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பெற்றோரை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும். தாய்-தந்தையை மதிக்க வேண்டும். ஆனால், அன்புமணி மைக்கை தூக்கி வீசுவதும், தாயை பாட்டிலால் தாக்குவதும் போன்ற செயலில் ஈடுபட்டார்.
என் உத்தரவுபடி செயல் தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் எனக்கு மகிழ்ச்சி. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என கூறினால், அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார்.
2026 வரை நான் தலைவராக இருப்பேன் என நான் கூறியிருந்தேன். அந்த முடிவை மாற்றி கொள்கிறேன்.
அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் ஏறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- என்னை மார்பிலும், முதுகிலும் குத்துகின்றனர்.
- பா.ம.க. எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன்.
தைலாபுரம்:
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* 2026 தேர்தலுக்குப் பிறகு தலைவர் பொறுப்பை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரது செயல்பாடுகளை பார்க்கும் போது, என் மூச்சு அடங்கும் வரை தலைவராக தொடர்வேன்.
* பா.ம.க. தொண்டர்களில் 100-ல் 90 சதவீம் பேர் எனக்கு ஆதரவு தருகின்றனர்.
* நான் பிரசாரத்திற்கு போகும்போது 200 பேர் தான் கூட வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.
* குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறியிருந்தேன். ஆனால் அந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை.
* பிள்ளைகள் தங்களது தாய்- தந்தையை மதிக்க வேண்டும் என சொன்னால் கோபம் வருகிறது.
* நான் 100 ஆண்டுகள் வரை உயிருடன் இருப்பேன்.
* நான் தலைவராக இருப்பதில் அன்புமணிக்கு என்ன பிரச்சனை?
* என்னை மார்பிலும், முதுகிலும் குத்துகின்றனர்.
* பா.ம.க. எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன் என்றார்.






