என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர் கலந்து கொண்டனர்.
    • செயற்குழு கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் அன்புமணி ராமதாஸ் புகைப்படம் இடம்பெறவில்லை.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் பல்வேறு நிர்வாகிகளை புதிதாக நியமனம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிர்வாக குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிர்வாக குழு கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி போன்ற முக்கிய நிர்வாகிகள் மற்றும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 21 நிர்வாகக்குழு நிர்வாகிகளை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்தார். அதில் அன்புமணி ராமதாஸ் பெயர் இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு அன்புமணி ராமதாசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.



    அதன்படி இன்று காலை திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. மாநில செயற்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர் கலந்து கொண்டனர். அன்புமணி ராமதாஸ் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம்போல் புறக்கணித்துள்ளார்.

    இதனிடையே, ராமதாசின் மகளும், அன்புமணியின் சகோதரியுமான ஸ்ரீகாந்தி செயற்குழுவில் பங்கேற்றுள்ளார். அவர் நிர்வாகிகளுடன் மேடையில் அமர்ந்துள்ளார். அவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    மேலும் இந்த செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் செயற்குழு கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் அன்புமணி ராமதாஸ் புகைப்படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தனுக்கு பதவி அளித்தபோது ராமதாஸ்- அன்புமணி இடையே மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

    • புதிய நிர்வாக குழுவினருடன் பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.
    • ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பா.ம.க.வில் தலைமை நிர்வாகக்குழு செயல்பட்டு வந்தது. இந்த குழுவில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்த குழுவை கலைத்து புதிய குழுவை ராமதாஸ் உருவாக்கினார். அந்த புதிய பா.ம.க. நிர்வாக குழுவில் ஜி.கே.மணி, முரளி சங்கர், கரூர் பாஸ்கர், அருள், பரந்தாமன், சிவபிரகாசம், தீரன், புதா.அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நியமனம் செய்தார்.

    இந்த புதிய நிர்வாக குழுவினருடன் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் பா.ம.க.வின் நிர்வாக குழு கூட்டத்தில் மாநில செயற்குழு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வருகிற 8-ந்தேதி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • குழுவில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்து வந்தனர்.
    • புதிய நிர்வாக குழுவினருடன் பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் தலைமை நிர்வாகக்குழு செயல்பட்டு வந்தது. இந்த குழுவில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் தற்போது அந்த குழு கலைக்கப்பட்டுள்ளது. பின்னர் புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த புதிய பா.ம.க. நிர்வாக குழுவில் ஜி.கே.மணி, முரளி சங்கர், கரூர் பாஸ்கர், அருள், பரந்தாமன், சிவபிரகாசம், தீரன், புதா.அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த புதிய நிர்வாக குழுவினருடன் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இருவரும் மாறி மாறி பொறுப்புகளை நியமிப்பதால் எந்த தீர்வும் ஏற்படாது.
    • இருவரும் ஒன்று சேர்ந்தால் மற்ற கட்சிகளுக்கு பேச இடமில்லை.

    திண்டிவனம்:

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. புதிய தலைமை நிலைய குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தலைமை நிலைய குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொள்ள பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ம.க. வில் ஏற்பட்ட குழப்பதால் கட்சி பொறுப்பாளர்கள் முதல் தொண்டர்கள் வரை மனஉளைச்சலில் உள்ளோம். இது மாற வேண்டும். இருவரும் மாறி மாறி பேசினால் குழப்பம் தான் ஏற்படும். டாக்டர் ராமதாசும், அன்புமணியும் ஒரே இடத்தில் அமர்ந்து மனம் விட்டு பேசி தீர்வு காண வேண்டும்.

    இருவரும் மாறி மாறி பொறுப்புகளை நியமிப்பதால் எந்த தீர்வும் ஏற்படாது. பா.ம.க. பழைய நிலைக்கு வீறுகொண்டு எழவேண்டும். இருவரும் ஒன்று சேர்ந்தால் மற்ற கட்சிகளுக்கு பேச இடமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாரிமுத்து தற்போது, விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் ஓடும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
    • மாரிமுத்துவின் உறவினர்கள் டாக்டர்களிடம் நியாயம் கேட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லத்தம்பி மகன் மாரிமுத்து (வயது 46). இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மாரிமுத்து தற்போது, விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் ஓடும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக வலது காலில் அதிக வீக்கம் ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

    கடந்த 30-ந்தேதி சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்ததில் வலது காலில் 2 இடங்களில் ஜவ்வு கிழிந்த நிலையில் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி நேற்று காலை 8 மணியளவில் மாரிமுத்துவுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு டாக்டர்கள் அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் அவர் பகல் 12.45 மணிக்கு வார்டுக்கு கொண்டு வரப்பட்டார்.

    சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து மாரிமுத்து கண்விழித்து பார்த்தார். அப்போது அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்து கட்டுப் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னுடைய வலது காலுக்கு பதிலாக ஏன் இடது காலில் மாற்றி அறுவை சிகிச்சை செய்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு டாக்டர்கள், செய்வதறியாது திகைத்து நின்றனர்.

    மாரிமுத்துவின் உறவினர்கள் டாக்டர்களிடம் நியாயம் கேட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். அதற்கு வருத்தம் தெரிவித்த டாக்டர்கள், தாங்கள் தவறு செய்துவிட்டதாக கூறியதுடன் 10 நாளில் குணமாகி விடும், வருகிற திங்கட்கிழமையன்று வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதாக கூறியுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளாத மாரிமுத்துவின் குடும்பத்தினர் டாக்டர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    • பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த தகவல் வேதனை அளிக்கிறது.
    • பட்டாசு ஆலைகளுக்கு அரசு அனுமதி வழங்குவதில் கடுமையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் நிறுவன தலைவர் ராமதாசுக்கும், அவரது அன்புமணிக்கு இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இருவரிடமும் கட்சி நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அன்புமணி பா.ம.க. சமூக ஊடக பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசும் போது பா.ம.க.வில் முழு அதிகாரம் எனக்கே உள்ளது. டாக்டர் ராமதாஸ் குழந்தை போல் மாறிவிட்டார். அவரை யாரும் விமர்ச்சிகாதீர்கள் என கூறியிருந்தார்.

    இந்த நிலையில் சேலம் மாநகர மாவட்ட பா.ம.க. செயலாளராக இருந்த அருள் எம்.எல்.ஏ.வை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து நீக்கி அன்புமணி உத்தரவிட்டார்.

    இதற்கு அருள் எம்.எல்.ஏ. பதிலடி கொடுத்துள்ளார். என்னை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு கிடையாது. ராமதாசின் நியமனம் மட்டுமே பா.ம.க. வில் செல்லும் என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கிலத் திறனை வளர்க்க தமிழக அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தை வரவேற்கிறேன். இது பாராட்டுக்குரியது. இதனை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

    டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் உரத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இது அபாயகரமானது. இதனை அரசு கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருட்டு புகாரில் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நகை திருட்டு புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இளைஞரை அடித்து கொலை செய்த போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள். அவர்களை எய்தவர்களை கண்டுபிடித்து விட்டார்களா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி உத்தரவின் பேரில் இளைஞரின் வாழ்க்கை முடிந்துள்ளது. அப்படியானால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை என்ன?

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த தகவல் வேதனை அளிக்கிறது. பட்டாசு ஆலைகளுக்கு அரசு அனுமதி வழங்குவதில் கடுமையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் சாலை பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. இது விபத்துகளுக்கு வழிவகுக்கும். தலைநகர் சென்னை மோசமான சாலைகள் கொண்டுள்ளது. மெட்ரோ ரெயில் மற்றும் மேம்பால பணிகளால் நெடுஞ்சாலைகள் அனைத்தும் தனது அடையாளங்களை இழந்துள்ளது.

    தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது குறித்து பொதுக்குழு, செயற்குழு, நிர்வாக குழு தான் முடிவு எடுக்கும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள ரெயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

    பா.ம.க. எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அன்புமணிக்கு அதிகாரம் கிடையாது. சட்டமன்ற கொறடாவான அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றால், ஜி.கே.மணி மூலம் சபாநாயகர்களிடம் தகவல் தெரிவித்து பின்னர் என்னுடைய அனுமதியுடன் தான் நீக்க முடியும். பா.ம.க. நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. அருளுக்கு உயர்மட்ட குழு உறுப்பினர், இணை பொதுச்செயலாளர் பதவி வழங்கியுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் அன்புமணி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம். அதற்கு என்னிடம் பதில் இல்லை என்றார்.

    • அருளுக்கு பா.ம.க.வின் இணை பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையுமா என்பதை செயற்குழு, பொதுக்குழுதான் முடிவு செய்யும்.

    தைலாபுரம்:

    பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே அதிகாரம் தொடர்பான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் நிர்வாகிகள் யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே, ராமதாசுக்கு ஆதரவாக பேசிய அருள் எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்குவதாக நேற்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்,

    * பா.ம.க.வில் யாரையும் நீக்கும் அதிகாரம் எனக்கே உள்ளது.

    * எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை.

    * எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும்.

    * அருளுக்கு பா.ம.க.வின் இணை பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    * தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையுமா என்பதை செயற்குழு, பொதுக்குழுதான் முடிவு செய்யும் என்றார். 

    • குடிப்பழக்கம் உள்ள ராமச்சந்திரன் கடந்த ஒரு மாதமாக விடுமுறையில் இருந்து வந்தாராம்.
    • அக்காள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் உள்ள மரத்தில் ராமச்சந்திரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    செஞ்சி:

    விழுப்புரம் அடுத்த வி. கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் ராமச்சந்திரன் (வயது 37). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆயுதப்படை பிரிவில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கும் செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பெனித்தா (வயது 33) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 3 குழந்தைகள் உள்ளனர். பெனித்தா செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருவதால் அவர்கள் கிருஷ்ணா புரத்தி லேயே குடும்பம் நடத்தி வந்தனர். குடிப்பழக்கம் உள்ள ராமச்சந்திரன் கடந்த ஒரு மாதமாக விடுமுறையில் இருந்து வந்தாராம்.

    இந்நிலையில் இன்று பணிக்கு திரும்புவதற்காக நேற்று இரவு வீட்டிற்கு வந்தவர் வீட்டில் இருந்து பக்கத்து தெருவில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். இந்நிலையில் இன்று அதிகாலையில் அவர் அக்காள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் உள்ள முருங்கை மரத்தில் ராமச்சந்திரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து செஞ்சி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அரி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். செஞ்சி டி.எஸ்.பி. மனோகரன் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தைலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இன்று மாலை 3 மணி அளவில் வானூர் அருகே மொரட்டாண்டியில் வானூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது.

    திண்டிவனம்:

    பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் கருத்து மோதல் நிலை வருகிறது. இந்த நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதேபோல டாக்டர் ராமதாஸ் மீதும் அன்புமணி ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.

    இரு தரப்பினரும் மாறி மாறி தனது ஆதரவாளர்களுடன் பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகின்றனர் .மேலும் இருவரும் பல்வேறு நிர்வாகிகளை நியமனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதேபோல அன்புமணி ராமதாஸ் ஆதரவாளரான புதியதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ்-ல் நியமிக்கப்பட்ட விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

    அதேபோல இன்று மாலை 3 மணி அளவில் வானூர் அருகே மொரட்டாண்டியில் வானூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் தைலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் வருகிற 10-ந்தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்கிறார். அன்று மாலை 4 மணியளவில் பூம்புகார் சென்று ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி பூம்புகாரில் நடைபெறும் மகளிர் மாநாட்டு திடலை பார்வையிடுகிறார். அன்று மாலை 6 மணியளவில் மயிலாடுதுறையில் நடைபெறும் மாவட்ட பொதுக்குழுவில் கலந்து கொள்ள உள்ளார்.

    போட்டி பொதுக்குழுக்கள் நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் டாக்டர் ராமதாஸ் நேரடியாக கலந்து கொள்ளும் முதல் பொதுக்குழுவாக கும்பகோணம் பொதுக்குழு நடைபெற உள்ளது. இது பாட்டாளி மக்கள் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பா.ம.க.வில் குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
    • ராமதாஸ், அன்புமணி இடையிலான பிரச்சனையை சரி செய்ய நான் யார்?

    திண்டிவனம்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார். அவர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை செல்வபெருந்தகை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது டாக்டர் ராமதாஸ் உடன் இருந்தார். இந்த நிலையில் செல்வபெருந்தகை டாக்டர் ராமதாசை சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராமதாசுடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறுகையில்,

    * ராமதாசுடனான சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு.

    * சந்திப்பில் கூட்டணியும் இல்லை, அரசியலும் இல்லை.

    * கூட்டணியில் பா.ம.க. இணைவது தொடர்பாக தி.மு.க. தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.

    * பா.ம.க.வில் குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    * பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு பா.ஜ.க.வே காரணம்.

    * எங்கெல்லாம் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளதோ, அந்த கட்சிகளை உடைத்து விடுவர், அதுதான் வாடிக்கை.

    * அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தையும் பா.ஜ.க. விரைவில் சுவாகா செய்துவிடும்.

    * ராமதாஸ், அன்புமணி இடையிலான பிரச்சனையை சரி செய்ய நான் யார்?

    * தமிழ்நாட்டிற்கு தேவையான முடிவை ராமதாஸ் எடுப்பார் என்றார். 

    • பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு தி.மு.க. காரணம் என அன்புமணி கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு, ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார்.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சிகள் நடைபெற்றது. இருப்பினும் அம்முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

    இதனை தொடர்ந்து, மூச்சு உள்ளவரை தான் என் பா.ம.க. தலைவர் என்றும், அன்புமணி செயல்தலைவர் என்றும் ராமதாஸ் கூறி வருகிறார். அன்புமணி தலைவரான பிறகு அனைவரையும் அனுசரித்து செல்லவில்லை என ராமதாஸ் குற்றம் சாட்டி இருந்தார். மேலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டப்படும். கூட்டணி குறித்து பொதுக்குழுவில் தான் முடிவெடுக்கப்படும் என்று நேற்று ராமதாஸ் தெரிவித்தார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாம் என தெரிவித்த போதிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து அன்புமணி போட்டியிட்டார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருந்தார்.

    மேலும் நேற்று ராமதாஸ் அளித்த பேட்டியில், கலைஞர் பாணியில் என் மூச்சு இருக்கும் வரை நான் தான் பா.ம.க.விற்கு தலைவர், அன்புமணி செயல்தலைவர் தான். கலைஞர் தி.மு.க. தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் எந்த முணுமுணுப்பையும் செய்யவில்லை என்று கூறியிருந்தார். பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு தி.மு.க. காரணம் என அன்புமணி கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு, ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார்.

    ராமதாசின் நகர்வுகளை உற்றுநோக்கும் அரசியல் நோக்கர்கள் சந்திப்பு தி.மு.க.வுடன் கூட்டணிக்கு அச்சாரமா? என வினவி வருகின்றனர்.



    இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தோட்டத்தில் பா.ம.க. நிறுவனரான ராமதாஸை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி வருகிறார்.

    தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை இணைப்பது தொடர்பாக ராமதாசும், செல்வப்பெருந்தகையும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பதவி சுகத்தை நான் விரும்பி இருந்தால் எந்த பதவிக்கு வேண்டுமானாலும் சென்றிருப்பேன்.
    • எல்லா பொறுப்புகளுக்கும் முக்கிய பொறுப்பு செயல் தலைவர் பொறுப்பு தான்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. ஆனால் அந்த முடிவு இன்னும் வரவில்லை.பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பா.ம.க. விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்கிறது.

    என்னால் தொடங்கப்பட்ட பா.ம.க. வளர்த்தது நான் தான். என் மூச்சு இருக்கும் வரை தலைவராக செயல்படுவேன். நிர்வாகிளுக்கு நான் வழங்கிய பொறுப்பு தான் நிரந்தர பொறுப்பு. பா.ம.க. இணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அருள் தொடர்ந்து மாவட்ட செயலாளராவும் செயல்படுவார். 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தேன். அந்த கட்சிக்கு நான் தலைவராக செயல்பட கூடாதா?

    கருணாநிதி பாணியில் பா.ம.க.வின் தலைவராக நான் தான் இருப்பேன். ஸ்டாலின் பாணியில் அன்புமணி செயல்தலைவராக இருக்கட்டும். கருணாநிதி தி.மு.க. தலைவராக இருந்தபோது ஸ்டாலின் எந்த முணுமுணுப்பையும் செய்யவில்லை. என் மனசாட்சி நீ மூச்சு இருக்கும் வரை தலைவராக இரு என கூறியது.

    மனசாட்சி சொன்னதால் மூச்சு உள்ளவரை நானே தலைவராக செயல்படுவேன். எனக்கு பிறகு அவர் தானே தலைவராக இருக்க போகிறார். எல்லா பொறுப்புகளுக்கும் முக்கிய பொறுப்பு செயல் தலைவர் பொறுப்பு தான். நான் நாகரீகமாக, நளினமாக இருக்க கற்றுக்கொண்டது கருணாநிதியிடம் தான். பல்வேறு கட்டங்களில் பல்வேறு சோதனைகளை எல்லாம் கடந்து நாகரீகமாக நளினமாக நான் கற்று கொண்டிருக்கிறேன். இந்த கட்சியை கொண்டு வர என்னை போல் இந்தியாவிலே எந்த தலைவரும் பாடுபட்டு இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நான் பாடுபட்டு இருக்கிறேன்.

    பதவி சுகத்தை நான் விரும்பி இருந்தால் எந்த பதவிக்கு வேண்டுமானலும் சென்றிருப்பேன். 4,5 பிரதமரிடம் நான் பழகியிருக்கிறேன். அரசு கட்டிலுக்கு நான் போகமாட்டேன். சுயம்புவாக இருந்து தனிமனிதனாக இந்த கட்சியை நான் உருவாக்கினேன். இப்போது எனக்கு மனசு சொல்கிறது. அதனால் தான் தலைவர் பதவியில் நீடிக்க விரும்புகிறேன். குடிக்கிறவனுக்கு 2 வருடம் தண்டனை என்றால் சாராயம் விக்கிறவர்களுக்கு 4 வருடம் தண்டனை தர வேண்டும்.

    எந்த போஸ்டர்களையும் கிழிப்பது நாகரிகமான செயல் அல்ல. தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. பேனர்கள் கிழிக்கப்பட்டது சில விஷமிகள் செயல். கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தலைவர்களை கொச்சப்படுத்தக்கூடாது. மதுரை முருகர் பக்தர் மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு விடுவில்லை. மதுரை முருகர் பக்தர் மாநாட்டில் பெரியாரையும் அண்ணாவையும் விமர்சித்திருப்பது வருத்தத்துக்குரியது.

    என்னோடு தொடக்கத்தில் இருந்து பயணித்தவர்கள் தான் பதவி கொடுத்திருக்கிறேன். பா.ம.க.வில் பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. செயல்தலைவர் என்பது சிறந்த பொறுப்பு. அதனை அன்புமணி ஏற்க மறுக்கிறார். எனது 60-வது மணிவிழாவிற்கு அன்புமணி வராதது வருத்தமான மனநிலையை ஏற்படுத்தியது.

    தேர்தல் நேரத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டப்படும். அப்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

    உங்களது 60-வது மணிவிழாவிற்கு அன்புமணி வராதது குறித்த கேள்வி கேட்ட போது டாக்டர் ராமதாஸ் கண்கலங்கினார்.

    ×