என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அன்புமணி சுற்றுப்பயணத்தை காவல்துறை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்
- அரியலூர் சோழகங்கம் ஏரி சீரமைப்பு பணிக்கு ரூ.19.25 கோடி ஒதுக்கிய முதலமைச்சருக்கு வாழ்த்துகள்.
- பனையூரில் பா.ம.க. தலைமையகம் இருப்பதாக கூறுவது சட்டவிரோதம்.
விழுப்புரம்:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி சோழமன்னர்களின் வாரிசுகளை பெருமைப்படுத்த வேண்டும்.
* அரியலூர் சோழகங்கம் ஏரி சீரமைப்பு பணிக்கு ரூ.19.25 கோடி ஒதுக்கிய முதலமைச்சருக்கு வாழ்த்துகள்.
* பனையூரில் பா.ம.க. தலைமையகம் இருப்பதாக கூறுவது சட்டவிரோதம்.
* செயல்தலைவராக இருந்தும் நடைபயணத்திற்காக என்னிடம் அனுமதி வாங்கவில்லை. அதனால்
அன்புமணி சுற்றுப்பயணத்தை காவல்துறை தடை செய்ய வேண்டும்.
* அன்புமணி சுற்றுப்பயணத்தால் வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.
Next Story






