என் மலர்
விழுப்புரம்
- செஞ்சி பேரூ ராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார்.
- முடிவில் உதவி தலைமை ஆசிரி யர் செந்தில்குமார் நன்றி கூறினார்
விழுப்புரம்:
செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2 கோடியே 56 லட்சம் மதிப்பில் 12 வகுப்பறைகள் கொண்ட கூடுதல்பள்ளி கட்டிடம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூ ராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றிய குழு தலை வர் விஜயகுமார் முன்னி லை வகித்தார். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பரிதி, கணேசன், பிரவீன் குமார், பேரூராட்சி செயல் அலு வலர் செந்தில்குமார், துணை தலைவர் ராஜ லட்சுமி செயல்மணி, நகர செயலாளர் கார்த்திக் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திலகவதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில் உதவி தலைமை ஆசிரி யர் செந்தில்குமார் நன்றி கூறினார்
- அப்பாவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தபோது விஷப்பாம்பு கடித்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம்:
செஞ்சி அருகே உள்ள செம்மேடு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு (வயது 73). இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தபோது விஷப்பாம்பு கடித்தது. இதில் அப்பாவு சம்பவ இடத்திலேயே இறந்தார்். இது குறித்து அவரது மகன் அஜித் குமார் கொடுத்த புகாரின் பேரில் நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார்.
- கவிதா கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் 1-ல் முத்துகிருஷ்ணன் முதல் தெருவில் வசித்து வந்தவர் கவிதா (வயது 47). வளையல் வியாபாரம் செய்து வந்தார். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு உதவியாக இளையமகள் அவரது வீட்டில் தங்கியுள்ளார். கணவனை இழந்த கவிதா 2 பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கு, கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்தார். கடனை கொடுத்தவர்கள் கவிதாவிடம் பணத்தை திருப்பி கேட்டனர். கடனை திருப்பி அளிக்க முடியாத கவிதா கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் சென்றவர் திரும்ப வெளியில் வரவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் இவரை தேடி நேற்று மதியம் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டிலிருந்த மின் விசிறியில் புடவையினால் தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கினார். இது குறித்த தகவலின் படி திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
- வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காள பர மேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் செலுத்தப்படும் காணிக்கைகளை ஒவ் வொரு மாதமும் திறந்து எண்ணப்படும். அதன்படி நேற்று இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவா னந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், ஆய்வர் சங்கீதா, அறங்கா வலர் குழு தலைவர் செந்தில்குமார் பூசாரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
இதில் 94 லட்சத்து 42 ஆயிரத்து 622 ரூபாய் ரொக்கமும், 315 கிராம் தங்க நகைகளும், 1,110 கிராம் வெள்ளிப் பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்த பணியின்போது அறங்காவலர்கள் பூசாரிகள் தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், வடி வேல், சந்தானம் மற்றும் கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழி யர்கள், ஆகியோர் உடனி ருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.
- திட்டங்கள் குறித்து புகைப்ப டங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.
- இதனை கொட்டாம்பூண்டி ஊராட்சியினை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வை யிட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், கொட்டாம்பூண்டி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு த்துறை சார்பில் புகைப்ப டக்கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் தமி ழ்நாடு முதல்-அமைச்சரால் நடைமுறைப்படுத்திய திட்டங்கள் குறித்து புகைப்ப டங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.
குறிப்பாக "மக்களை தேடி மருத்துவம்", "இல்லம் தேடிக் கல்வித்திட்டம்", "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்", "புதுமைப்பெண் திட்டம்", "கள ஆய்வில் முதல்-அமைச்சர்" திட்டம், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்ட ங்கள், அமைப்பு சாரா தொழிலாள ர்களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு முதல் -அமைச்சரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதனை கொட்டாம்பூண்டி ஊராட்சியினை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வை யிட்டனர்.
- கடந்த 22-ந் தேதி மர்மநபர்கள் சேதப்படுத்தி, பா.ஜ.க. கொடியை கிழித்தெறிந்தனர்.
- 30-ந்தேதி போராட்டம் நடத்த ப்படுமென நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அடு த்த கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகில் பா.ஜ.க. கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கொடிக்கம்பத்தை கடந்த 22-ந் தேதி மர்மநபர்கள் சேதப்படுத்தி, பா.ஜ.க. கொடியை கிழித்தெறிந்தனர். மரக்காணம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ஞானசேகரன் தலைமையி லான நிர்வாகிகள் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பா.ஜ.க. கொடிக்கம்பம் மற்றும் கொடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடு க்க வேண்டுமென புகாரளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து வருகிற 30-ந்தேதி போராட்டம் நடத்த ப்படுமென நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
- முதிர்வடைந்து அந்த வங்கியின் மூலம் 23 ஆயிரத்து 645 ரூபாய்க்கான காசோலை தபால் மூலம் அனுப்பி உள்ளனர்.
- உங்கள் அனைத்து ஆவணங்களையும் ஏ.டி.எம்.கார்டையும் எடுத்து வரச்சொல்லி இருக்கிறார்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே சிறுதலைப் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 50) விவசாயி. இவர் தன் மனைவி சாரதா பெயரில் தனியார் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் கட்டி உள்ளார். இது 6.7.2018 அன்று முதிர்வடைந்து அந்த வங்கியின் மூலம் 23 ஆயிரத்து 645 ரூபாய்க்கான காசோலை தபால் மூலம் அனுப்பி உள்ளனர். இதை தெரிந்து தெரிந்து கொண்ட சிறுதலைப் பூண்டி தபால்காரர் விஜயன், அதை அபகரிக்க நினைத்து சென்னைக்கு சென்றிருந்த தேவராஜை போன் மூலம் தொடர்பு கொண்டு மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் கியாஸ் வந்துள்ளதால் உங்கள் அனைத்து ஆவணங்களையும் ஏ.டி.எம்.கார்டையும் எடுத்து வரச்சொல்லி இருக்கிறார்.
இதை நம்பிய தேவராஜ் தன் மனைவி சாரதா மூலம் அனைத்தையும் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்.பின்பு ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி 23 ஆயிரத்து 645 ரூபாயையும் விஜயன் எடுத்துவிட்டார். இது குறித்து தேவராஜ் பலமுறை கேட்டும் விஜயன் தரமறுத்திருக்கிறார். இதுகுறித்து தேவராஜ் வளத்தி போலீஸ் நிலையத்தில் தபால்காரர் விஜயன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து கபடி வீரர்களுடன் கபடி விளையாடினார்.
விழுப்புரம்:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
விழாவிற்கு விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து கபடி வீரர்களுடன் கபடி விளையாடினார்.
இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- தென்நெற்குணம் பகுதி யைச் சேர்ந்த சேகர்திண்டிவனம் நோக்கி அதே வழியாக வந்து கொண்டிருந்தார்.
- இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே எண்டியூர் பகுதியை சேர்ந்த வர் அய்யனார் (வய32) இவரது நண்பர் லோகப்பி ரியன் (29) இவர்கள்2 பேரும் மோட்டார் சைக்கி ளில் எண்டியூர் கிரா மத்தில் இருந்து திண்டி வனம் நோக்கி வந்து கொண்டி ருந்தனர். அதே போல் தென்நெற்குணம் பகுதி யைச் சேர்ந்த சேகர் (60) திண்டிவனம் நோக்கி அதே வழியாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது திண்டி வனத்தில் இருந்து மரக்கா ணம் சென்ற கார் இவர்கள் 3 பேர் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.விபத்து ஏற்படுத்தி விட்டு டிரைவர் காரை ரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி சென்று விட்டார்.
இதில் அய்யனார் மற்றும் லோகப்பிரியன் ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டு மேல் சிகிச்சைக் காக முண்டியம்பாக்கம் மருத்துவ மனை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சேகர் திண்டிவனம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்களிடம் பிரம்ம தேசம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்த பகுதியில் அதிக அளவில் கிரஷர்கள் உள்ளதால் லோடு லாரிகளும் மற்றும் டீசல் எடுத்துக்கொண்டு கார்களும் அதிக வேகமாக சென்று வருகிறது. இதனால் விபத்து நடந்த பகுதியில் ஹமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் . இந்த பகுதியில் சாலை அகலப் படுத்தும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. உடனடியாக சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விபத்து ஏற்படுத்திய காரை அங்கிருந்து எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- நேற்று பகலில் இவரது வீட்டு பின்பக்கத் தோட்டத்தில் மலைப்பாம்பு வந்ததை கண்டு அலறியடித்து ஓடி வந்தார்
- சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து செஞ்சி காப்பு காட்டில் விட்டனர்.
விழுப்புரம்:
செஞ்சியை அடுத்த சின்ன பொன்னம்பூண்டி யை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. நேற்று பகலில் இவரது வீட்டு பின்பக்கத் தோட்டத்தில் மலைப்பாம்பு வந்ததை கண்டு அலறியடித்து ஓடி வந்தார். அதை பொதுமக்களுக்கு தெரிவிக்க பொதுமக்கள் செஞ்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து சென்று ராமசாமி யின் வீட்டுத் தோட்டத்தில் இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து செஞ்சி காப்பு காட்டில் விட்டனர்.
- ஸ்ரீராம் கடந்த 23-ந்தேதி துலக்கம்பட்டில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
விழுப்புரம்:
உளுந்தூர்பேட்ட வட்டம் கீழ்குப்பம்வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் ஸ்ரீராம் (வயது 15). அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 23-ந்தேதி துலக்கம்பட்டில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு இரவு படுத்து உறங்கியபோது, ஸ்ரீராமை பாம்பு கடித்துள்ளது. இதில் அலறி துடித்த மாணவனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவன் ஸ்ரீராம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். பாம்பு கடித்து மாணவன் பலியான சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்து அட்டகாசத்தில் ஈடுபடுவதாக ரோஷனை இன்ஸ்பெக்டர் அன்னகொடிக்கு தகவல் வந்தது.
- உறுதி மொழி எடுக்கச் சொல்லி இன்ஸ்பெக்டர் நூதன முறையில் தண்டனை வழங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திண்டி வனம் மேல் பேட்டை பகுதியில் இருந்து திண்டி வனத்திற்கு அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்து அட்டகா சத்தில் ஈடுபடுவதாக ரோஷ னை இன்ஸ்பெக்டர் அன்ன கொடிக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு சென்ற ரோசனை இன்ஸ்பெக்டர் படிக்கட்டில் தொங்கிகொண்டு வந்த மாணவர்களை கீழே இறங்க சொல்லி இனி நாங்கள் படிக்கட்டில் தொங்க மாட்டோம் எனவும், படிக் கட்டில் தொங்கி அட்டகா சத்தில் ஈடுபட மாட்டோம் என உறுதி மொழி எடுக்கச் சொல்லி இன்ஸ்பெக்டர் நூதன முறையில் தண்டனை வழங்கினார். இனி இது போல் ெதாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.






