search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே கார் மோதி 3 பேர் படுகாயம்: பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயற்சி
    X

    விபத்து ஏற்படுத்திய காரை படத்தில் காணலாம்.

    திண்டிவனம் அருகே கார் மோதி 3 பேர் படுகாயம்: பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயற்சி

    • தென்நெற்குணம் பகுதி யைச் சேர்ந்த சேகர்திண்டிவனம் நோக்கி அதே வழியாக வந்து கொண்டிருந்தார்.
    • இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே எண்டியூர் பகுதியை சேர்ந்த வர் அய்யனார் (வய32) இவரது நண்பர் லோகப்பி ரியன் (29) இவர்கள்2 பேரும் மோட்டார் சைக்கி ளில் எண்டியூர் கிரா மத்தில் இருந்து திண்டி வனம் நோக்கி வந்து கொண்டி ருந்தனர். அதே போல் தென்நெற்குணம் பகுதி யைச் சேர்ந்த சேகர் (60) திண்டிவனம் நோக்கி அதே வழியாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது திண்டி வனத்தில் இருந்து மரக்கா ணம் சென்ற கார் இவர்கள் 3 பேர் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.விபத்து ஏற்படுத்தி விட்டு டிரைவர் காரை ரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி சென்று விட்டார்.

    இதில் அய்யனார் மற்றும் லோகப்பிரியன் ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டு மேல் சிகிச்சைக் காக முண்டியம்பாக்கம் மருத்துவ மனை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சேகர் திண்டிவனம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்களிடம் பிரம்ம தேசம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்த பகுதியில் அதிக அளவில் கிரஷர்கள் உள்ளதால் லோடு லாரிகளும் மற்றும் டீசல் எடுத்துக்கொண்டு கார்களும் அதிக வேகமாக சென்று வருகிறது. இதனால் விபத்து நடந்த பகுதியில் ஹமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் . இந்த பகுதியில் சாலை அகலப் படுத்தும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. உடனடியாக சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விபத்து ஏற்படுத்திய காரை அங்கிருந்து எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×