என் மலர்tooltip icon

    வேலூர்

    • புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர்:

    புரட்டாசி மாதத்தின் 2-ம் சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு திருமஞ்சன அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாள் கோவில், காட்பாடி சாலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாள், மெயின் பஜாரில் உள்ள வெங்கடேச பெருமாள், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டிருந்தன.

    குடியாத்தத்தை அடுத்த மீனூர்மலை வெங்கடேச பெருமாள் கோவிலில் ராஜ அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சி யளித்தார் அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    குடியாத்தம் பிச்சனூர் தென்திருப்பதி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ரங்கநாதர், பத்மாவதி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலிலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கீழ்அரசம்பட்டு அருகே உள்ள சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அதிகாலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    பெரு மாளுக்கு மலர்களாலும், வெள்ளி கவசத்தாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    • சிறுநீரகம் செயல் இழந்து, மூச்சடைப்பு ஏற்பட்டது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    தர்மபுரி மாவட்டம், கொங்கராம்பட்டி யை சேர்ந்தவர் ரவி (வயது 39). இவர் கடந்த 2022 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை வழக்கில் பொம்மிடி போலீசார் ரவியை கைது செய்தனர்.

    வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கடந்த ஒரு ஆண்டாக ஜெயிலில் உள்ள ரவிக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீரகம் செயல் இழந்தது.

    சிறுநீரகம் செயல் இழப்பிற்கு ரவி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரவிக்கு மூச்சடைப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ரவியை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.1.40 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    தமிழ்நாட்டில் நிலவும் வேளாண்மை தொழிலாளர் பற்றாக்குறையை போக்கவும், குறித்த நேரத்தில் குறைந்த செலவில் வேளாண் பணிகளை தொடங்கவும், பயிர் பாதுகாப்பு பணி களை மேற்கொள்ளவும், அறுவடை பணிகளை மேற்கொள்ளவும், தமிழ்நாடு அரசு வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நவீன வேளாண் எந்திரங்களான டிராக்டர்,பவர் டில்லர், நாற்று நடும் எந்திரம், களையெடுக்கும் எந்திரம், அறுவடை எந்திரம்உ ள்ளிட்ட எந்திரங்களும், கல்டி வேட்டர், ரோட்ட வேட்டர், வைக்கோல் கட்டும் எந்திரம் உள்ளிட்ட இணைப்பு கருவிகளும் மானிய விலையில் வழங்கப்ப டுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டில், 2022-23 ஆண்டு 2-ம் தவணை நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.206 கோடி மதிப்பிலான 60 வேளாண் எந்திரங்கள் ரூ.84.55 லட்சம் மானியத்தில் விவசாயி களுக்கு வழங்கப்ப ட்டுள்ளது.

    மேலும், 2023-24-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு

    முதல்-அமைச்சர் அறிவுரையின்படி தமிழ்நாடு முழுவதும் 5000 பவர்டில்லர், பவர் வீடர் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.57 கோடி மதிப்பிலான 62 பவர் டில்லர் மற்றும் 11 களையெடுக்கும் கருவிகள் ரூ.55.81 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் இதுவரை வேலூர் மாவட்டதில் விவசாயிகளுக்கு ரூ.3.63 கோடி மதிப்பிலான 133 வேளாண் இயந்திரங்கள் ரூ.1.40 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.

    • கலெக்டர் தகவல்
    • அக்டோபர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    வேலுார்:

    தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்க ளில், வெடிப்பொருட்கள் விதிகள் 2008-ன் கீழ், வேலுார் மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையா ளர்கள் மற்றும் வணிகர்கள், தற்காலிக உரிமம் பெற கீழ்வரும் ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பத்தோடு, கடை அமைவிடத்துக்கான சாலை வசதி, கட்ட டத்துக்கான வரைபடம் (சொந்த இடமாக இருப்பின், பத்திர ஆவண நகல், வாடகை கட்டடமாக இருப்பின் ஒப்பந்த ப்பத்திரம்), உரிமத்துக்கான கட்டணம் செலுத்தி யதற்கான அசல் சலான், மனுதாரர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து, அக்டோபர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    கடைசி தேதிக்கு பின்னர் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்புக் காட்டில் விடப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த எல்லப்பன்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் அருகே நேற்று இரவு சுமார் 15 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வர காலதாமதம் ஆனதால் அப்பகுதி இளைஞர்களே அந்த மலை பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    இதனை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் அருகே உள்ள காப்புக் காட்டில் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர்.

    • வனத்துறையினர் நடவடிக்கை
    • மருந்து சீட்டு மூலம் கண்டுபிடித்தனர்

    வேலூர்:

    பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக- ஆந்திரா எல்லையான பத்தலப்பல்லி வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு காலாவ தியான மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து சமூக வலைத ளங்களில் வைரலானது.

    தகவலறிந்த வேலுார் மாவட்ட வன அதிகாரி கலாநிதி உனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

    அதன்பேரில் பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ் குமார் தலைமையில் வனவர் இளையராஜா, வனகாப்பாளர்கள் அரவிந்தசாமி, சிவன் ஆகியோர் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட வனப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர்.

    மருத்துவ கழிவுகளில் இருந்த மருந்து சீட்டு கண்டெடுக்கப்பட்டு, அதில் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு வனத்துறையினர், நைசாக பேசி அந்த நபரை பேரணாம்பட்டு வனச்சரக அலுவலகத்துக்கு வரவழைத்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். அருகே உள்ள கோரமண்டல் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் ராஜேந்திர பிரசாத் (வயது 48) என்றும் 5 நாட்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து பத்த லப்பல்லி வனப்பகுதியில் கொட்டி விட்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து ராஜேந்திர பிரசாத்தை வனத்து றையினர் கைது செய்து செய்தனர்.

    • 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், கடும் மோதல் ஏற்பட்டது.
    • மோதலில் கவுன்சிலர் சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுதாகர். இவர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவருக்கும் 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் முருகன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில், சுதாகர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனது ஓட்டலில் நின்று கொண்டிருந்தார். அப்போது முருகன் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு வந்து சுதாகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், கடும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது 2 தரப்பினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கும், இங்கும் தெறித்து ஓடினர்.

    2 தரப்பினரும் பயங்கர சத்தத்துடன் மோதி கொண்ட சம்பவத்தால், அந்த இடம் பரபரப்பாக காட்சியளித்தது.

    இந்த மோதலில் கவுன்சிலர் சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர் உடனே அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதேபோல காயமடைந்த முருகனும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலுார் வடக்கு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தி.மு.க. கவுன்சிலர்கள் மோதிக்கொண்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
    • சமுதாய வளைகாப்பு விழா நடந்தது

    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டவுன்ஹாலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சுமார் 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. மேலும் அவர்களுக்கு அரசு சார்பில் சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    அனைவரும் சுகாதாரத்தை பேண வேண்டும். பெண்களை சமமாக நடத்த வேண்டுமென்ற நோக்கில் இது போன்ற சமுதாய வளைகாப்புகள் நடத்தப்படுகிறது.

    கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். அப்போதுதான் சத்தான குழந்தைகள் பிறக்கும்.

    பொதுவாகவே பெண்கள் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். பெண்களால் மட்டும் தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.

    சத்தான நல்ல மூளை வளர்ச்சியுடன் பிறக்கும் குழந்தைகள் தான் நம் நாட்டின் எதிர்காலம். குழந்தைகளுக்கு சத்தான உணவை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வண்ணம் தீட்டும் பணியில் கைவினை கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்
    • களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது

    வேலுார்:

    நவராத்திரி பண்டிகை, வருகிற அக். 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது.

    இதன் முக்கிய நிகழ்வாக, கொலு வைக்கப்படும்.

    இதையொட்டி, வேலுார் கொசப்பேட்டை பகுதியில் பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. குறைந்தபட்சம் 3 அங்குலம் முதல் அதிகபட்சம் 4 அடி வரையிலான மண் பொம்மைகளை தயார் செய்து, அதற்கு வண்ணம் தீட்டும் பணியில் கைவினை கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து பொம்மை தயாரிப் பாளர்கள் கூறியதாவது:-

    நவராத்திரிக்கு பொம்மை தயாரிக்கும் பணியை ஆண்டுதோறும் டிசம்பர் மாதமே தொடங்கி விடுவோம்.

    களிமண் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பொம்மைகளை, 3 மாதங்கள் நிழலில் உலரவைத்து, அதன் ஈரப்பதம் குறைந்தபிறகு சூளையில் வைத்து சுடப்படும்.

    பின்னர், பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி நடக்கும். ஒரு பொம்மையை முழுமையாக தயார் செய்ய 10 மாதகாலம் உழைப்பு தேவைப்படுகிறது.

    வேலுாரில் தயார் செய்யப்படும் இந்த பொம்மைகள், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை ரகத்துக்கு ஏற்றார் போல் விற்கப்படுகிறது.

    பிளாஸ்டர் ஆப் பாரீஸ் எனும் ரசாயன கலவையால் தயார் செய்யப்படும் பொம்மைகள் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால், களிமண்ணால் செய்யப்பட்ட இந்த பொம்மைகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று காலை சைக்கிள்கள் உள்ள அறையை சுத்தம் செய்ய ஊழியர்கள் சென்றுள்ளனர்.

    அப்போது, சுமார் 10 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை கவனித்த பள்ளி மாணவர்கள் உடனே தலைமை ஆசிரியரிடம் கூறினர். பின்னர் தலைமை ஆசிரியர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சாரை பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட பாம்பை வனச்சரகர் அலுவலர் இந்து உத்தரவின் பேரில் அருகே உள்ள பருவமலை காப்பு காட்டில் விட்டனர்.

    • மெயின் ரோட்டில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கழனிப்பாக்கம், பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 50) இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் தனது பைக்கை பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி மெயின் ரோட்டில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்.

    மீண்டும் வேலை முடித்துவிட்டு வந்து பார்த்த போது தனது பைக் காணாமல் போனது தெரியவந்தது.

    இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரெயில் நிலையத்தில் சிறுவனின் பைக் நின்று கொண்டு இருந்தது
    • பெற்றோர் போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி விஜி ராம் நகரை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இவர் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் சிறுவன் வீட்டில் இருந்த பைக் மற்றும் ரூ.20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு டியூஷன் செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு சென்றார்.

    அதன்பின்னர் சிறுவன் வீடு திரும்பவில்லை. மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.அப்போது காட்பாடி ரெயில் நிலையத்தில் சிறுவன் ஓட்டி சென்ற பைக் நின்று கொண்டு இருந்தது. ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் காட்பாடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்.

    ×