search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பு கடித்து பெண் சாவு
    X

    பாம்பு கடித்து பெண் சாவு

    • விவசாய நிலத்தில் காவலுக்காக சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வர் சதீஷ்குமார், கட்டிட சென்ட்ரிங் தொழிலாளி. மனைவி ஜானகி (வயது 31).

    இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர் பேரணாம்பட்டு அருகே சொலப்பல்லி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென் றார். இரவு தாய்க்கு சொந்தமான விவசாய நிலத்தில் காவலுக்காக சென்றிருந்தார்.

    அப்போது ஜானகியை கண்ணாடி விரியன் விஷ பாம்பு கடித்தது. அவர், பாம்பை பார்த்ததும் அதிர்ச்சியில் கதறினார். சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனையில் நேற்று அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஜானகி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×