என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
- திருமணம் ஆகாத ஏக்கத்தில் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி, மதி நகர், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் நாகரத்தினம். இவரது மகன் வினோத் (வயது 40). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த வினோத் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மது போதையில் இருந்த வினோத் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






