7 வயது சிறுமி திடீர் சாவு

2-ம் வகுப்பு படித்து வந்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
7 வயது சிறுமி திடீர் சாவு
Published on

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி சுகன்யா. தம்பதியின் மகள் மவுலிகா (வயது 7). கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுகன்யா தனது மகள் மவுனிகாவுடன் அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

மவுனிகா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சிறுமி தனது தாய் மற்றும் பாட்டியுடன் தூங்கினார். இன்று காலை நீண்ட நேரமாகியும் சிறுமி கண் விழிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தாய் சுகன்யா சென்று பார்த்தபோது மவுலிகா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com