search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    • போக்குவரத்து பாதிப்பு
    • தெருக்களில் கழிவு நீர் தேங்கி நிற்பதாக புகார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் பெரிய ஏரியூர் கிராம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் தெருக்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

    இங்கு பள்ளி செல்லும் மாணவர்கள், முதியவர்கள் அதில் நடந்து செல்வதால் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதிமக்கள் பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்தவித நடக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒடுக்கத்தூர் - அணைக்கட்டு சாலையில் அரசு பஸ்களை மறித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெரிய ஏரியூர் பகுதியில் கழிவு நீர் கால்வாய், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காவிட்டால் அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அப்பகுதி கிராம மக்கள் கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×