என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மீது ஆம்புலன்ஸ் மோதி டிரைவர் பலி
    X

    பைக் மீது ஆம்புலன்ஸ் மோதி டிரைவர் பலி

    • வேலையை முடித்துவிட்டு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த கொல்லமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் சிவக்குமார் (வயது 34), டிராக்டர் டிரைவர். மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு கொல்லமங்கலத்தில் இருந்து பள்ளிகொண்டாவிற்கு பைக்கில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அகரம் சேரியை அடுத்த விநாயகபுரம் தேசிய நெடுஞ்சாலை வளைவில் சென்றபோது ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வேகமாக வந்த தனியார் ஆம் புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப் பட்டசிவக்குமார் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளி கொண்டா போலீஸ் இன்ஸ் பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த சிவக் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து உறவி னர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவரி டம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×