என் மலர்
திருப்பூர்
- மின்கட்டண உயர்வு ரத்து செய்யும் கோரிக்கையுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் மற்றும் கயல்விழியிடம் முறையிட்டனர்.
- மத்திய அரசிடம் இருந்தும் தேவையான உதவிகள் பெற்றுத்தரப்படும் என்று உறுதி அளித்தார்.
திருப்பூர்:
திருப்பூர் தொழில் அமைப்புகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்களை நேரில் சந்தித்து முறையிட்டனர். அதன் தொடர்ச்சியாக, மின்கட்டண உயர்வு ரத்து செய்யும் கோரிக்கையுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் மற்றும் கயல்விழியிடம் முறையிட்டனர். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தொழில் அமைப்புகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், தொழில் பாதிப்புகள் குறித்து அமைச்சர்களிடம் விளக்கி, மின் கட்டண உயர்வை வாபஸ் பெற்று, சிறு, குறு பனியன் தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தொழில்துறையினரின் பாதிப்பு குறித்து, முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் மத்திய அரசிடம் இருந்தும் தேவையான உதவிகள் பெற்றுத்தரப்படும் என்று உறுதி அளித்தார்.
- கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
- வளா்மதி பேருந்து நிலையம் அருகில் ஏஐசிசிடியூ., முன்னணி ஊழியா்கள் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூா் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஏஐசிசிடியூ., தொழிற்சங்கத்தின் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) அரசியல் தலைமை குழு உறுப்பினா் சங்கா் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.
இதைத்தொடா்ந்து வளா்மதி பேருந்து நிலையம் அருகில் ஏஐசிசிடியூ., முன்னணி ஊழியா்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
இதில் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் டைம் ரேட், பீஸ் ரேட் அடிப்படையில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனசாக அரசு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் தற்காலிக சுமைத்தூக்கும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்வதுடன், தற்காலிகப் பணியாளா்களுக்கு போனஸ், கருணைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- திருப்பூரில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் கடந்த 27 ஆண்டுகளாக இயங்கி வருகிறது
- நிர்வாக வசதிக்காக தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக்குழு அமைக்கப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் கடந்த 27 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இவற்றில் 19 தொழில் அமைப்புகள் உறுப்பினராக இணைந்துள்ளன. நிர்வாக வசதிக்காக தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக்குழு அமைக்கப்படுகிறது. ஆர்பிட்ரேஷன் நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் அவசர கூட்டம் சைமா அலுவலகத்தில் நடந்தது. இதற்கு சைமா சங்க தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ஆர்பிட்ரேஷன் கவுன்சில் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் நிர்வாகக்குழு, மேலும் ஓராண்டுக்கு பதவியில் தொடருவது என்று தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் புதிதாக 20 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். டீமா உள்ளிட்ட சங்கங்கள், ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் இணைந்து தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
- தேக்கிவைக்கும் தண்ணீரில் தான் டெங்கு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும்.
- பழையப் பொருள்களில் தண்ணீா் தேங்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
அவிநாசி:
அவிநாசியில் டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.இதுகுறித்து அவிநாசி பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, செயல் அலுவலா் இந்துமதி ஆகியோா் கூறியதாவது:-
அவிநாசி பேரூராட்சியில் டெங்கு கொசு கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, பயன்படுத்தாத டயா்கள் உள்ளிட்ட கொசு உற்பத்திக்கு வாய்ப்புள்ள பழையப் பொருள்களில் தண்ணீா் தேங்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வீடுகளைச் சுற்றிலும் பழைய பொருள்களை போட்டுவைக்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
மேலும், தேக்கிவைக்கும் தண்ணீரில் தான் டெங்கு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் என்பதால் தண்ணீா் பிடித்து வைக்கும் பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும். மேலும், டெங்கு கொசு தடுப்பு பணிகளுக்கு வரும் பேரூராட்சி ஊழியா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனா்.
- குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் இந்த கழிவுநீா் கால்வாய் வழியாகத்தான் செல்கிறது.
- கால்வாய் முறையாக தூா்வாரப்படாததால் கழிவுநீா் சாலைகளில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தாராபுரம்:
தாராபுரம் நகராட்சியில் கழிவுநீா் கால்வாயைத் தூா்வார வலியுறுத்தி பொதுமக்கள் நகரமன்றத்தலைவா் பாப்புக்கண்ணனிடம் மனு அளித்தனா்.
இதுகுறித்து தாராபுரம் நகராட்சி நேதாஜி வீதி ஏபிஜே.அப்துல் கலாம் சமூக நல்லிணக்க நற்பணி மன்றத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தாராபுரம் நகராட்சி 5 மற்றும் 14 வது வாா்டுகளுக்குள்பட்ட நேரு நகா், நேதாஜி வீதி, சங்கா் மில் சாலை ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீா் கால்வாய் தற்போது ஆக்கிரமிப்புகளால் குறுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் இந்த கழிவுநீா் கால்வாய் வழியாகத்தான் செல்கிறது.
கழிவுநீா் கால்வாய் குறுக்கப்பட்டுள்ளதால் அவ்வப்போது கழிவுநீா் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. மேலும், கழிவுநீா் கால்வாய் முறையாக தூா்வாரப்படாததால் கழிவுகள் தேங்கி கழிவுநீா் சாலைகளில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வெளியேறும் நிலை காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று அபாயமும் காணப்படுகிறது.
எனவே கழிவுநீா் கால்வாயை சீரமைக்கவும், அடிக்கடி கழிவுநீா் கால்வாயை தூா்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
- நவம்பா் 7 -ந் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
- புற்றுநோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 2025 ல் மூன்று கோடியாக அதிகரிக்கும்.
திருப்பூர்:
தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு-2 சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் பேசியதாவது:-
மேரி கியூரியின் பிறந்த நாளான நவம்பா் 7 -ந் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் ஆண்டுக்கு ஒரு கோடி போ் புற்றுநோயால் உயிரிழக்கின்றனா். புற்றுநோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 2025 ல் மூன்று கோடியாக அதிகரிக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களை ஒதுக்கக்கூடாது. அன்பு ஒன்றே மிகச்சிறந்த மருந்து என்றாா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள் புற்றுநோய் விழிப்புணா்வு குறியீட்டு ரிப்பன் அணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் செய்திருந்தாா்.
- ஒவ்வொரு திட்டத்திலும் ஒன்றியம் வாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெறுகின்றனர்.
- தனிப்பட்ட துறைகளுக்கென இவ்வசதியில்லாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன.
உடுமலை:
சமூக நலத்துறையின் கீழ் 2 பெண் குழந்தைகளுக்கான திட்டம், முதிர் கன்னிகள் மற்றும் விதவை பெண் மறுவாழ்வு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு திட்டத்திலும் ஒன்றியம் வாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெறுகின்றனர். ஒன்றிய அலுவலகங்களில், திட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய நிர்வாகத்தில் அனைத்து திட்ட அலுவலர்களும் பொதுவாக பயன்படுத்தவே கம்ப்யூட்டர் வசதியுள்ளது.
தனிப்பட்ட துறைகளுக்கென இவ்வசதியில்லாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. சமூக நலத்துறை சார்ந்த திட்டங்களுக்கு இ - சேவை மையங்களில் ஆன்லைன் வாயிலாக பயனாளிகள் பதிவு செய்கின்றனர். அவ்வாறு செய்த பின்பு பதிவு செய்வதற்கு வழங்கப்படும் ஒப்புகை சீட்டை ஒன்றியங்களில் உள்ள சமூக நலத்துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும். இந்நடைமுறை பலருக்கும் தெரிவதில்லை. சேவை மையங்களிலும், பயனாளிகளுக்கு இதுகுறித்து விபரங்களை கூறுவதில்லை. இதனால் பலரும் ஒப்புகை சீட்டை சமூக நலத்துறை அலுவலர்களிடம் சமர்ப்பிக்காமல் வைத்து க்கொள்கி ன்றனர். இந்த அலட்சியத்தால் உதவித்தொகை பெற பதிவு செய்வது, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் தெரிவதில்லை.
இறுதி நேரத்தில் கம்ப்யூட்டர் பதிவில் பயனாளிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் சமயத்தில் மட்டுமே இந்த குளறுபடிகளை நலத்துறை பணியாளர்கள் கண்டறி கின்றனர். ஆன்லைன் பதிவுகளிலிருந்து பயனாளிகளின் தொலைபேசி எண்களை கண்டறிந்து பணியாளர்கள் அவர்களுக்கு அழைக்கின்றனர். அனைத்து நலத்திட்ட ங்களுமே ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்படுவதால் இத்துறையினருக்கு இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் அவசியமாகியுள்ளது. பயனாளிகளின் விபரங்களை அறியவும், விபரங்களை முழுமையாக பதிவு செய்யவும், சமூக நலத்துறை அலுவலர்களுக்கு ஆன்லைன் வசதி தேவை என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின்சாரத்திற்கு 1 யூனிட்டிற்கு 1 ரூ.53பைசா என மின் கட்டணம் நிர்ணயித்துள்ளது.
- காட்டன் வேஸ்ட் விலை கிலோவுக்கு ரூ.20 அதிகமாக இருப்பதால் ஓ.இ.மில்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
மங்கலம்:
ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில் அசோசியேசன் சங்கமானது மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நேற்று முதல் வருகிற 30-ந்தேதி வரை நூல் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.
அதன்படி திருப்பூர் மாவட்டம் மங்கலம் சுற்று வட்டார பகுதிகளான சாமளாபுரம், மங்கலம்,சோமனூர், பள்ளிபாளையம், பூமலூர், 63 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஓ.இ.,மில்கள் உற்பத்தி நிறுத்தத்தை துவங்கியுள்ளன.
இது குறித்து ஓ.இ., மில் உரிமையாளர்கள் கூறுகையில், தமிழக அரசு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஒவ்வொரு ஓ.இ., மில் தொழிற்சாலை களின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட சோலார் பேனல்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு 1 யூனிட்டிற்கு 1 ரூ.53பைசா என மின் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த மின்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மின் கட்டண உயர்வினால் ஓ.இ., மில் தொழிற்சாலை நடத்த முடியாத நிலையில் உள்ளது. தீபாவளி பண்டிகை காலங்களில் ஓ.இ.மில்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் போனஸ் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி செல்ல ஆயத்தமாகி கொண்டுள்ளனர்.ஆகவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மின்கட்டண உயர்வை ரத்து செய்து ஓ.இ.மில்.தொழிற்சாலைகளை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு ஓ.இ.மில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில் அசோசியேசன் ( ஓஸ்மா) சங்கத்தலைவர் அருள்மொழி கூறுகையில், மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்காததால் நாளொன்றுக்கு ரூ.10 கோடி மதிப்பில் நூல் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு உடனடியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் காட்டன் வேஸ்ட் விலை கிலோவுக்கு ரூ.20 அதிகமாக இருப்பதால் ஓ.இ.மில்கள் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
காட்டன் வேஸ்ட் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தால் மட்டுமே ஓ.இ.மில்கள் நஷ்டமின்றி தொழில் செய்ய முடியும்.மேலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தம் செய்வதால் மார்க்கெட்டில் நூல் கொள்முதல் ஆவதில்லை. ஆகவே நிலைமை சீராகும் வரை வருகிற 30-ந்தேதி வரை ஓ.இ.மில்கள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் என்றார்.
- கடந்த ஆண்டில் இருந்து உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பனியன் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.
- அவசரமான ஆர்டர் இருந்தாலும் கைவசம் உள்ள வடமாநில தொழிலாளர்களை கொண்டு பணிகளை முடிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர்:
ஒரு காலத்தில் திருப்பூர் பனியன் தொழில் நகரத்தில், தீபாவளி என்றாலே 10 நாட்களுக்கு முன்பாகவே, பரபரப்பு தொற்றிக்கொள்ளும். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே போனஸ் வழங்குவார்கள். அதிலிருந்தே, நகரப்பகுதியில் உள்ள கடைகள் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பின் திருப்பூரில் தீபாவளி கொண்டாட்டம் மந்தமாகிவிட்டது. கடந்த ஆண்டில் இருந்து உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பனியன் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி போனஸ் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4-ந்தேதி முதல் போனஸ் பட்டுவாடா தொடங்கி விட்டது. இருப்பினும் பெரும்பாலான பனியன் நிறுவனங்கள் இன்று அல்லது நாளைதான் போனஸ் வழங்க திட்டமிட்டுள்ளன. திருப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் கடைகளுக்கு வந்து செல்வதால் நகரப்பகுதி கலகலப்பாக காணப்படும். தற்போது பனியன் தொழிற்சாலைகளில் பணி குறைவு என்பதால் தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்கள் வரை விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளனர். அவசரமான ஆர்டர் இருந்தாலும் கைவசம் உள்ள வடமாநில தொழிலாளர்களை கொண்டு பணிகளை முடிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி நாளையுடன் (9-ந்தேதி) உற்பத்தி பணிகளை நிறைவு செய்து விட்டு 10-ந்தேதி முதல் பண்டிகை விடுமுறை அளிக்க திட்டமிட்டுள்ளன. சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள் 19-ந்தேதிக்கு முன்னதாக திரும்ப போவதில்லை. இதனால் 20-ந்தேதிக்கு பின்னரே பனியன் தொழிற்சாலைகளின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும். இதுவரை போனஸ் கிடைக்காத தொழிற்சாலைகளில் எப்படியும் இன்று மாலைக்குள் கிடைத்துவிடும். அதற்குள் கொள்முதல் வேலைகளை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பலாம் எனவும் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர். கடைசி நேர கூட்டத்தில் சிக்காமல் முன்கூட்டியே குடும்பத்தினரை பஸ்சில் அனுப்பி வைக்கவும் தொழிலாளர்கள் தயாராகி விட்டனர்.
சிறப்பு பஸ்கள்
திருப்பூரில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கோவில் வழி ஆகிய 3 பஸ் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் (300-க்கும் மேற்பட்ட) பஸ்கள் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், சிவகங்கை, சிவகாசி, தென்காசி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து தான் சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளதால், அதற்கேற்ப கோவில்வழி பஸ் நிலையத்தை தயார் படுத்தும் பணியில் மாநகராட்சி, போக்குவரத்து கழக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பஸ் நிலையம் விரிவுப்படுத்தும் கட்டுமான பணி நடந்து வருவதால், கூடுதலான சிறப்பு பஸ்களை பஸ் நிலையத்திற்குள் நிற்க வழியில்லாத நிலைமை உள்ளது. இதனால் பஸ் நிலைய மேற்குபுறத்தில் உள்ள மாநகராட்சி காலியிடத்தை, தூய்மைப்படுத்தி, சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. இந்த இடத்தை ஜே.சி.பி., எந்திரத்தின் உதவியுடன் குப்பை, கழிவுகள் அகற்றப்பட்டு, வழித்தட பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் சேறும், சகதியுமாக உள்ள இடங்களில் மண் கொட்டப்படுகிறது. கூடுதலாக பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு பின் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பஸ்கள் நிற்பதற்கு பஸ் நிலையத்தில் இடம் போதியதாக உள்ளது. மேலும் அடுத்தடுத்து பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் வரும் போது, நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முன்கூட்டியே காலியிடம் தயார்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்கள் இடையூறு இல்லாமல் சென்று வர தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் மின் விளக்குகளும் பொருத்தப்படும். அத்துடன் அப்பகுதியில் போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என்றனர்.
தற்போது ஸ்மார்ட் சிட்டி பணி தொடங்கியதால், பஸ் நிலையத்தில் இருந்த ரேக், மேற்கூரை முற்றிலும் இடித்து அகற்றப்பட்டு விட்டது. தற்போது மழை பெய்து வரும் நிலையில், வெயிலின் தாக்கமும் அவ்வப்போது அதிகரித்து வருகிறது. குழந்தைகள், குடும்பத்துடன் வரும் பயணிகள் மழை, வெயிலில் படும் சிரமங்களை தவிர்க்க, தற்காலிக நிழற்குடை உள்ளிட்ட ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருப்பூர் ரெயில்வே எல்லைக்கு உட்பட்ட திருப்பூர் - வஞ்சிபாளையம் வழித்தட தண்டவாளத்தில் சோதனை பணிகள் தொடங்கியது.
- ரெயில் தண்டவாளங்கள் நிலையை அறிய, ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் ெரயில்வே எல்லைக்கு உட்பட்ட திருப்பூர் - வஞ்சிபாளையம் வழித்தட தண்டவாளத்தில் சோதனை பணிகள் தொடங்கியது. இதில் தண்டவாளத்தின் உட்பகுதியில் ஏற்படும் நுண்ணிய, லேசான விரிசலையும் கண்டறியும் யு.எஸ்.எப்.டி., (அல்ட்ரா சானிக் பிளா ரீடெக்டர்) டிஜிட்டல் கேமரா மூலம் தண்டவாளங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் திருப்பூர் ெரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி, சிக்கண்ணா கல்லூரி வரையிலும், இரண்டாம் கட்டமாக அணைப்பாளையம் முதல் வஞ்சிபாளையம் என இரு பிரிவுகளாக சோதனை நடத்தப்பட்டது. எந்த இடத்திலும் விரிசல் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து ெரயில்வே பொறியியல் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், கண்ணுக்கு தெரியாத, வெளியே புலப்படாத விரிசல் தண்டவாளத்தில் இருப்பதை யு.எஸ்.எப்.டி., கருவி மூலம் அறிந்து கொள்ள முடியும். ெரயில் தண்டவாளங்கள் நிலையை அறிய, ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என்றனர்.
- வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து, அதனை பனியன் நிறுவனங்களில் கொடுத்து பணியாற்றி வருகின்றனர்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தும் பனியன் நிறுவனங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். மேலும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து, அதனை பனியன் நிறுவனங்களில் கொடுத்து பணியாற்றி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி போலி ஆதார் அட்டை மூலம் பணிபுரியும் தொழிலாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் பல்லடம் பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றும் 3 பனியன் நிறுவனங்களில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சரி பார்த்து சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் வங்கதேச தொழிலாளர்களை திருப்பூருக்கு வேலைக்கு அழைத்து வரும் முகவர்களின் விவரங்கள் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தும் பனியன் நிறுவனங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- அமராவதி அணை மற்றும் ஆறு உள்ளிட்ட பகுதியில் முதலைகள் உலா வருவது தொடர் கதையாக உள்ளது.
- அமராவதி ஆற்றில் உலா வருகின்ற முதலையை பிடித்து உரிய முறையில் பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து அமராவதி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் பல்வேறு கிராமங்களின் நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தியும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தும் வருகின்றது. இந்த சூழலில் அமராவதி ஆற்றில் முதலைகள் உலா வந்த வண்ணம் உள்ளன.
இதன் காரணமாக ஆற்று நீரை பயன்படுத்தி வருகின்ற பொதுமக்கள், தாகம் தீர்க்க வருகின்ற கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதுடன் கரையோர கிராமங்களில் அச்சம் நிலவி வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அமராவதி அணை மற்றும் ஆறு உள்ளிட்ட பகுதியில் முதலைகள் உலா வருவது தொடர் கதையாக உள்ளது. அவை இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அணையின் கரையோரம், ஆற்றுக்கு நடுவே உள்ள பாறைகளில் அவ்வப்போது வந்து மேலே ஓய்வெடுத்து விட்டு பின்பு தண்ணீருக்குள் சென்று விடுகிறது. அந்த வகையில் கல்லாபுரம் அருகே அமராவதி ஆற்றில் உள்ள பாறையில் முதலை ஒன்று ஒய்யாரமாக அமர்ந்து ஓய்வெடுத்து கொண்டிருந்தது. இதனால் ஆற்றுக்கு வருகை தந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
மேலும் கரையோர கிராமங்களில் முதலைகள் உலா வந்து பிடிபட்ட சம்பவமும் நடந்துள்ளது. இதுவரையிலும் முதலைகளால் பொதுமக்கள், கால்நடைகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனாலும் முதலைகள் உலா வருவதை அலட்சியப்படுத்தக் கூடாது. அவற்றின் இயல்பு குணமே உணவை வேட்டையாடி உண்பதாகும். முதலைகள் தானாக இடம் பெயர்ந்து வர இயலாது. எனவே முதலைகள் எங்கிருந்து அமராவதி ஆற்றுக்கு வந்தது. அவை எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். னவே அமராவதி ஆற்றில் உலா வருகின்ற முதலையை பிடித்து உரிய முறையில் பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






