search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி
    X

    கோப்புபடம்

    புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

    • நவம்பா் 7 -ந் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    • புற்றுநோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 2025 ல் மூன்று கோடியாக அதிகரிக்கும்.

    திருப்பூர்:

    தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு-2 சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் பேசியதாவது:-

    மேரி கியூரியின் பிறந்த நாளான நவம்பா் 7 -ந் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் ஆண்டுக்கு ஒரு கோடி போ் புற்றுநோயால் உயிரிழக்கின்றனா். புற்றுநோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 2025 ல் மூன்று கோடியாக அதிகரிக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களை ஒதுக்கக்கூடாது. அன்பு ஒன்றே மிகச்சிறந்த மருந்து என்றாா்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள் புற்றுநோய் விழிப்புணா்வு குறியீட்டு ரிப்பன் அணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் செய்திருந்தாா்.

    Next Story
    ×