search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "computer facility"

    • ஒவ்வொரு திட்டத்திலும் ஒன்றியம் வாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெறுகின்றனர்.
    • தனிப்பட்ட துறைகளுக்கென இவ்வசதியில்லாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன.

    உடுமலை:

    சமூக நலத்துறையின் கீழ் 2 பெண் குழந்தைகளுக்கான திட்டம், முதிர் கன்னிகள் மற்றும் விதவை பெண் மறுவாழ்வு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு திட்டத்திலும் ஒன்றியம் வாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெறுகின்றனர். ஒன்றிய அலுவலகங்களில், திட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய நிர்வாகத்தில் அனைத்து திட்ட அலுவலர்களும் பொதுவாக பயன்படுத்தவே கம்ப்யூட்டர் வசதியுள்ளது.

    தனிப்பட்ட துறைகளுக்கென இவ்வசதியில்லாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. சமூக நலத்துறை சார்ந்த திட்டங்களுக்கு இ - சேவை மையங்களில் ஆன்லைன் வாயிலாக பயனாளிகள் பதிவு செய்கின்றனர். அவ்வாறு செய்த பின்பு பதிவு செய்வதற்கு வழங்கப்படும் ஒப்புகை சீட்டை ஒன்றியங்களில் உள்ள சமூக நலத்துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும். இந்நடைமுறை பலருக்கும் தெரிவதில்லை. சேவை மையங்களிலும், பயனாளிகளுக்கு இதுகுறித்து விபரங்களை கூறுவதில்லை. இதனால் பலரும் ஒப்புகை சீட்டை சமூக நலத்துறை அலுவலர்களிடம் சமர்ப்பிக்காமல் வைத்து க்கொள்கி ன்றனர். இந்த அலட்சியத்தால் உதவித்தொகை பெற பதிவு செய்வது, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் தெரிவதில்லை.

    இறுதி நேரத்தில் கம்ப்யூட்டர் பதிவில் பயனாளிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் சமயத்தில் மட்டுமே இந்த குளறுபடிகளை நலத்துறை பணியாளர்கள் கண்டறி கின்றனர். ஆன்லைன் பதிவுகளிலிருந்து பயனாளிகளின் தொலைபேசி எண்களை கண்டறிந்து பணியாளர்கள் அவர்களுக்கு அழைக்கின்றனர். அனைத்து நலத்திட்ட ங்களுமே ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்படுவதால் இத்துறையினருக்கு இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் அவசியமாகியுள்ளது. பயனாளிகளின் விபரங்களை அறியவும், விபரங்களை முழுமையாக பதிவு செய்யவும், சமூக நலத்துறை அலுவலர்களுக்கு ஆன்லைன் வசதி தேவை என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 32 பள்ளிக்கூடங்களுக்கு தனியார் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.
    • ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கி உள்ளனர்.

    மொடக்குறிச்சி:

    அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு, பள்ளிக்கு தேவையான வசதிகளை மேம்படுத்திட நம்ம ஸ்கூல் திட்டம் தமிழக முதல்-அமைச்சரால் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலமாக அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், சமுதாய தொண்டு நிறுவனங்கள், பெற்றோர்கள், புரவலர்கள் ஆகியோரிடம் இருந்து நன்கொடைகளை பெற்று பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பள்ளிக்கு தேவையான வசதிகளை இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்கொடைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதனையடுத்து மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் சுமார் 32 பள்ளிக்கூடங்களுக்கு பெரிய அகன்ற தொடுதிரை ஸ்மார்ட் போர்டு, கணினி, மாணவர்கள் அமரும் நாற்காலிகள், மேசைகள், இரும்பு பீரோக்கள் போன்றவைகளை தனியார் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.

    அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட நவீன தொடுதிரை கணினி மற்றும் மேசைகள், நாற்காலிகள் வழங்கியதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

    ஒவ்வொரு பள்ளிக்கும் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கி உள்ளனர்.

    மொடக்குறிச்சி வட்டாரம் கஸ்பாபேட்டை ஊராட்சிக்குட்பட்ட நாத கவுண்டன் பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தொடுதிரை கணினி அமைக்கப்பட்டு பள்ளி ஆசிரியர் தாமஸ் மாணவ- மாணவிகளுக்கு வகுப்பு பாடங்களை கற்றுக்கொடுத்தார்.

    நம்ம ஸ்கூல் திட்டத்தின் மூலம் கிடைத்த பொருட்களால் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பும், மகிழ்ச்சியும் பெற்றுள்ளது.

    ×