திருப்பூரில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் கூட்டம்

திருப்பூரில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் கடந்த 27 ஆண்டுகளாக இயங்கி வருகிறதுநிர்வாக வசதிக்காக தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக்குழு அமைக்கப்படுகிறது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

திருப்பூரில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் கடந்த 27 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இவற்றில் 19 தொழில் அமைப்புகள் உறுப்பினராக இணைந்துள்ளன. நிர்வாக வசதிக்காக தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக்குழு அமைக்கப்படுகிறது. ஆர்பிட்ரேஷன் நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் அவசர கூட்டம் சைமா அலுவலகத்தில் நடந்தது. இதற்கு சைமா சங்க தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ஆர்பிட்ரேஷன் கவுன்சில் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் நிர்வாகக்குழு, மேலும் ஓராண்டுக்கு பதவியில் தொடருவது என்று தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் புதிதாக 20 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். டீமா உள்ளிட்ட சங்கங்கள், ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் இணைந்து தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com