என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • 89 லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறிமுதல்
    • திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்தவர் மணி.இவரது மகன் முத்துக்குமரன் (வயது 42).

    இவர் பொன்னேரி கூட்ரோட்டில் உள்ள டீக்கடையில் வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்று வந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பிரபு சம்பவ இடத்திற்கு சென்று முத்துக்குமரனிடம் இருந்து 89 லாட்டரி சீட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தார்.

    மேலும் முத்துக்குமரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கேமராவில் கண்காணித்தனர்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி ஊராட்சி சின்ன குட்டூர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி பூங்கொடி (வயது 50), கடந்த 6-ம்தேதி காலை நிலத்தில் 3 ஆடுகளை மேய்ச்சலுக்காக கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மொபட்டில் அங்கு வந்தார். அவர் இரண்டு பெரிய ஆடுகளை கழுத்தில் இருந்த கயிறை அவிழ்த்து கால்களை கட்டி மொபட்டின் முன் பகுதியில் வைத்துக் கொண்டு சென்றுள் ளார்.

    இந்த நிலையில் பூங்கொடி. வந்தபோது குட்டி ஆடு மட்டுமே இருந்ததையும் 2 பெரிய ஆடுகள் மாயமானதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் மொபட்டில் 2 ஆடுகளை எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பூங்கொடி புகார் அளித்தார். போலீசார் சி.சி.டி.வி.கேமரா மூலம் கண்காணித்தபோது மொபட்டில் 2 ஆடுகளுடன் சென்றவர்தான் பூங்கொடி ஆடுகளை திருடியது தெரிய வந்தது. அவரது முகவரியை கண்டுபிடித்து சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பழையபேட்டை பகுதியை சேர்ந்த அமாவாசை என்பவரின் மகன் வினோத் குமார் (வயது 30) என்பது தெரியவந்தது. இவரது வீட்டில் உள்ளவர்கள் ஏற்கனவே 20 ஆடுகளை பரா மரித்து வந்த நிலையில் மேலும் 2 ஆடுகளை வாங்குமாறு வினோத்குமாரிடம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை வினோத்குமார் பதுக்கி வைத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு கட்டியிருந்த ஆட்டை திருடி சென் றதை ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து வினோத்குமாரை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர். பின்னர் 2 ஆடுகளையும் மீட்டு ஆட்டின் உரிமையானரான பூங்கொடியிடம் ஒப்படைத்தனர்.

    • பொருட்களை அடித்து சேதம்
    • சகோதரருக்கு வலை வீச்சு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பி.ஜே.நேசூ சாலையில் உள்ள ராமநாயக் கன்பேட்டை பகுதியை சேர்ந்த பல் டாக்டர் அறிவர சன் என்பவர் கிளினிக் நடத்தில் வருகிறார். இவரது மனைவி இளவரசியும் பல் டாக்டராவார்.

    இந்நிலையில் டாக்டர் அறிவரசனிடம் பல்சிகிச்சை பெற்ற நியூடவுன் பகுதியை சேர்ந்த இந்திராணி (வயது 60) திடீர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    அறிவரசனின் தவறான சிகிச்சையால் தனது தாய் இந்திராணி இறந்துவிட்டார் என் றும், இதே போல் பலரும் இறந்துவிட்டனர் என இந்தி ராணியின் மகன் ஸ்ரீராம்குமார் வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து மாவட்ட மருத்துவ இணை, இயக்குனர் மாரிமுத்து தலைமையில் மருத்துவ குழுவினர் மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டனர். அதில் பல் டாக்டர் அறிவரசன் மீது ஸ்ரீராம்குமார் அளித்த புகார்தவறானது எனவும், பல் டாக்டர் அறிவரசன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கலாம் எனவும் மருத்துவ அறிக் கையை அளித்ததையடுத்து கிளினிக் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    இந்நிலையில் இந்திராணி யின் மகன்கள் யுவராஜ், ஸ்ரீராம்குமார் மற்றும் சிலர் அடிக்கடி பல் கிளினிக்கிற்கு சென்று கிளினிக்கை மூடி- விடுங்கள் என்று மிரட்ட விடுத்து வந்தனர். நேற்று ஸ்ரீராம்குமார் கிளினிக்குள் திடீரென அத்துமீறி நுழைந்து அங்கிருந்த டாக்டர் அறிவசன், அவரது மனைவி டாக்டர் இளவரசி மற்றும் அறிவுரசனின் தாயார் தேன்மொழி ஆகிய 3 பேரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி, பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

    மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினார்.

    இதுகுறித்து டாக்டர் அறிவரசன் நகர போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.நகர போலீஸ் இன்ஸ்பெக்ட நாகாராஜ் விசாரணை நடத்தி, ஸ்ரீராம்குமாரை (33) கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யுவராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மலைப்பாதையில் கடும் நெரிசல்
    • போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்பொழுதும் ஒரு சீதோஷ்ண நிலை காணப்படுவதால் இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இங்குள்ள 14 கொண்டை ஊசி வளைவுகள் வழியாக சுற்றுலா பயணிகள் செல்லும் போது இயற்கைகாட்சிகளை ரசித்து செல்கின்றனர்.

    இங்கு படகு சவாரி, பூங்கா, செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.

    வாரந்தோறும் விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். அதன்படி நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

    கார், இருசக்கர வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகளால் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    அப்போது சுற்றுலா பயணிகள் கொண்டை ஊசி வளைவுகளில் கூட்டமாக நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    நேற்று மாலை சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    செயற்கை நீர் வீழ்ச்சி, பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு ஒரே நேரத்தில் வாகனத்தில் திரும்பியதால் கொண்டை ஊசி வளைவுகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

    மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது.

    இதனால் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும்
    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சு

    திருப்பத்தூர்:

    திதிருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவ ராக இருந்த மதன் குமார் தஞ்சாவூருக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் காஞ்சீபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) முனி சுப்ராயன், பதவி உயர்வில் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

    அவர் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார். அவருக்கு அலுவலக ஊழியர்கள், ஆசிரியர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    அதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர் முனி சுப்ராயன் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத் தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தேவை யான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    காலியாக உள்ள ஆசிரிய பணியிடங்களை நிரப்புதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும்.

    திருப்பத்தூர் மாவட் டத்தை கல்வியில் முதன்ை மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜமுனாமரத்தூரில் நடந்த முதியவர் கொலை வழக்கில் உத்தரவு
    • திருப்பத்தூர் கோர்ட்டு வளாகத்தில் இருந்து தப்பியோட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

    திருப்பத்தூர்:

    திருவண்ணாமலைமாவட் டம் போளூர் அடுத்த ஜமு னாமரத்தூர் மண்டப்பாறை கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பொன்னு சாமி (வயது 45), விவசாயி. இவருக்கும், இவரது சகோத ரர் பூச்சிக்கும் இடையே உள்ள இடத்தில் விவசாயம் செய்வதில் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் பூச்சி, ஊர் பஞ்சாயத்தை கூட் டினார்.

    பஞ்சாயத்தில் பூச்சிக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த உறவினர் குப்பன் (60) என்பவர் பேசினார். இது பொன்னுசாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் கடந்த 2013- ம் ஆண்டு ஜூன் 10-ந் தேதி மீண்டும் குப்பனுக்கும், பொன்னுசாமிக்கும் இடையை வாக்குவாதம் ஏற் பட்டது. அப்போது பொன்னுசாமி, விவசாயியான அவ ரது சகோதரர் ஜெயராமன் (40), உறவினர்கள் உமேஷ், வெள்ளையன் மனைவி பூச்சி ஆகிய 4 பேரும் ஒன்று சேர்ந்து குப்பனை சரமாரியாக தாக் கினர். திடீரெனஜெயராமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குப்பனை வெட்டி னார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக் காக வேலூர் அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டார். அங்கி சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    ஆயுள் தண்டனை இதுகுறித்து ஜமுனாமரத் தூர் போலீசார் வழக்குப்ப திவு செய்து. பொன்னுசாமி, ஜெயராமன், உமேஷ், பூச்சி ஆகிய 4 பேரை கைது செய்து கோர்ட்டில் வழக்குதொடர்ந்தனர்.

    இந்த வழக்கு திருப்பத்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசா ரணை நேற்று நடந்தது. இதில் நீதிபதி மீனாகுமாரி கத்தி யால் வெட்டிய ஜெயராம னுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், பொன்னுசாமிக்கு ஒரு வருட சிறை தண்டனையும் ரூ.500 அபராதமும், உமேஷ், பூச்சி ஆகிய 2 பேருக்கும் தலா ரூ.750 அபதாரதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    நீதிபதி தீர்ப்பு வாசித்து கொண்டு இருந்த போது ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட ஜெயராமன் கோர்ட் டில் இருந்து தப்பியோட முயன்றார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கோர்ட்டுக்குள் அழைத்து சென்றனர். இதனால் கோர்ட்டு வளா கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரோந்தும் பணியில் சிக்கினார்
    • போலீசார் விசராணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீசார் கம்பிக்கொல்லை பகுதியில் ரோந்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் நாயக்கனேரி ஊராட்சி பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் அஜித் (வயது 23) என்பதும், பாக்கெட்டில் 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது.

    இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 50 கிராம் கஞ் சாவை பறிமுதல் செய்தனர்.

    • நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்
    • அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்த ஆஸ்பத்திரியில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் டாக்டர்களிடம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • போலீசாரை கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்
    • டிரைவர்களை தேடி வருகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஊசி நாட்டான் பட்டம் பகுதியில் உள்ள ஏலகிரி மலை அடிவாரத்தில் அனுமதியின்றி ஜேசிபி எந்திரம் மூலம் லாரியில் மண் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ரகசிய தகவல் கிடைத்தது.

    எஸ்.பி. உத்தரவின் பேரில் ஜோலார்பேட்டை போலிஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஏலகிரி மலை அடிவாரத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் கடத்தப்படுவது தெரியவந்தது.

    அப்போது கடத்தல்காரர்கள் போலீசாரை கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

    பின்னர் போலீசார் லாரி மற்றும் ஜேசிபி எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேட்டுசக்கரகுப்பம் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 35) மற்றும் லாரி டிரைவர் சின்னா கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சேதுராமன் (30) ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • தேருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை நடந்தது
    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    ஜோலார்பேட்டை:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் அமைந்துள்ள நிலாவூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் வட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தனிநபர் பண்ணை குட்டை அமைக்க திட்டமிடப்பட்டது.

    வெட்டும் பணியினை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.வுமான தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கதவநாச்சியம்மன் கோவிலில் புதியதாக உருவாக்கப்பட்ட தேருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தேவராஜ் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் திருமால், பொதுக்குழு உறுப்பினர் கே.சாம்மண்ணன், நாட்டறம்பள்ளி ஒன்றிய குழுத் தலைவர் வெண்மதி சிங்காரவேலன், மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் லட்சுமி செந்தில்குமார், சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற கவுன்சிலர் தனலட்சுமி, சங்கர், காளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஆலங்காயத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
    • பெற்றோரையும் நேரில் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணராமன். இவரது மகள் ஆர்த்தி (வயது 19). ஆர்த்தியும், திருப்பத்தூர் அடுத்த கொரட்டி தண்டூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (25) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்காயத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து காதல்ஜோடி விக்னேஷ் மற்றும் ஆர்த்தி பாதுகாப்பு கேட்டு, ஜோலார்பேட்டை போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதன் எடுத்து போலீசார் 2 பேரின் பெற்றோரையும் நேரில் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 50 கிராம் கஞ்சா பறிமுதல்
    • ரோந்து பணியில் சிக்கனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீசார் கம்பி கொள்ளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். சந்தேகம் படும்படி சுற்றி திரிந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் நாயக்கனேரி ஊராட்சி மலை பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் அஜித் (வயது 23) என்பதும் இவர் பாக்கெட்டில் 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ×