search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ணை குட்டை அமைக்கும் பணி
    X

    ஏலகிரி மலையில் பண்ணை குட்டை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ. ெதாடங்கி வைத்த காட்சி.

    பண்ணை குட்டை அமைக்கும் பணி

    • தேருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை நடந்தது
    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    ஜோலார்பேட்டை:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் அமைந்துள்ள நிலாவூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் வட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தனிநபர் பண்ணை குட்டை அமைக்க திட்டமிடப்பட்டது.

    வெட்டும் பணியினை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.வுமான தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கதவநாச்சியம்மன் கோவிலில் புதியதாக உருவாக்கப்பட்ட தேருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தேவராஜ் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் திருமால், பொதுக்குழு உறுப்பினர் கே.சாம்மண்ணன், நாட்டறம்பள்ளி ஒன்றிய குழுத் தலைவர் வெண்மதி சிங்காரவேலன், மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் லட்சுமி செந்தில்குமார், சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற கவுன்சிலர் தனலட்சுமி, சங்கர், காளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×