என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஜோதியை சிறப்பு படை போலீசார், வாணியம்பாடி தாலுகா போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
    • போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளை நடக்கிறது.

    இதனை தடுக்க சிறப்பு படை போலீசார், இன்று காலை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவரை, மடக்கி பிடித்தனர்.

    மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஜோதியை சிறப்பு படை போலீசார், வாணியம்பாடி தாலுகா போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்படி வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சிறப்பு படை போலீசார் பேசிக் கொண்டிருந்ததை, ஓட்டு கேட்ட ஜோதி அங்கிருந்து வேகமாக ஓடினார். கிராமத்தை ஒட்டியுள்ள டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து அதன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டார்.

    நீங்கள் என்னை கைது செய்தால், நான் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.

    அவரிடம் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • சுதாரித்து கொண்டதால் விபத்து தவிர்ப்பு
    • பெங்களூரை நோக்கி சென்றுகொண்டிருந்தது

    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டத்திலிருந்து பெங்களூரை நோக்கி அரசு பஸ் நேற்று சென்றது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் பழனியும் நடத்துனர் கோபு குமார் பணியில் இருந்தனர். தேசிய நெடுஞ்சாலை வழியாக 60 பயணிகளுடன் சென்று கொண்டிருந்து நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் சென்று கொண்டு இருக்கும் போது டிரைவர் பழனிக்கு திடீரென உடல்நிலை கோளாறு காரணமாக மயக்கம் ஏற்படுவதை அறிந்தார்.

    பஸ்சில் இருந்த 60க்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்ற சுதாரித்துக் கொண்டார். டிரைவர் பழனி உடனடியாக தேசிய நெடுஞ்சாலையின் சாலையோரமாக அரசு பஸ்ஸை நிறுத்தினார். பஸ் நின்றதும் அவர் மயங்கினார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    டிரைவர் பழனியை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

    மேலும் மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

    • 385 கிலோ பறிமுதல்
    • டிரைவர் தப்பி ஓட்டம்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலையுடன் வந்த கார் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. அதில் காய மின்றி தப்பிய டிரைவர் போலீசார் வருவதை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார்.

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சி பகு திக்குஉட்பட்டபனம்தோப்பு என்ற இடத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சா லையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந் தது. இதில் கார் டிரைவர் காயமின்றி உயிர் தப்பிக் காருக் குள் இருந்து வெளியேறினார்கள். பின்னர் காரில் இருந்து சித றிய புகையிலை பொருளை (ஹான்ஸ் பாக்கெட்டுகள்) அவர் சேகரித்து கொண்டிருந் தார். அப்போது நாட்டறம் பள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    போலீசார் வருவதை பார்த்ததும் கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

    விபத்தில் சிக்கிய கார் தமிழக பதிவெண் கொண்டதாகும். காரில் தடை செய்யப் பட்ட 385 கிலோ புகையிலை பொருள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.4 லட் சம் இருக்கும் என கூறப்படு கிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் குறித்தும், புகையிலை பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று ஜோலாபேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பொன்னேரி கூட்ரோடு அருகே உள்ள டீக்கடையில் ஒருவர் சந்தேகப்படும்படி இருந்தார். அவரை பிடித்து விசா ரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

    இதனையடுத்து அவரை சோதனை செய்ததில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 84 வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர்பொன்னேரி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (வயது 42) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து.அவரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கிராம போக்குவரத்து துண்டிப்பு
    • தூரமாக நின்று சிலர் செல்பி எடுத்து கொண்டனர்

    ஆம்பூர்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலைக்கு யானைகள் கூட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வந்தன.

    அதில் 2 யானைகள் இறந்துவிட்டது. மேலும் பல யானைகள், தண்டராம்பட்டு வனப் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்தது. அந்த யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை யினர், முதுமலைக்கு கொண்டு சென்றுவிட்டனர்.

    இந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை தந்தம் கொண்ட ஆண் யானை, ஜவ்வாது மலையில் தஞ்சமடைந்தது.

    பொதுமக்களுக்கு பாதிப்பு விளைவிக்காமல், ஒற்றை தந்தத்துடன் கம்பீரமாக சுற்றி வரும் இந்த யானைக்கு பொதுமக்கள் 'ஒற்றைக் கொம்பன்' என பெயர் சூட்டி செல்லமாக அழைக்கின்றனர்.

    இதற்கிடையில் ஜவ்வாதுமலையில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு வெளியேறிய ஒற்றை கொம்பன் யானை, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிகிறது.

    ஆம்பூர் அடுத்த நாயாக்கனேறி மலை ஊராட்சிக்கு உட்பட்ட பனங்காட்டேரி வனப்பகுதி சாலையில் இன்று காலை ஒற்றை யானை நின்று கொண்டு கொம்பன் யானை அட்டகாசம் செய்தது.

    அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களை கடந்து செல்ல விடாமல் பார்வையால் மிரட்டியது.

    பல மணி நேரமாக சாலையிலேயே நின்று கொண்டிருந்ததால், அந்த வழியாக மலை வாழ் மக்களின் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது.

    நகராமல் சாலையில் நின்று கொண்டிருந்த யானையுடன், தூரமாக நின்று சிலர் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.

    யானையின் நடமாட்டத்தால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    வயதான காராணத்தால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாக உள்ளது. இந்த யானை காட்டுக்குள் செல்லாமல் நடுரோட்டில் நடந்து சென்று சாலையோரம் காட்டில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.

    இதனை வனத்துறையினர் பிடித்து, அதற்கு தேவையான உணவு உள்ளிட்ட விலை வழங்கி பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது
    • விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன் தீப்சிங் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு புதியதாக ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணிகளை விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.மாரிமுத்து, துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர்.செந்தில், வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர். சிவசுப்பிரமணி, டாக்டர்கள். செந்தில், பார்த்திபன், தன்வீர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • குளிப்பதற்காக சென்ற நிலையில் பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 27).கூலி தொழிலாளி. இவர் நேற்று ஜோலார்பேட்டை அடுத்த சின்ன கம்மியாம்பட்டில் உள்ள உறவினர் பார்த்திபன் வீட்டிற்கு வந்தார்.

    இன்று காலை ஸ்ரீராம் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பார்த்திபனின் விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றார்.

    கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது திடீரென ஸ்ரீராம் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட அவரது நண்பர் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து ஸ்ரீராமை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீராம் நீரில் மூழ்கியதால் மீட்க இயலாமல் போனது பணி தோல்வியில் முடிந்தது.இதையடுத்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) முருகன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி ஸ்ரீராமை பிணமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 89 லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறிமுதல்
    • திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்தவர் மணி.இவரது மகன் முத்துக்குமரன் (வயது 42).

    இவர் பொன்னேரி கூட்ரோட்டில் உள்ள டீக்கடையில் வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்று வந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பிரபு சம்பவ இடத்திற்கு சென்று முத்துக்குமரனிடம் இருந்து 89 லாட்டரி சீட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தார்.

    மேலும் முத்துக்குமரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கேமராவில் கண்காணித்தனர்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி ஊராட்சி சின்ன குட்டூர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி பூங்கொடி (வயது 50), கடந்த 6-ம்தேதி காலை நிலத்தில் 3 ஆடுகளை மேய்ச்சலுக்காக கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மொபட்டில் அங்கு வந்தார். அவர் இரண்டு பெரிய ஆடுகளை கழுத்தில் இருந்த கயிறை அவிழ்த்து கால்களை கட்டி மொபட்டின் முன் பகுதியில் வைத்துக் கொண்டு சென்றுள் ளார்.

    இந்த நிலையில் பூங்கொடி. வந்தபோது குட்டி ஆடு மட்டுமே இருந்ததையும் 2 பெரிய ஆடுகள் மாயமானதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் மொபட்டில் 2 ஆடுகளை எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பூங்கொடி புகார் அளித்தார். போலீசார் சி.சி.டி.வி.கேமரா மூலம் கண்காணித்தபோது மொபட்டில் 2 ஆடுகளுடன் சென்றவர்தான் பூங்கொடி ஆடுகளை திருடியது தெரிய வந்தது. அவரது முகவரியை கண்டுபிடித்து சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பழையபேட்டை பகுதியை சேர்ந்த அமாவாசை என்பவரின் மகன் வினோத் குமார் (வயது 30) என்பது தெரியவந்தது. இவரது வீட்டில் உள்ளவர்கள் ஏற்கனவே 20 ஆடுகளை பரா மரித்து வந்த நிலையில் மேலும் 2 ஆடுகளை வாங்குமாறு வினோத்குமாரிடம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை வினோத்குமார் பதுக்கி வைத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு கட்டியிருந்த ஆட்டை திருடி சென் றதை ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து வினோத்குமாரை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர். பின்னர் 2 ஆடுகளையும் மீட்டு ஆட்டின் உரிமையானரான பூங்கொடியிடம் ஒப்படைத்தனர்.

    • பொருட்களை அடித்து சேதம்
    • சகோதரருக்கு வலை வீச்சு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பி.ஜே.நேசூ சாலையில் உள்ள ராமநாயக் கன்பேட்டை பகுதியை சேர்ந்த பல் டாக்டர் அறிவர சன் என்பவர் கிளினிக் நடத்தில் வருகிறார். இவரது மனைவி இளவரசியும் பல் டாக்டராவார்.

    இந்நிலையில் டாக்டர் அறிவரசனிடம் பல்சிகிச்சை பெற்ற நியூடவுன் பகுதியை சேர்ந்த இந்திராணி (வயது 60) திடீர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    அறிவரசனின் தவறான சிகிச்சையால் தனது தாய் இந்திராணி இறந்துவிட்டார் என் றும், இதே போல் பலரும் இறந்துவிட்டனர் என இந்தி ராணியின் மகன் ஸ்ரீராம்குமார் வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து மாவட்ட மருத்துவ இணை, இயக்குனர் மாரிமுத்து தலைமையில் மருத்துவ குழுவினர் மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டனர். அதில் பல் டாக்டர் அறிவரசன் மீது ஸ்ரீராம்குமார் அளித்த புகார்தவறானது எனவும், பல் டாக்டர் அறிவரசன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கலாம் எனவும் மருத்துவ அறிக் கையை அளித்ததையடுத்து கிளினிக் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    இந்நிலையில் இந்திராணி யின் மகன்கள் யுவராஜ், ஸ்ரீராம்குமார் மற்றும் சிலர் அடிக்கடி பல் கிளினிக்கிற்கு சென்று கிளினிக்கை மூடி- விடுங்கள் என்று மிரட்ட விடுத்து வந்தனர். நேற்று ஸ்ரீராம்குமார் கிளினிக்குள் திடீரென அத்துமீறி நுழைந்து அங்கிருந்த டாக்டர் அறிவசன், அவரது மனைவி டாக்டர் இளவரசி மற்றும் அறிவுரசனின் தாயார் தேன்மொழி ஆகிய 3 பேரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி, பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

    மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினார்.

    இதுகுறித்து டாக்டர் அறிவரசன் நகர போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.நகர போலீஸ் இன்ஸ்பெக்ட நாகாராஜ் விசாரணை நடத்தி, ஸ்ரீராம்குமாரை (33) கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யுவராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மலைப்பாதையில் கடும் நெரிசல்
    • போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்பொழுதும் ஒரு சீதோஷ்ண நிலை காணப்படுவதால் இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இங்குள்ள 14 கொண்டை ஊசி வளைவுகள் வழியாக சுற்றுலா பயணிகள் செல்லும் போது இயற்கைகாட்சிகளை ரசித்து செல்கின்றனர்.

    இங்கு படகு சவாரி, பூங்கா, செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.

    வாரந்தோறும் விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். அதன்படி நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

    கார், இருசக்கர வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகளால் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    அப்போது சுற்றுலா பயணிகள் கொண்டை ஊசி வளைவுகளில் கூட்டமாக நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    நேற்று மாலை சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    செயற்கை நீர் வீழ்ச்சி, பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு ஒரே நேரத்தில் வாகனத்தில் திரும்பியதால் கொண்டை ஊசி வளைவுகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

    மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது.

    இதனால் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும்
    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சு

    திருப்பத்தூர்:

    திதிருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவ ராக இருந்த மதன் குமார் தஞ்சாவூருக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் காஞ்சீபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) முனி சுப்ராயன், பதவி உயர்வில் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

    அவர் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார். அவருக்கு அலுவலக ஊழியர்கள், ஆசிரியர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    அதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர் முனி சுப்ராயன் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத் தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தேவை யான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    காலியாக உள்ள ஆசிரிய பணியிடங்களை நிரப்புதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும்.

    திருப்பத்தூர் மாவட் டத்தை கல்வியில் முதன்ை மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×