search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளினிக்கில் புகுந்து ரகளையில் ஈடுபட்டவர் கைது
    X

    கிளினிக்கில் புகுந்து ரகளையில் ஈடுபட்டவர் கைது

    • பொருட்களை அடித்து சேதம்
    • சகோதரருக்கு வலை வீச்சு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பி.ஜே.நேசூ சாலையில் உள்ள ராமநாயக் கன்பேட்டை பகுதியை சேர்ந்த பல் டாக்டர் அறிவர சன் என்பவர் கிளினிக் நடத்தில் வருகிறார். இவரது மனைவி இளவரசியும் பல் டாக்டராவார்.

    இந்நிலையில் டாக்டர் அறிவரசனிடம் பல்சிகிச்சை பெற்ற நியூடவுன் பகுதியை சேர்ந்த இந்திராணி (வயது 60) திடீர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    அறிவரசனின் தவறான சிகிச்சையால் தனது தாய் இந்திராணி இறந்துவிட்டார் என் றும், இதே போல் பலரும் இறந்துவிட்டனர் என இந்தி ராணியின் மகன் ஸ்ரீராம்குமார் வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து மாவட்ட மருத்துவ இணை, இயக்குனர் மாரிமுத்து தலைமையில் மருத்துவ குழுவினர் மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டனர். அதில் பல் டாக்டர் அறிவரசன் மீது ஸ்ரீராம்குமார் அளித்த புகார்தவறானது எனவும், பல் டாக்டர் அறிவரசன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கலாம் எனவும் மருத்துவ அறிக் கையை அளித்ததையடுத்து கிளினிக் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    இந்நிலையில் இந்திராணி யின் மகன்கள் யுவராஜ், ஸ்ரீராம்குமார் மற்றும் சிலர் அடிக்கடி பல் கிளினிக்கிற்கு சென்று கிளினிக்கை மூடி- விடுங்கள் என்று மிரட்ட விடுத்து வந்தனர். நேற்று ஸ்ரீராம்குமார் கிளினிக்குள் திடீரென அத்துமீறி நுழைந்து அங்கிருந்த டாக்டர் அறிவசன், அவரது மனைவி டாக்டர் இளவரசி மற்றும் அறிவுரசனின் தாயார் தேன்மொழி ஆகிய 3 பேரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி, பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

    மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினார்.

    இதுகுறித்து டாக்டர் அறிவரசன் நகர போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.நகர போலீஸ் இன்ஸ்பெக்ட நாகாராஜ் விசாரணை நடத்தி, ஸ்ரீராம்குமாரை (33) கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யுவராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×