search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elagiri Hill"

    • ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    ஏலகிரி மலையில் வெளிநாட்டில் இருந்து வீரர்களை அழைத்து 'பாராகிளைடிங்' என்ற பறவை போல பறந்தபடி இயற்கையை ரசிக்கும் வசதி கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    மேலும் இந்த சாகச விளையாட்டுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு 'பாராகிளைடிங்' தெரியாத சாதாரண மக்களும், வானத்தில் பறந்து பரவசமடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு பறப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது.

    'பாராகிளைடிங்' தெரியாத சாதாரண மக்கள் பங்கேற்க விரும்பினால் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.

    தகுந்த விமானியுடன் இவர்கள் பறக்க முடியும். மலை மேட்டுப்பகுதியில் இருந்து பாராகிளைடிங் செய்து, சுமார் 20 நிமிடங்கள் வானத்தில் பறந்து இயற்கை அழகை, கழுகு பார்வையில் ரசிக்கலாம்.

    பறக்க தொடங்கும் இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஆஞ்ச நேயர் கோவில் அருகே 5 ஏக்கர் நிலத்தில் தரை இறங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் மத்தியில் பாராகிளைடிங் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் சில ஆண்டுகளில் முடக்கப்பட்டது. தற்போது

    பாராகிளைடிங் சாகச பயிற்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

    இதனையடுத்து மீண்டும் பாரா கிளைடிங் தொடங்க ஆயத்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்:-

    ஏலகிரி மலையில் அனைத்து வசதிகளும் தற்போது செய்யப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு சுற்றுலா நிதி திட்டத்தில் கோடை விழா அரங்கம் உள்ளிட்டவைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பல மாநிலங்களை சேர்ந்த மக்களின் கனவாக இருக்கும் ஏலகிரி மலையில், விண்ணில் பறக்கும் பாராகிளைடிங் வசதி மீண்டும் தொடங்கப்படும். அதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    விரைவில் ஏலகிரி மலையில் பறக்கும் சாகச நிகழ்ச்சி நடைபெறும்' என்றார்.

    • நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலைக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலியானார். 2 பேர் காயமடைந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புத்துக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் மோகன் குமார் (வயது 17), வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதேப் பகுதியை சேர்ந்தவர்கள் சேகர் என்பவரின் தினேஷ் (19) மற்றும் சவுந்தர். இவர்களும் அதே கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    இவர்கள் 3 பேரும் நேற்று ஏலகிரி மலைக்கு சென்று ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு இடங்களை பார்த்து விட்டு 3 பேரும் ஒரே பைக்கில் வீட்டிற்கு திரும்பினர்.

    14-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள முத்தனாவூர் அருகே சென்றபோது பைக் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது. இதில் மோகன்குமார் உள்பட 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மோகன்குமார் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஏலகிரி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலைப்பாதையில் கடும் நெரிசல்
    • போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்பொழுதும் ஒரு சீதோஷ்ண நிலை காணப்படுவதால் இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இங்குள்ள 14 கொண்டை ஊசி வளைவுகள் வழியாக சுற்றுலா பயணிகள் செல்லும் போது இயற்கைகாட்சிகளை ரசித்து செல்கின்றனர்.

    இங்கு படகு சவாரி, பூங்கா, செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.

    வாரந்தோறும் விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். அதன்படி நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

    கார், இருசக்கர வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகளால் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    அப்போது சுற்றுலா பயணிகள் கொண்டை ஊசி வளைவுகளில் கூட்டமாக நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    நேற்று மாலை சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    செயற்கை நீர் வீழ்ச்சி, பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு ஒரே நேரத்தில் வாகனத்தில் திரும்பியதால் கொண்டை ஊசி வளைவுகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

    மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது.

    இதனால் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒரே நேரத்தில் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது
    • வாகன ஓட்டிகள் அவதி

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

    விடுமுறை நாட்களில் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இங்கு பத்துக்கும் மேற்பட்ட தனியார் விளையாட்டுக் கூடங்கள் அமைந்துள்ளன.

    மேலும் அரசு சுற்றுலாத் தலங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, உள்ளன. கடந்த 2 நாட்களாக அனைத்து சுற்றுலா தளங்களும் அதிக கூட்டம் நெரிசலோடு காணப்பட்டன.

    நேற்று இங்கு உணவு விடுதிகளும், தங்கும் விடுதிகளும் கூட்டத்தால் அலைமோதின. நேற்று மாலை ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்று வீடு திரும்பும் போது ஒரே நேரத்தில் வாகனத்தில் திரும்பியதால் நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

    • கடந்த 5 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறவில்லை
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலை வரை செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

    ஒவ்வொரு வளைவுகளுக்கு தமிழ் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. பயணிகள் கொண்டை ஊசி வளைவுகளில் செல்லும் போது இயற்கை காட்சிகளையும் ரசித்து செல்கின்றனர்.

    ஏலகிரி மலையில் கோடை விழா மே மாதத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று மற்றும் கோடை விழா அரங்கம் பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 5 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறவில்லை.

    கோடை விழா இந்த ஆண்டு நடத்துவதற்காக பணிகள் குறித்து கடந்த வாரம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதனையடுத்து நேற்று மாலை ஏலகிரி மலை பகுதியில் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது ஏலகிரி மலையில் உள்ள இயற்கை பூங்கா, கோடை விழா அரங்கம் மற்றும் படகு இல்லங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, மணவாளன், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்தியாசதிஷ்குமார், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ் கே சதிஷ்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமால் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 5 ஆண்டுகளாக நடைபெறவில்லை
    • கலை நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

    திருப்பத்தூர்:

    ஏலகிரி மலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.

    ஆலோசனை கூட்டம்

    இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ் வொரு ஆண்டும் 2 நாட்கள் கோடை விழா நடத்துவது வழக்கம். ஆனால் கொரோனா மற்றும் கோடை விழா அரங்கம் கட்டுதல் உள்ளிட்ட சில காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளாக ஏலகிரி மலையில் கோடை விழா நடத்தவில்லை.

    இந்த ஆண்டு கோடை விழா நடத்துவது குறித்து கலெக் டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரி களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

    அப்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

    ஏலகிரி மலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கோடை விழாக்கள் தொடர்ந்து 2 நாட்கள் சிறப்பாக நடத்த வேண்டும். விழாகலையரங்கம் முன்பும், ஏலகிரி மலை அடிவாரத்திலும் அலங்கார வளைவு அமைக்க வேண் டும்.

    இயற்கை பூங்காவில் (நேச்சுரல் பார்க்) தோட் டக்கலைத் துறை சார்பில் காய்கறிகளைக் கொண்டு விலங்குகள் மற்றும் பற வைகள் உள்ளிட்ட உருவம் அமைக்க வேண்டும். சுற் றுலாப் பயணிகளின் வச திக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏலகிரி மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.

    போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக வெளியூர்களில் இருந்து கார்களில் வரும் சுற்றுலா பயணிகள் மலை அடிவாரத்தில் காரை நிறுத்திவிட்டு பஸ்சில் மலைக்கு வந்தால் அவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். கார் நிறுத்துவதற்காக மலை அடி வாரத்திலும் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    கலை நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர் களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.அரசு திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும். மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை போலீஸ் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்த வேண்டும். ஒரு பைக்கில் இருவர் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.

    மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை சாலை ஓரங்களில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். ஏலகிரி மலை வனப்பகு தியில் தற்போது கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. குறிப்பாக சுவாமி மலை அருகே அதிக அளவில் கரடிகள் உள்ள தால், வனத்துறை அனுமதி யின்றி சுற்றுலாப் பயணி கள் அங்கு செல்வதை தடுக்க வேண்டும்.

    சனி மற்றும் ஞாயிறு 2 நாட்கள் நடக்கும் இந்த விழாவில், ஞாயிற் றுக்கிழமை அன்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் அதற்கேற்ற வாறு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பிறகு ஏலகிரி மலை அடிவாரத் தில் இருந்து மலை உச் சிக்கு அரசு பஸ் தவிர்த்து மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக் கூடாது.

    கலெக்டர் தகவல்

    குழந்தைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர் களை கவரும் விதமாக கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும்.குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் கோடை விழா நிகழ்ச்சி இம்மாதம் இறுதி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் (சனி,ஞாயிறு) இரு நாட்கள் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இன் னும் உறுதி செய்யவில்லை. மற்றொரு ஆலோசனை கூட்டம் ஏலகிரி மலையில் விரைவில் நடத்தப்படும். அதில் கோடை விழா நடத்தும் குறிப்பிடப்படும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர் மதி, மாவட்ட திட்ட இயக்குனர் செல்வ ராசு,கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜ சேகர், ஹரிகரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகே சன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சோதனைச்சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்க அதிகாரி உத்தரவு
    • பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைக்க இடம் தேர்வு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

    அதிகாரி ஆய்வு

    இங்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் கணக்கெடுப்பு, அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்ட சாலை பணிகள், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சென்னையில் இருந்து ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குனர் சாமுவேல் இன்பதுரை, ஊரக வளர்ச்சித் துறையின் உதவி செயற்பொறியாளர் கணேஷ் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்னையிலிருந்து நேற்று ஏலகிரி மலைக்கு ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு கிராம பகுதிக்கு சென்று அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கணக்கெடுப்புகள் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்ட சாலை பணிகள், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம், ஏலகிரி மலை ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தூளாக்கும் எந்திரத்தின் அறை உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பிளாஸ்டிக் குப்பைகளை தூளாக்கும் இயந்திரத்தை பார்வையிட்டு குப்பை கழிவுகளை அகற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தி ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் வருகை புரியும் போது ஊராட்சி சார்பில் செக் போஸ்ட் அமைத்து பயணிகள் யாருவது பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருகிறார்களா என சோதனை செய்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார.

    மேலும் இதனைத் தொடர்ந்து நீலாவூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைக்க இடம் தேர்வு செய்தனர்.

    மேலும் எம் எல் ஏ தொகுதி மேம்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப் பணியை ஆய்வு செய்தனர்.

    பின்னர் ஏலகிரி மலையில் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்து நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும், தற்போது மேற்கொள்ளப்பட்ட உள்ள பணிகள் குறித்தும் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், உதவி பொறியாளர்கள் சேகர், பழனிச்சாமி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோரிடம் கேட்டறிந்தனர்.

    மேலும் இந்த கள ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில் குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அ.திருமால் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்
    • நுழைவு கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்படுகிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. மலைக்கு செல்லும் பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் ஆயுதபூஜை மற்றும் காலாண்டு தேர்வு விடுப்பு என தொடர்ந்து விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மோட்டார் சைக்கிள், கார், மினி வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் நேற்று ஏலகிரி மலைக்கு வந்தனர்.

    சுற்றுலா பயணிகள் அங்குள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசித்தனர்.

    இங்குள்ள படகு துறையில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் படகில் சவாரி செய்தும், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    சிறுவர் பூங்கா அருகே உள்ள வைல்டு தீம் பார்கில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செயற்கை அருவியில் குளித்தும், நீச்சல் அடித்தும் மகிழ்ந்தனர். இதனால் ஏலகிரி மலை பகுதியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாக காட்சியளித்தனர்.

    ஏலகிரி மலையில் படகுத்துறை வளாகத்திற்கு செல்ல ஒருவருக்கு ரூ‌.15 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே போல ஏலகிரி மலையில் உள்ள இயற்கை பூங்காவிற்கு செல்லவும் ரூ.15 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த இரண்டு இடங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே செய்யப்படவில்லை. பண வசூலில் காட்டும் அக்கறை சுற்றுலா பயணிகளுக்கு செய்து தரும் அடிப்படை வசதிகளில் எந்தவித ஈடுபாடு காட்டாமல் விடப்பட்டுள்ளது.

    குறிப்பாக படகுத்துறை வளாகம் மற்றும் இயற்கை பூங்கா வளாகத்தில் உள்ள கழிவறைகள் பராமரிப்பு இல்லவே இல்லை.அங்கு வந்திருந்த பெண்கள் கழிவறைக்கு செல்லும்போது சொல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியதாக குற்றம் சாட்டினர்.

    வசதி படைத்தவர்கள் லாட்ஜ் மற்றும் விடுதிகளில் உள்ள கழிவறையை பயன்படுத்துகின்றனர். ஏழைப் பெண்களுக்கு அது போன்று வசதிகள் இருப்பது தெரியாததால் பூங்காவில் உள்ள கழிவறைகளை பயன்படுத்தினர். நுழைவு கட்டண வசூலில் ஒரு சதவீதத்தை பயன்படுத்தினால் கூட கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க முடியும்.

    இதே போல ஏலகிரி மலை பூங்காவில் குடிநீர் வசதி மிகவும் குறைவாக உள்ளது. பொதுமக்கள் கடைகளில் தண்ணீர் வாங்கி குடிக்கும் அவல நிலை உள்ளது.

    மலையில் சுத்தமான தண்ணீர் இருந்தும் குடிதண்ணீர் வசதி செய்யப்படவில்லை.

    பூங்காவிற்கு வரும் பொது மக்களிடம் நுழைவு கட்டணம் என்ற பெயரில் பண வசூல் படுஜோராக நடக்கிறது. ஆனால் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் எந்தக் கவனமும் செலுத்தப்படவில்ல. இதனால் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பெண்கள் படாதபாடு படுகின்றனர்.

    மாவட்ட அதிகாரிகள் அடிக்கடி ஏலகிரி மலையில் சோதனை நடத்தி இது போன்ற அவல நிலையை போக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×