என் மலர்
திருப்பத்தூர்
- 10 பாட்டில்கள் பறிமுதல்
- சிறையில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசிதலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவா சன் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சிரெட்டியூர் அருகே சென்றபோது குண்டு மாரி யம்மன் வட்டம் பகுதியை சேர்ந்ததிருப்பதி என்பவரின் மகன் சேட்டு (வயது 40) என்ப வர் ஒரு வீட்டின் பின்புறம் டாஸ்மாக் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்.
அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவ ரிடமிருந்து 10 மது பாட்டில் கள் பறிமுதல் செய்யப்பட் டன. பின்னர் அவரை போலீ சார் திருப்பத்தூர் கோர்ட் டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- புகைப்படத்தை காண்பித்து பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு
- கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது சிக்கினார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதமாக வயதான முதியவர்களை குறிவைத்து நகை மற்றும் பணம் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜாவூர் பகுதியில் பட்டப்பக லில் முதியவர்களிடம் நைசாக பேசி நகை பணத்தை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் திருடி சென்றனர். அப்போது அருகே உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தபோது தள்ளபாடி பகுதியை சேர்ந்த மைதிலி என்பது தெரியவந்தது.
வயது முதிர்ந்த தம்பதியர் இருக்கும் வீட்டை நோட்டமிட்டு அவர்களிடம் நூதனமாக பேச்சு கொடுத்து கொள்ளைய டிப்பதில் அந்த பெண் கை தேர்ந்தவர் என கூறப்படுகிறது. மேலும் இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு உத்தரவின் பேரில் கிராமிய சப்-இன்ஸ்பெக்டர் அகி லன் தலைமையில் போலீசார் கொரட்டி, தோரணம்பதி, சின்னாரம்பட்டி, விஷமங்கலம், பேராம்பட்டு மற்றும் பல் வேறு ஊர்களில் மைதிலி புகைப்படத்தை காண்பித்து விழிப் புணர்வில் ஈடுபட்டனர். புகைப்படத்தில் உள்ள பெண் மைதிலி வந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
- 2 பவுன் தங்க நகையை மீட்டனர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் வாணியம்பாடி அருகே குந்தானி மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் விநாயகம் (வயது 40) என்பது தெரிய வந்தது.
மேலும் இவர் நாட்டறம்பள்ளி அடுத்த மல்லபள்ளி சுண்ணாம்பு குட்டை பகுதியில் வசித்து வரும் அமராவதி (62) என்பவரின் வீட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருடியது ஒப்புக்கொண்டார். இதனையடுத்து விநாயகத்தை போலீசார் கைது செய்து 2 பவுன் தங்க நகையை மீட்டனர்.
பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- காப்பகத்தில் இருந்து அவரை வரவழைத்து அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்
- தகவல் வாட்ஸ்-அப் குழுவில் பகிரப்பட்டதால் கண்டுபிடித்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலைகளில் சுற்றித்திரிந்தார்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு மேட்டுசக்கரக்குப்பம் பகுதியில் உள்ள காப்பகத்தில் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.
இது குறித்து தகவல் வாட்ஸ்-அப் குழுவில் பகிரப்பட்டது. அந்த தகவலை பார்த்த கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீசார், ஜோலார்பேட்டை போலீசாருடன் தொடர்பு கொண்டு இதுகுறித்த விவரங்களை கேட்டனர்.
போலீசாரால் மீட்கப்பட்டவர் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த வி.பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த கவுரவன் (வயது 80) என்பதும், இவர் கடந்த 5-ந் தேதி காணாமல் போய்விட்டதாக அவரது உறவினர்கள் புகார் கொடுத்திருப்பதும் தெரியவந்தது.
பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்த அவரின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் காப்பகத்தில் இருந்து அவரை வரவழைத்து அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
- 50 பாட்டில்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்
ஆம்பூர் அடுத்த கொத்தூர் பகுதியில் ரீசன்ட் (வயது 60). என்பவர் வெளிமாநில மதுவை விற்பதாக உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது ரீசன்ட் வெளிமாநில மதுவை பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து உமராபாத் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போதை பொருட்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் உமராபாத் பஸ் நிலையத்தில் நவ நீத கிருஷ்ணன் (வயது 30) என்பவர் பங்க்கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பங்க்கடையில் சோதனை செய்தனர். அப்போது கடையில் குட்கா போன்ற போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. போலீசார் குட்கா பாக்கெட் கடை பறிமுதல் செய்தனர்.
மேலும் நவநீதகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது சம்பந்தமாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 மணி நேரம் தாமதமாக சென்னை நோக்கி சென்றது
- பயணிகள் கடும் அவதி
ஜோலார்பேட்டை:
கர்நாடகா மாநிலம், பெங்களூரில்இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்னை நோக்கி சென்றது.
கர்நாடகா மாநிலம், பெங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை, காட்பாடி, வழியாக தினமும் சென்னை செல்கிறது.
அதன்படி வழக்கம் போல் நேற்று காலை 6மணி அளவில், லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் பெங்களூரில் புறப்பட்டது.
அப்கிபோது கிருஷ்ணராஜபுரத்தில் ரெயில் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 1 மணி நேரம் தாமதமாக குப்பம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.
அங்கிருந்து ஜோலார்பேட்டை செல்ல ரயில் புறப்பட்டு சென்றது. அப்போது சோமநாயக்கன்பட்டி அருகே சென்றபோது மீண்டும் ரெயில் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்ட்டது. இதைத் தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் என்ஜின் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் காலத்தாமதமாக இந்த ரெயில் ேஜாலார்பேட்டையில் வந்து நின்றது. பின்னர் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி சென்றனர். 2 மணி நேரம் காலத்தாமதாக வந்த ரெயிலில் பயணம் செய்தவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
2 இடங்களல் ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், ஏராளமான பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி, ஜோலார்பேட்டையில் இருந்து பஸ்கள் மூலம் சென்னை சென்றனர். இதனால் அங்கு பரபரப்ப ஏற்பட்டது.
- சிகிச்சை பலனின்றி வாலிபர் சாவு
- வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்றபோது பரிதாபம்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வநாதன் வயது (60) இவருடைய மருமகன் கார்த்திகேயன் (25).
2 பேரும் நேற்று முன்தினம் வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி பைக்கில் வந்தனர். அப்போது ஆம்பூர் கன்னிகாபுரம் சாலையில் சென்ற மாட்டு வண்டி மீது பைக் மோதியதில் சம்பவ இடத்திலே செல்வநாதன் உயிரிழந்தார்.
ஆபத்தான நிலையில் கார்த்திகேயன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரும் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வட மாநிலத்தை சேர்ந்தவர்
- பிளாட்பாரத்தில் டாக்டருடன் ரெயில் நிலைய அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்
ஜோலார்பேட்டை:
மேற்கு வங்காளம் மாநிலம், சோட்டோ மொல்லக்கல்லி பகுதியைச் சேர்ந்தவர் நிதாய் ஹெவுலி (வயது 70). இவர் மேற்கு வங்காளம் ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஷாலிமரில் இருந்து ஈரோட்டிற்கு செல்ல முன் பதிவு செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியில் அமர்ந்து பயணம் செய்தார். ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று ஜோலார்பேட்டை அருகே வந்தபோது நிதாய் ஹெவுலி திடீரென மயங்கி கீேழ விழுந்தார்.
இதனை பார்த்த சக பயணிகள் டிக்கெட் பரிசோதரிடம் கொடுத்த தகவலின் பேரில், ஜோலார்பேட்டை ரெயில்நிலைய பிளாட்பாரத்தில் டாக்டருடன் ரெயில் நிலைய அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்.
ரெயில் நிலையம் வந்ததும், அதிகாரிகள் முதியவரை இறக்கி பரிசோதனை செய்தனர். இதில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தனர். இதனையடுத்து ரெயில்வே போலீசார் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆயுத அறையில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை பார்வையிட்டார்
- ஜோலார்பேட்டை ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் ஒளிரும் விளக்குகள் பொருத்தம்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் பயன்படுத்தும் பதிவேடுகளள், ஆவணங்கள் மற்றும் ஆயுத அறையில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை ஆய்வு செய்தார்.
மேலும் போலீஸ் நிலையம் மற்றும் குடியிருப்பில் தேவைப்படும் வசதிகள் மற்றும் குறைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து விபத்துக்களை தடுக்கும் வகையில் தாமலேரி முத்தூர் மேம்பாலம், ஜோலார்பேட்டை ஜங்ஷன், சந்தைக்கோடியூர், பொன்னேரி, மண்டலவாடி, கேத்தாண்டப்பட்டி, பச்சூர், உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டு உள்ள ஒளிரும் எச்சரிக்கை விளக்குகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- வீட்டை சுற்றி பார்ப்பதாக கூறி கைவரிசை
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த ராஜாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர், கசிநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், இவரது மனைவி கலைச்செல்வி சுந்தரம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். வீட்டில் இளங்கோவின் தந்தை குப்பன் (75) தாய் சாந்தி(70) ஆகியோர் மட்டும் இருந்தனர்.
அப்போது, இளங்கோவின் வீட்டுக்கு இளம்பெண்ணுடன் வந்த ஒருவர் குப்பனிடம், "உங்கள் மகன் இளங்கோவுடன் பள்ளியில் ஒன்றாக நானும் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்" என தன்னை அறிமுகப்படுத்தி க்கொண்டு முதியவர்களிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.
இதை உண்மை என நினைத்த குப்பன் இருவரையும் வீட்டுக்குள் அழைத்துள்ளார். அப்போது, வீட்டை சுற்றி பார்ப்பதாக கூறிய அவர்கள் சிறிது நேரம் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வீட்டை சுற்றி பார்த்துவிட்டு சென்றனர்.
அதன்பிறகு, குப்பன் வீட்டில் இருந்த ஓர் அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோ திறந்து கிடந்தது. உடனடியாக அதை சோதனை செய்து பார்த்தார்.
அப்போது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுப்போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கந்திலி போலீஸ் நிலையத்தில் இளங்கோ புகார் செய்தார். அதன்பேரில், கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர்கள் வீட்டில் நூதன முறையில் கைவரிசை காட்டிய அந்த இளம் ஜோடி யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 22-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 23-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு ஆடி பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாளுடன் பெருமாள் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. கொடிமரத்திற்கு பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தினந்தோறும் காலையில் திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு ஆண்டாளுடன் பெருமாள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
19-ந் தேதி ஆண்டாளுடன் தங்க பல்லக்கு பாவை மற்றும் சூர்ணாபிஷேகம் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும், 20-ந் தேதி ஆண்டாளுடன் குதிரை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. 21-ந் தேதி அன்னவாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 22-ந் தேதி தேரில் ஆண்டாளுடன் பெருமாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 23-ந்தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு தங்கதோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் மற்றும் ஆசிர்வாதம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகிநாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் சரக தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






