என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து வெளியில் ஓடினர்
    • தீயணைப்பு வீரர்களும் தீயை அணைத்தனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பஸ் நிலையத்தில் உள்ள பிரபல தனியார் பிரியாணி ஓட்டலில் நேற்று பிற்பகல் திடீரென அடுப்பு புகை கூண்டின் மேல் பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

    இதனால் அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியில் ஓடினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வாணியம் பாடி டவுன் போலீசாரும், தீயணைப்பு வீரர் களும் தீயை அணைத்தனர்.

    சிறிது நேரத்தில் தீ அணைக்கப் பட்டதை அடுத்து வாடிக்கையாளர்கள் வழக்கமாக ஓட்டலுக்கு வந்து சாப்பிட்டுட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • டிரைவர் கைது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் சேர்ந்த மகேந்திரன் மகன் கோபி (வயது 25).

    இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கோபி கடந்த 3 மாதத்திற்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று காலை கோபி தனது மோட்டார் சைக்கிளிலில் பச்சூர் பகுதியில் இருந்து டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    பச்சூர் ரெயில்வே கேட் அருகே சென்றபோது எதிரே வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த கோபியை அங்கிருந்த பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர்மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோபி இறந்து விட்டார்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டா பகுதியைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் சுரேஷ் (40) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • திட்டங்களை செயல்படுத்த 3 மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    அரசின் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

    அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நந்தகோபால், திருப்பூருக்கு ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் விசரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் இருந்து ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி தேசிய நெடுஞ் சாலைக்கு திரும்பியது. அப் போது கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகன உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, தேசிய நெடுஞ் சாலைக்கு திரும்பிய லாரி யின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் உதிரி பாகங் கள் ஏற்றி சென்ற லாரி டிரைவர் திருவள்ளூர் மாவட் டத்தை சேர்ந்த குணசேகரன் (வயது 50) என்பவர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    அங்கிருந்தவர்கள் உடனடி யாக பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து அரை மணிநேரம் போராடிஇடிபா டுகளில் சிக்கி இருந்த டிரை வர் உடலை மீட்டனர். பின் னர் ஆம்புலன்ஸ் வரவழைக் கப்பட்டு அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர்.

    விபத்து காரணமாக ஒரு மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்ப வம் குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    மேலும் விபத்து குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 21-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகிற 21-ந் தேதி (வெள் ளிக்கிழமை) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனி யார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

    முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது. எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 8-ம் வகுப்பு முதல் பட்டய படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம் முடித்த ஆண்கள், பெண்கள் இம்முகாமில் கலந் துக் கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை கலெக் டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க அறிவுரை
    • பணியாளர்கள் அனைவரும் சரியாக பணிகளை செய்கிறார்களா என ேசாதனை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் சரியாக பணிகளை செய்கிறார் களா என ஆய்வு செய்தார். மேலும் சிகிச்சை குறித்து நோயா ளிகளிடம் கேட்டறிந்தார். அதன் பிறகு மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் சென்று ஆய்வு செய்தார். அரசு மருத்துவமனையில் அனைத்து இடங்களும் சுகாதார முறையில் தூய்மையாக வைத்துக் இருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன், டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் உண்டு உறைவிட பள்ளி, விடுதி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடிரென பார்வையிட்டு ஆய்வு செய்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நல உதவி திட்டங்களை வழங்கு வதற்காக நேற்று முன்தினம் வருகை புரிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆம்பூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு ஏலகிரி மலையில் தங்கினார்.

    அதன் பிறகு நேற்று காலை திடிரென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்ப பள்ளியில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் விடுதியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் பிறகு விடுதியில் உள்ள மாணவர்களுக்கு கிரிக்கெட், வாலிபால், கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டு உபகர ணங்களை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து அத்தனாவூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவர்கள் குறித்தும் அவர்களுடைய பணிகள் குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதனை தொடர்ந்து விஷ பூச்சிகள் பாம்பு போன்ற பல்வேறு விஷப்பூச்சிகளுக்கு மருந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டது உள்ளதா என்று ஆய்வு செய்து ஏலகிரி மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ மனையில் 24 மணி நேரமும் சேவை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதில் நெடுஞ்சா லைத்துறை அமைச்சர் எ.வ வேலு, மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலர் ட்ரேஷ் அகமத், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ வில்வநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் அ.திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார், அரசு மருத்துவர் சுபாஷிணி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
    • ஜாதிசான்றிதழ் வழங்குவதில் சற்று பின்தங்கி உள்ளது

    திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு ஆகியோர் தலைமையில் நடந்தது.

    எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, டி.எம்.கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வரவேற்று பேசினார்.

    அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    மாவட்டத்தில் பல துறைகள் சிறப்பாக செயல்படுகிறது. சிலை துறைகளின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை. அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து மாவட்டத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஜாதிசான்றிதழ் வழங்குவதில் சற்று பின்தங்கி உள்ளது.

    இதனை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி விரைந்து வழங்க வேண்டும். மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    பயோமெட்ரிக் கருவிகள் தேவையான அளவு உள்ளதா எனவும், தேவை இருப்பின் தெரிவித்தால் விரைந்து வழங்கப்படும்.

    மேலும் ஏலகிரிமலையில் கட்டப்படும் விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளையும், திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கட்டுமான பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்த அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கதுறை அரசு செயலாளர் டாக்டர் டேரேஸ் அகமது, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு மற்றும் அனைத்து துறை அதிகாரிள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
    • 2,508 பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

    திருவள்ளுவர் இன்று உயிருடன் இருந்து இருந்தால் திராவிட மாடல் ஆட்சிதான் சிறப்பான ஆட்சி என எழுதி இருப்பார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லாரும் சமம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார்துறை மூலம் 4700 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்திலேயே மலைவாழ் மக்கள் மற்றும் நரிக்குறவர்களுக்கும் அதிக அளவில் ஜாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகல் நிறைநத் மாவட்டமான திருப்பத்தூரில் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டதை தட்டி எழுப்பி 2508 பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. பெண்களை படி படி என கூறிய இயக்கம் தி.மு.க. திருப்பத்தூர் மாவட்டத்தில்தான் அதிக பெண்கள் ஒன்றியக்குழு தலைவர்களாக பெண்கள் உள்ளனர்.

    திராவிடத்தையும் - ஆன்மீகத்தையும் யாரும் பிரித்து பார்க்க முடியாது. ஆன்மீகம் என்ற பெயரை கூறி யாரும் இங்கு கடை திறக்க முடியாது. 164 அர்ச்சர்களுக்கு தலா ரூ.1000 கொடுக்கும் திட்டம் இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. ரூ.11 கோடியில் 117 கோவில்கள் புரணமைக்கும் பணி நடந்து வருகிறது.

    மகளிர் சுயஉதவிக்குழுக்களை தமிழகத்தில் ஏற்படுத்தியது திமுக அரசுதான். அதிமுக ஆட்சியில் அது சீரழிக்கப்பட்டது.

    சுயஉதவிக்குழுக்கள்

    அதன்பின் வந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் 4 லட்சத்து 48 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழு இருந்தது. தற்போது உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் ஒரு லட்சம் மகளிர் சுயஉதவிக்குழு அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.கே.சதிஷ்குமார், நகரமன்ற தலைவர்கள் காவியா விக்டர், சங்கீதாவெங்கடேஷ், உமாபாய் சிவாஜி கணேசன், ஏஜாஜ் அஹமத், ஒன்றியக்குழு தலைவர்கள் எஸ்.சத்திய சதிஷ் குமார், விஜியா அருணாசலம், திருமதி திருமுருகன், சங்கீதாபாரி, வெண்மதி, சுரேஷ்குமார், நாட்டறம்பள்ளி பேரூராட்சி தலைவர் சசிகலா சூரியகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நன்றி கூறினார்.

    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் இருந்து 8 பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு ஆட்டோ இன்று காலை ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை ராஜா சேகரன் என்பவர் ஓட்டி சென்றார்.

    பெட்ரோல் நிரப்பிக்கொண்டு லாரி தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத பைக் மீது மோதி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.

    இதில் டிரைவர் ராஜசேகரன், 8 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    சாலையில் கவிழ்ந்த ஆட்டோவால் ஆம்பூர் -வாணியம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்டோ டிரைவரையும் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து ஆட்டோவை அப்புறப்படுத்தினர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
    • ரூ.74 கோடியில் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடியில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற திட்டப்பனைகளை துவக்கி வைக்கும் விழா நடந்தது. விழாவுக்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வரவேற்று பேசினார். சிறப்பு திட்ட செயலாக்கதுறை செயலாளர் டாக்டர் டேரேஸ் அஹமத், எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, டி.எம்.கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.74 கோடியில் மதிப்பில் ரூ.14,253 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்

    அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. தலைமையிலான அரசு பதவியேற்று 26 மாதங்கள் ஆகிறது. இதில் 260க்கும் அதிகமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இங்கு ரூ.74 கோடியில் 14253 பேருக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் லட்சியம். அதற்கு முன்மதியாகத்தான் இங்கு அனைத்து தரப்பினரும் வந்துள்ளதை பார்க்கும் போது தெரிகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் திட்டம் செல்ல வேண்டும் என்பதே லட்சியமாக கொண்டு அரசு செயல்படுகிறது.

    அரசு பஸ்சில் மகளிர் கட்டணமின்றி செல்ல வேண்டும் என்று திட்ட மூ லம் 310 கோடி பெண்கள் பயன் அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இத்திட்டததில் 2.65 கோடி மகளிர் பயன் அடைந்துள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தில் தமிழகத்தில் 2லட்சம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 1800 மாணவிகளுக்கு இத்திட்டன் மூலம் மாதம் தோறும் ரூ.1000 அவரது வங்கி கணக்கில் செல்கிறது.காலை சிற்றுண்டி திட்டத்தில் தமிழகத்தில் 17 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மருத்துவ செலவு பாதியாக குறைந்துள்ளது. இத்திட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 175 பேர் பயன் அடைள்ளனர். இன்னூயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திடட்த்தில் 1100 பேர் பயன் அடைந்துள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 63400 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் 2508 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்ப ட்டுள்து. திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.56 கோடியிலும், ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 24 கோடியிலும், வாணியம்பாடி அரசு ஆஸ்பத்தியில் ரூ.23.65 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அனைவரும் எதிர்பார்க்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

    விளையாட்டு அரங்கம்

    வாணியம்பாடி தொகுதியில் ரூ.3 கோடியில் சிறுவிளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. மாவட்ட விளையாட்டு அரங்கம் ரூ.15 கோடியில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நாட்டறம்பள்ளி அருகே தொழிற்பேட்டை அமைக்க தமிழக முதல்வரிடம் பரிந்துரைக்கப்படும்.தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பார்த்து ஒன்றியத்தின் மற்ற மாநிலங்களில் செய ல்படுத்தப்படு வருகிறது.

    இதன்மூலம் தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 120 மாணவர்களில் 2 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி
    • தேர்வு முடிவில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த ரெட்டி தோப்பு பகுதியில் ஆண்கள் மட்டுமே பயிலும் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது.

    இந்த கல்லூரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கல்லூரி செமஸ்டர் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் கடந்த ஆண்டு 2-ம் ஆண்டு படித்த 120 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இவர்கள் தற்போது 3-ம் ஆண்டு படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தேர்வு முடிவில் 120 மாணவர்களில் 2 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியானது.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தேர்வு முடிவில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி இன்று காலை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    ×