என் மலர்
திருப்பத்தூர்
- அண்ணன் - தம்பி 3 பேர் கைது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் பழனி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி (வயது 42). இவர் வேலூர் மத்திய ஜெயிலில் டெக்னிக்கல் அசிஸ்டெண் டாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த சுப் பிரமணி குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட் டது.
நேற்று முன்தினம் ரஜினி வீட்டில் இருந்து வேலூர் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சுப்பிர மணி என்பவரின் மகன்கள் முருகன் (47), காத்தவராயன் (37), சுரேஷ் (35) அன்பழகன் (40) மற்றும் சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்த ஞானஒளி என்பவரின் மனைவி சாலம் மாள் (45) ஆகியோர் ரஜி னியை வழி மறைத்து ஏன் இந்த வழியில் வருகிறாய் என
திட்டி உள்ளனர்.
இதில் அவர்களுக்குள் வாக் குவாதம் ஏற்பட்டு, ஆத்திரம் அடைந்த முருகன், காத்தவ ராயன், சுரேஷ், அன்பழகன் ஆகியோர் ரஜினியை தாக்கி உள்ளனர். இதை ரஜினியின் தாயார் ராணி தடுக்க முயன்ற போது அவரை கீழே தள்ளியதில் காலில் முறிவு ஏற்பட் டது. சாலம்மாள் என்பவர் கல்லை எடுத்து ரஜினி மீது வீசியதில் வாய் மீது பட்டு மூன்று பற்கள் உடைந்தது.
இது குறித்து ரஜினி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக் டர் பிரபு வழக்குப் பதிவு செய்து முருகன், காத்தவரா யன், சுரேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்தார். அன் பழகன் மற்றும் சாலம்மாள் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- 2 மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
- கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந் திரன் மனைவி சுமதி (வயது 55). இவர் நேற்று ஆம்பூர் இந்திரா நகர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் தாங்கள் போலீஸ் எனக்கூறி சுமதியிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் தாங்கள் அணிந்திருக்கும் செயினை கழற்றிபையில் வைத்துக்கொண்டு ஜாக்கிரதையாக செல்லுங்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி சுமதி தான் அணிந்திருந்த செயினை கழற்றி பைக்குள் வைத்துள்ளார். அப்போது அவரது கவனத்தை திசைதிருப்பி, அவருக்கு தெரியாமல் செயினை எடுத்து சென் றுள்ளனர். சுமதி சிறிது தூரம் சென்று பார்த்தபோது பையில் வைத்திருந்த 5 பவுன் செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிளாஸ்டிக் கவர்கள், காலாவதியான தின்பண்டங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர
- அபராதம் விதித்து எச்சரிக்கை
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில், வாணியம்பாடியில் நகராட்சி ஆணையா ளர் சதீஷ்குமார் தலைமையில், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் செந்தில்குமார். சரவணன் மற்றும் சுகாதார பணியாளர்கள் பஜார் வீதி, முகமது அலி பஜார், ஆத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் உள்ளதா? என சோதனை செய்தனர்.
மேலும் கடைகளில் இருந்த பிளாஸ்டிக் கவர்கள், காலாவதி யான தின்பண்டங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.
பிளாஸ்டிக்கவர்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து மீண்டும் இவற்றை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
- ரூ.8 ½ லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களம்
- கட்டிடம் பழுது பார்த்தல் பணிகளையும் பார்வையிட்டார்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியை அடுத்த வேட்டப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
மேலும் ரூ.8 ½ லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களம், கோனேரிகுப்பம் வட்டத்தில் ரூ.1.42 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடிமைய கட்டிடம் பழுது பார்த்தல், வேட்டப்பட்டு ஊராட்சியில் ரூ.1.37 லட்சம் மதிப்பீட்டில் அங்கன் வாடி மையம் பழுது பார்த்தல் ஆகிய பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஜோலார் பேட்டை ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்தியா சதிஷ் குமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தினார்
- 4 தொகுதிகளில் 1400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடக்கிறது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 1400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஜோலார்பேட்டை ஒன்றியம் தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் 4 லட்சம் மதிப்பீட்டில் 2 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் இ.சுதா இளங்கோ அவர்களிடம் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் பணிகளை நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வட்டார வளர்ச்சி அலுவலர் துரை உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மகன்களுடன் அடிக்கடி குடும்ப பிரச்சினை
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி
வாணியம்பாடியை அடுத்த தேவஸ்தானம் அருகே உள்ள நடுப்பட்டறைகிராமத்தை சேர்ந்தவர் வள்ளிகண்ணன். இவ ரது மனைவி சரசா (வயது 63). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர்.இவர்களில் இரண்டு பேர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையி்ல் மற்ற மகன்களுடன் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சரசா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத சார் சம்பவ பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லேபிள் ஒட்டாத 3 கிலோ பொருட்கள் பறிமுதல்
- 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுரையின்படி, வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வி.செந்தில் குமார் மற்றும் வாணியம்பாடி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் எம். பழனிசாமி ஆகியோர் வாணியம்பாடி பஸ் நிலையம் பகுதி களில் உள்ள கடைகள், பேக்கரி, சுவீட்ஸ்டால், ஓட்டல்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்த ஒரு கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட் டது. மூன்று இனிப்பகத்தில் இனிப்புகளுக்கு அதிகப்படியாக வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த கடைகளுக்கு முன் னேற்ற அறிக்கை அளிக்கப்பட்டது. இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் இருந்ததால் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டு கடைகளில் லேபிள் ஒட்டாத 3 கிலோ பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் போண்டா, பஜ்ஜி போன்றவற்றை வாழை இலை மற்றும் மந்தாரை இலை, சில்வர் பிளேட்டில் வழங்க அறிவுறுத்தப்பட்டது.
- சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து வெளியில் ஓடினர்
- தீயணைப்பு வீரர்களும் தீயை அணைத்தனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி பஸ் நிலையத்தில் உள்ள பிரபல தனியார் பிரியாணி ஓட்டலில் நேற்று பிற்பகல் திடீரென அடுப்பு புகை கூண்டின் மேல் பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால் அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியில் ஓடினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வாணியம் பாடி டவுன் போலீசாரும், தீயணைப்பு வீரர் களும் தீயை அணைத்தனர்.
சிறிது நேரத்தில் தீ அணைக்கப் பட்டதை அடுத்து வாடிக்கையாளர்கள் வழக்கமாக ஓட்டலுக்கு வந்து சாப்பிட்டுட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- டிரைவர் கைது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் சேர்ந்த மகேந்திரன் மகன் கோபி (வயது 25).
இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கோபி கடந்த 3 மாதத்திற்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று காலை கோபி தனது மோட்டார் சைக்கிளிலில் பச்சூர் பகுதியில் இருந்து டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பச்சூர் ரெயில்வே கேட் அருகே சென்றபோது எதிரே வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த கோபியை அங்கிருந்த பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர்மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோபி இறந்து விட்டார்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டா பகுதியைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் சுரேஷ் (40) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- திட்டங்களை செயல்படுத்த 3 மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
அரசின் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நந்தகோபால், திருப்பூருக்கு ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் விசரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் இருந்து ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி தேசிய நெடுஞ் சாலைக்கு திரும்பியது. அப் போது கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகன உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, தேசிய நெடுஞ் சாலைக்கு திரும்பிய லாரி யின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உதிரி பாகங் கள் ஏற்றி சென்ற லாரி டிரைவர் திருவள்ளூர் மாவட் டத்தை சேர்ந்த குணசேகரன் (வயது 50) என்பவர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்கிருந்தவர்கள் உடனடி யாக பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து அரை மணிநேரம் போராடிஇடிபா டுகளில் சிக்கி இருந்த டிரை வர் உடலை மீட்டனர். பின் னர் ஆம்புலன்ஸ் வரவழைக் கப்பட்டு அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்து காரணமாக ஒரு மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்ப வம் குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
மேலும் விபத்து குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 21-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகிற 21-ந் தேதி (வெள் ளிக்கிழமை) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனி யார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது. எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 8-ம் வகுப்பு முதல் பட்டய படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம் முடித்த ஆண்கள், பெண்கள் இம்முகாமில் கலந் துக் கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை கலெக் டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.






