என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்டது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்மேம்பாட்டு நிதியில் இருந்து உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிட திறப்புவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சிதலைவர் பூசாராணி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற உறுப் பினர் கீதாஜெகன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச் சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந் தில்குமார், குழைந்தைகள் வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) ஆர். செல்வி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா?
    • போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    குடியாத்தத்தை அடுத்த மேல்பட்டி ரெயில் நிலைய யார் டில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் காட்பாடி- ஜோலார்பேட்டை செல்லும் மார்க்கத்தில் தண்டவாளத் தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டனர். பிண மாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    முதல் கட்ட விசாரணைக்கு பிறகு உடலை பிரேத பரி சோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனைதொடர்ந்து இறந்த வர் யார்? என்பது குறித்தும் படிக்கட்டில் பயணம் செய்த போது தவறி விழுந்து இறந் தாரா? அல்லது தண்டவா ளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாரா? என்பது குறித்தும் போலீசார் பல் வேறு கோணங்களில் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் அருகே உள்ள சுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சந்திரன் (வயது 15).

    இவர் பச்சூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் கடந்த 6 மாதமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி சந்திரனுக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதில் வலி தாங்க முடியாத மாணவன் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை குடித்து மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த அவரது குடும்பத்தினர், சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தீயணைப்பு துறையினர் கருவி மூலம் பிடித்தனர்
    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி ஊராட்சி, புகலைக்காரன் வட்டம் பகுதியில் பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 6 அடி நீளம் உள்ள நல்லபாம்பு ஒன்று விழுந்து சுருண்டு கிடந்தது.

    இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கருதி பிரகாசம் என்பவர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி கருவி மூலம் நல்லபாம்பை மீட்டனர்.

    பின்னர் அதனை கோணிப்பை மூலம் கட்டி திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 2 பெரிய பாலங்களும், 5 சிறிய பாலங்களும் கட்டப்படுகிறது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று ரூபாய் 8.49 கோடி மதிப்பீட்டில் 7 தரைப் பாலங்கள் அமைப்பதற்கான பணியை எம்எல்ஏ க.தேவராஜி நேற்று துவக்கி வைத்தார்.

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து புத்துக்கோயில் செல்ல தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    பெரிய கம்மியம் பட்டு, காவேரிபட்டு, சின்னக்கம்மியம் பட்டு, பெரிய மோட்டூர், கூத்தாண்ட குப்பம், கேத்தாண்டப்பட்டி, புத்துக்கோயில் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் சென்று வர இந்த பிரதான சாலை மட்டுமே உள்ளது.

    இந்த சாலையில் நடுவில் ஆங்காங்கே பாலாற்றுக்கு மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. மழைக்காலங்களில் கால்வாய்களில் அதிகளவு தண்ணீர் தேங்குவதால் மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது.

    இது குறித்து பொதுமக்கள், கால்வாயை கடந்த செல்ல பாலம் கட்டி தர வேண்டும் என ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. தேவராஜியிடம் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி கால்வாய்களை கடந்து செல்ல 2 பெரிய பாலங்களும், 5 சிறிய பாலங்களும் கட்ட ரூ.8.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி தலைமை தாங்கினார்.

    உதவி கோட்ட பொறியாளர் மணி சுந்தரம் முன்னிலை வகித்தார். சாலை ஆய்வாளர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி கலந்து கொண்டு தரைப் பாலங்கள் கட்ட அடிக்கல் நாட்டினார்.

    • ஆபாசமாக பேசியவரை கைது செய்ய வலியுறுத்தல்
    • போலீசார் பேச்சு வார்த்தை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்கின்றனர்.

    அதன்படி இன்று காலை 100 நாள் வேலை திட்ட பெண்கள் வழக்கம் போல் அத்திகுப்பம் ஏரியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. பிரமுகர் சாமு என்பவர், பெண்களை வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்து தகராறில் ஈடுபட்டார்.

    இதனை தட்டி கேட்ட பெண்களை அவர் ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் வேலை திட்ட பெண்கள், காலை 10 மணி அளவில் வேலையை புறக்கணித்து திருப்பத்தூரில் இருந்து பொம்மிக்குப்பம் செல்லும் சாலைக்கு வந்தனர்.

    அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறப்பிடித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இருப்பினும் அவர்கள், ஆபாசமாக பேசிய தி.மு.க. பிரமுகரை கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பழைய பேட்டை பகு தியை சேர்ந்தவர் பெரியதம்பி மகன் அப்பு அப்பரஞ்சி (வயது 38).

    இவர் நாட்டறம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களை விற்பனை செய்யும் நிறுவ னத்தை நடத்தி வருகிறார்.

    நேற்று காலை இவரது மனைவி கடையை திறந்து பார்த்தபோது கடையில் உள்ள பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் 2 சிறுவர்கள் இணைந்து கடைக்குள் இருந்த விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போனையும், கல்லாப் பெட்டிக்குள் இருந்த ரூ.2ஆயிரத்தையும் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் காலியானதால் வாகனம் அங்கேயே நின்றது. இதனையடுத்து அங்கே இருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை திருடி தங்களுடைய இருசக்கர வாகனத்தில் நிரப்பி தப்பிய காட்சிகளும் பதிவாகியிருந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தது 2 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.

    • யார் என அடையாளம் தெரியவில்லை
    • பல்வேறு கோணங்களில் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ரெயில் நிலையம் அருகில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் காட்பாடி- ஜோலார்பேட்டை செல்லும் மார்க்கத்தில் ஏதோ ஒரு ரெயில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் வாலிபர் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து யார் அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடியாத்தத்தை சேர்ந்தவர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் இருந்து 8 பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு ஆட்டோ கடந்த 18-ந் தேதி காலையில் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    பெட்ரோல் நிரப்பிக்கொண்டு லாரி தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் திரும்பியது. அப்போது அந்த வழியாக பைக்கை ஓட்டி வந்த வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த செந்தில்(வயது 50). பாம்பு ஆபரேட்டர் மீதும், ஆட்டோ மீதும் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் செந்தில், டிரைவர் ராஜசேகரன், 8 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக செந்திலை வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 பேர் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் பொன்னாகரத்தை சேர்ந்தவர் தமிழ்செல் வன் (வயது 28). கூலி வேலை செய்து வருகிறார்.

    இவரது தெருவில் இருந்த பொது குடிநீர் குழாயை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனை அதேப் பகுதியை சேர்ந்த சிலர் தட்டிக்கேட்டனர். இதில் அவர்களுக்குள் தக ராறு ஏற்பட்டு ஒருவரை ஒரு வர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஒருவர் இரும்பு கம்பியால் தமிழ்செல்வனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகா யம் அடைந்த தமிழ்செல் வனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன் குமார், அப்பாவு, ரமேஷ்பாபு, ராஜேஷ், ஹரிஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் கைதானவர்களை வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • தீயணைப்பு துறையினர் பிடித்தனர்
    • ஏலகிரி மலை காட்டுப்பகுதியில் விட்டனர்

    ஜோலார்பே ட்டை:

    ஜோலா ர்பேட்டையை அடுத்த அம்மை யப்பன் நகர் ஊராட்சி தலைவர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 63).

    நேற்று மாலை இவரது வீட்டு வராண்டாவில் உள்ள ஸ்லாப் மீது 10 அடி நீள சாரைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பாம்பை ஏலகிரி மலை காட்டுப்பகுதியில் விட்டனர்.

    • கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் குறித்தும் கேட்டறிந்தார்
    • கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிவிப்பது சட்டத்திற்கு புறம்பானது என நோட்டீஸ் ஒட்ட வேண்டும்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு சிகிச்சை பெற்றுவரும் காப்பிணிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவரிடம் கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் குறித்தும் கேட்டறிந்தார்.

    கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிவிப்பது சட்டத்திற்கு புறம்பானது என தாய்மார்களுக்கு தெரியும் வகையில் நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என எடுத்துரைத்தார்.

    தொடர்ந்து சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகளிடம், குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த ஆய்வின் போது அரசு டாக்டர்கள் இனியா, வித்தியா மற்றும் சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×