என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cobra rescue"

    • தீயணைப்பு துறையினர் கருவி மூலம் பிடித்தனர்
    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி ஊராட்சி, புகலைக்காரன் வட்டம் பகுதியில் பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 6 அடி நீளம் உள்ள நல்லபாம்பு ஒன்று விழுந்து சுருண்டு கிடந்தது.

    இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கருதி பிரகாசம் என்பவர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி கருவி மூலம் நல்லபாம்பை மீட்டனர்.

    பின்னர் அதனை கோணிப்பை மூலம் கட்டி திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • தீயணைப்பு துறையினர் போராடி பிடித்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஒடுகத்தூர்:

    ஒடுகத்தூர் அடுத்த ஓ.ராஜாபாளையம், ராகவேந்திரா நகரைச் சேர்ந்த விஷ்னுகுமார் என்பவரது வீட்டில் நாகபாம்பு ஒன்று நுழைந்துள்ளது.

    இதனை கவனிக்காத விஷ்னுகுமார் குடும்பத்தினர். வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது, வீட்டினிலும் பாம்பு ஊர்ந்து சென்றதை திடீரென பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சசிதரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று வீட்டில் புகுந்த நாகபாம்பை லாவகமாக பிடித்து அருகே உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

    ×