search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் நிலைய யார்டில் பிணமாக கிடந்த வாலிபர்
    X

    ரெயில் நிலைய யார்டில் பிணமாக கிடந்த வாலிபர்

    • ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா?
    • போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    குடியாத்தத்தை அடுத்த மேல்பட்டி ரெயில் நிலைய யார் டில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் காட்பாடி- ஜோலார்பேட்டை செல்லும் மார்க்கத்தில் தண்டவாளத் தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டனர். பிண மாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    முதல் கட்ட விசாரணைக்கு பிறகு உடலை பிரேத பரி சோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனைதொடர்ந்து இறந்த வர் யார்? என்பது குறித்தும் படிக்கட்டில் பயணம் செய்த போது தவறி விழுந்து இறந் தாரா? அல்லது தண்டவா ளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாரா? என்பது குறித்தும் போலீசார் பல் வேறு கோணங்களில் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×