search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையில் புகுந்து செல்போன், பணம் திருடிய சிறுவர்கள்
    X

    கடையில் புகுந்து செல்போன், பணம் திருடிய சிறுவர்கள்

    • கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பழைய பேட்டை பகு தியை சேர்ந்தவர் பெரியதம்பி மகன் அப்பு அப்பரஞ்சி (வயது 38).

    இவர் நாட்டறம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களை விற்பனை செய்யும் நிறுவ னத்தை நடத்தி வருகிறார்.

    நேற்று காலை இவரது மனைவி கடையை திறந்து பார்த்தபோது கடையில் உள்ள பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் 2 சிறுவர்கள் இணைந்து கடைக்குள் இருந்த விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போனையும், கல்லாப் பெட்டிக்குள் இருந்த ரூ.2ஆயிரத்தையும் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் காலியானதால் வாகனம் அங்கேயே நின்றது. இதனையடுத்து அங்கே இருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை திருடி தங்களுடைய இருசக்கர வாகனத்தில் நிரப்பி தப்பிய காட்சிகளும் பதிவாகியிருந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தது 2 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×