என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • உடலை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் மல்லானூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் பயணம் செய்தார்.

    அப்போது திடீரென ரெயிலில் இருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல சென்னை சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ஊராட்சி, தங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 40).

    இவருக்கு திருமணம் ஆகி, தம்பதியினருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரை பிரிந்து அவரது மனைவி தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    சிவா சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

    விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல சென்னை நோக்கி சிவா தனது பைக்கில் புறப்பட்டு சென்றார்.

    ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அருகே சென்ற போது, நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோ பின்புறத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது.

    படுகாயம் அடைந்த அவரை அந்த பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவா தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு
    • ஏலகிரி மலையில் 10,000 மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் அத்தனாவூர், நிலாவூர், மங்கலம், தாயலூர் உள்ளிட்ட 14 கிராமங்களை கொண்டுள்ளது.

    இங்கு சுமார் 10,000 மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

    மகளிர் தலைவிக்கு ரூ.1000 வழங்குவதற்கான விண்ணப்பம் படிவங்கள் வினியோகம் செய்யும் பணியை திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமங்களில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைப்பெற்று வருகிறது.

    இதனை ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற துணை தலைவர் அ.திருமால் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில் குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • பஞ்சாப் செல்ல எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    தருமபுரி மாவட்டம், வேனுசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). இவரது மனைவி ஜோதிமணி (30). தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சீனிவாசன் பஞ்சாபில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பினார். விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்கு செல்ல சீனிவாசன் முடிவு செய்தார்.

    அதன்படி நேற்று பஞ்சாப் செல்ல எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

    திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஜோதிமணி தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா போலீசார் மாதனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது கீழ் முழங்கை சேர்ந்த காந்தி (வயது 40), வாசுதேவன் (53) ஆகியோர் பாலாற்றில் இருந்து மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்தனர்.

    • முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்
    • விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஏலகிரி மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

    இதனால் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களும், பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடும் அவதிப்பட்டனர் மேலும் வீட்டிற்கு நனைந்தபடியே சென்றனர்.

    மேலும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக சாலையோரம் உள்ள சிறு வியாபாரிகளுக்கு பொது மக்கள் நடமாட்டம் இல்லாததால் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

    மேலும் ஜோலார்பேட்டை நாட்டறம்பள்ளி மற்றும் ஏலகிரி மலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

    இதனால் முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் குளங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் நிரம்பியது.

    மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • போலீசார் இரவு ரோந்து பணியில் சிக்கியது
    • ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் உத்தரவின் பேரில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், டவுண் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் நேற்று இரவுதும்பேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தும்பேரி பாரதிநகர் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் இருந்த மூட்டை களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    பின்னர் 24 மூட்டைகளில் இருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக அம்பலூர் போலீசார் மேல் நடவடிக்கைக்காக வேலூர் குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் ரேஷன் அரிசியை ஒப்படைத்தனர்.

    • சமூக வலைதளங்களில் பரவியதால் திரும்பப் பெறப்பட்டது
    • ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்ததாக புகார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள தாமலேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 35). இவர் அந்தப்பகுதி யில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிளினிக் நடத்தி வருகிறார். இவர் முறைப்படி மருத்துவம் படிக்காமல்

    பொதுமக்களுக்கு ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஜோலார்பேட்டை போலீசாருடன் இணைந்து சில நாட்களுக்கு முன்பு சம்பத் நடத்தும் கிளினிக்கில் ஆய்வு நடத்தினர்.

    அப்போது, சம்பத் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தியது தெரியவந்ததால் கிளினிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது. சம்பத் கைது செய்யப்பட்டார். சில நாட்கள் கழித்து வெளியே வந்த சம்பத் மீண்டும் கிளினிக் நடத்தி வந்தார்.

    இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரி முத்து கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி சம்பத் கிளினிக் நடத்த தகுதிச்சான்றிதழ் அளித்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து இணை இயக்குனர் மாரிமுத்துவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- கடந்த 2019-ம் ஆண்டு கிளினிக் நடத்தும் மருத்துவர்கள் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனரிடம் தகுதி சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதி நடைமுறைக்கு வந்தது. அதைதொடர்ந்து 2020-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் இருந்து செயல்பட்டு வந்த மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து சுமார் 152 நபர்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் நான் திருப்பத்தூர் மாவட்ட இணை இயக்குனராக 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பொறுப்புக்கு வந்தேன். அதனைதொடர்ந்து தகுதிச்சான்றிதழ் பெற என்னிடம் வந்த விண்ணப்பங்களில் 80 நபர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கினேன். அதன் பிறகு ஆய்வு நடத்திய போது சம்பத் போலி மருத்துவர் என்பது கவனத்துக்கு வந்தது. இதனால் அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் திரும்பப்பெறப்பட்டது.

    இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்தநெக்குந்தி காவாக்கரை பகுதியில் உள்ள சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் விபசாரம் நடைபெறுவதாக வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி,சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவ ரும், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த விக்கி என்பவரும் காவாக் கரை பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையும், அவ ருக்கு உதவியாக இருந்த நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பவரையும் கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள விக்கி என்பவரை தேடி வருகின்றனர். அங்கிருந்து மீட்கப்பட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண்ணை திருப்பத்தூர் பகுதியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • ரேசன் கடை மூலம் பணியாளர்கள் நேரடியாக விண்ணப்பங்களை விநியோகம்
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    ஜோலார்பேட்டை:

    தமிழகம் முழுவதும் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் ரேசன் கடை மூலம் பணியாளர்கள் நேரடியாக விண்ணப்பங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

    விண்ணப்பங்கள் வினியோகத்திற்குப் பிறகு அனைத்து பகுதிகளிலும் முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு மகளிர் உரிமைத்தொகை அவரது வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வக்கணம்பட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு ஒத்திகை முகாம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, தாசில்தார் சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களை கண்டறிந்து சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை
    • கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஆய்வு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்நிலையில் ஆம்பூர் வட்டம் சோலூர் கிராமத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் வழங்கும் பணியினை கண்காணிப்பு அலுவலரும். கூடுதல் பதிவாளரும். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனருமான எம்.அந்தோணிசாமி ஜான்பீட்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களை நேரில் கண்டறிந்து சேமிப்பு கணக்கு துவக்கிட உரிய விண்ணப்பம் அளித்து அவர்களுக்கு அடுகில் உள்ள வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் இல்லாமல் "ஜீரோ பேலன்ஸ்" என்ற அடிப்படையில் உடனுக்குடன் சேமிப்பு கணக்கு உடனுக்குடன் துவக்கி கொடுக்குமாறும் ஆம்பூர் சரக களமேலாளர் சி.சுப்பிரமணி, திருப்பத்தூர் வங்கி கிளை உதவியாளர் எம்.மஞ்சுநாத் ஆகியோருக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.

    இந்நிகழ்வின்போது திருப்பத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசன் . கூட்டுறவு சார்பதிவாளரும் , ஆம்பூர் சரக அலுவலருமான எம்.கோபிநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வார விடுமுறையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்
    • ஏலகிரி மலை கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இம்மலை தமிழ்நாட்டில் சுற்றுலாத் தலங்களில் சிறந்த சுற்றுலாத்தலமாக பெயர் பெற்றுள்ளது.

    அத்தனாவூர், நிலாவூர், மங்கலம் உள்ளிட்ட 14 கிராமங்கள் உள்ளடக்கிய இந்த மலையில் மா, பலா, வாழை என முக்கனிகளில் இடமாகவும் ஏலகிரி மலை திகழ்ந்து வருகிறது.

    இதனால் இங்கு வெளிநாடுகள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்

    இங்கு பயணிகளின் பொழுது ேபாக்கிற்காக படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, மங்களம் சுவாமி மலை ஏற்றம், முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன.

    மேலும் இங்கு 50-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. விடுமுறை நாட்களில் அனைத்து தனியார் விடுதிகளிலும் நிறைந்து காணப்படும் நிலையில் வரும் முன்னரே முன்பதிவு செய்து விட்டு வருகின்றனர்.

    இங்கு ஏராளமான தனியார் சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில் அரசு சுற்றுலா தலமாக படகு இல்லமும், இயற்கை பூங்காவும், மற்றும் மங்களம் சுவாமி மலை ஏற்றம் உள்ளிட்ட ஒரு சில இடம் மட்டும் உள்ளது.

    வார விடுமுறையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு அதிகளவில் வருவது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை ஏலகிரி மலையில் மழை தொடர்ந்து பெய்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால் ஏலகிரி மலை கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ×