என் மலர்
திருப்பத்தூர்
- உதிரிபாகம் வழங்கிய கணக்கு குறித்து கேட்டுள்ளார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் தனியார் பைக் ஷோரூம் இயங்கி வருகிறது.
இதில் ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி பகுதி சேர்ந்த விக்னேஷ் (வயது23) என்பவர் மெக்கானிக் பிரிவில் வேலை செய்து வருகிறார்.
மேலும் சர்வீஸுக்கு வரும் பைக்குகளுக்கு உதிரி பாகங்கள் வழங்கி கணக்கு எழுதி வைப்பதும் செய்து வந்துள்ளார்.
இதனால் அதே நிறுவனத்தில் மேற்பார்வை யாளராக பணிபுரிந்து வருபவர் நேற்று முன்தினம் உதிரிபாகம் வழங்கிய கணக்கு குறித்து கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த விக்னேஷ் தனது நண்பர்களை வரவழைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கை யர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் நிறுவனத்தில் பணி புரியும் மேற்பார்வையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விக்னேஷ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது
- 1 மணி நேரம் போராடி மின் கம்பியை மாற்றினர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஆம்பூர்ரெயில் நிலை யத்தில் நேற்று மாலை 4.45 மணிக்கு சென்னை நோக்கி செல்லும் மார்க்கத்தில் 2-வது பிளாட்பாரத்தில் மின்சார ரெயில் என்ஜினுக்கு செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டது.
இதன் காரணமாக மைசூ ரில் இருந்துசென்னை நோக்கி சென்ற வந்தே பாரத் ரெயில் விண்ணமங்கலம் ரெயில் நிலையத்தில் மாலை 4.54 மணியளவில் நிறுத்தப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி, ஜோலார் பேட்டை ரெயில்வே ஊழியர் கள் மின் கம்பியை சரிசெய் யும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரம் போராடி அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை அகற்றிவிட்டு புதியதாக மின் கம்பியை மாற்றினர்.
இதனால் சுமார் 1 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. சரிசெய்யப்பட்ட பின்னர் நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரெயில் மாலை 5.27 மணியளவில் அரை மணி நேரம் தாமதமாக மேலும் ஆம்பூர் அருகே பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் டபுள் டெக்கர் ரெயில் சில நிமிடம் நின்று தாமதமாக சென்னை நோக்கி புறப்பட்டது.
ரெயில்கள் நடுவழியில் நின்றதால் ரெயில் பயணிகள் அவதிப் பட்டனர்.
- பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்
- உடல் பரிசோதனை செய்து கொண்டார்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள அக்ராகரம் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாமினை மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் அம்மனாங்கோயில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து காட்டூர் பனம்தோப்பு பகுதியில் குறுங்காடுகள் அமைக்கும் பணியை பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார் புதுப்பேட்டை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு திட்டத்தை முன்னிட்டு அப்துல் கலாம் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுப்பேட்டை அரசு சமூதாய சுகாதார மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து உடல் பரிசோதனை செய்து கொண்டார் அதன் பிறகு ரத்த தானம் முகாமில் மாவட்ட கலெக்டர் பங்கேற்று ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கினார் இந்த ஆய்வின் போது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யா சதிஷ்குமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், சுகாதார துறை துணை இயக்குநர் செந்தில், ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி, டாக்டர் சுமன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே.சதிஷ்குமார், மாவட்ட ரத்த வங்கி அலுவலர் குமரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- 4 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா மலைப்பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (வயது 23).இவர் நேற்று மாலை வாணியம்பாடி பஜாருக்கு வந்தார்.
அங்கு காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கிக்கொண்டு மாத கடப்பா மலைக்கு, மலை பாதை வழியாக சென்று கொண்டிருந்தார்.
மலைப்பகுதியில் இருந்து எதிரே தும்பேரி கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 22), சீனிவாசன் (வயது 18), சக்திவேல் (வயது 19) ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் வந்தனர். அப்போது 2
மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் பழுதான மற்றும் புதிய மின் கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் பகுதியில் இருந்து நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மின் கம்பங்கள் ஏற்றி கொண்டு டிராக்டர் சோதனை சாவடி வழியாக நாட்டறம்பள்ளி நோக்கி சென்றது. டிராக்டரை டிரைவர் அரியானா மாநில வாலிபர் சம்ராடு (வயது 29) என்பவர் ஓட்டி சென்றார்.
பங்காளமேடு அருகே சென்று கொண்டிருக்கும் போது டிராக்டர் டிரெய்லர் சாலையின் நடுவில் கவிழ்ந்தது.
இதில் டிரெய்லரில் இருந்த மின் கம்பம் சரிந்து விழுந்ததில் மின் கம்பம் மீது அமர்ந்து இருந்த அரியானா மாநிலம் பகத்சிங் மகன் அனில் (வயது 37) என்பவரும் சரிந்து விழுந்தார்.
இதில் அவர் மின் கம்பங்களுக்கு இடையில் சிக்க தலை நசுங்கி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- யார்டுகள் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்
- பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்
ஜோலார்பேட்டை:
சென்னை கோட்ட ரயில்வே பொது மேலாளராக விஸ்வநாதன் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை ெரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள தனி ரெயில் மூலம் விஸ்வநாதன் ரெயில்வே துறை அதிகாரிகளுடன் வந்தார்.
அப்போது ரெயில் நிலைய மேலாளர் சேகர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் ரெயில்வே தொழிற்சங்க செயலாளர் எஸ். ஜெகன் தலைமையில் சங்க நிர்வாகிகள் ஆகியோர் சென்னை கோட்ட புதிய மேலாளருக்கு மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து சென்னை கோட்ட பொது மேலாளர் ரெயில் நிலையங்களில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்கள், ரெயில்வே காவல் நிலையங்கள், முன்பதிவு அலுவலகங்கள், ரன்னிங் ரூம், ரெயில் நிலைய யார்டுகள் போன்ற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ரெயில் நிலையத்தில் பணிபுரியும் பிரிவு அலுவலர்களை தற்போதுள்ள பராமரிப்பு பணிகள் மற்றும் மேம்படுத்தப்பட உள்ள பணிகள் போன்றவைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது எஸ்.ஆர்.எம்.யூ. ஜோலார்பேட்டை பொறுப்பாளர் ஏ.டி.எஸ். கிளை செயலாளர் ஜெகன், ஓஎல் கிளை செயலாளர் செந்தில்குமார், எச்கீயூ கிளை செயலாளர் ஜெகன் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- கையும் களவுமாக பிடித்தனர்
- போலீசில் ஒப்படைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாலைநகர் பகுதியை சேர்ந்த வர் கணேசன். இவரது மனைவி சாந்தலட்சுமி (வயது 37).
இவர் தனது வீட்டில் இருந்தபோது, நேற்று அதி காலை அடையாளம் தெரி யாத நபர் ஒருவர் வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து வீட்டின் வராண்டாவில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம், மணி பர்ஸ் ஆகியவற்றை திருட முயன் றுள்ளார்.
இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த னர்.
அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் ஜோலார்பேட்டையை அடுத்தபால்னாங்குப்பம் கங் காநகர் பகுதியை சேர்ந்த அரு ணாச்சலம் என்பவரது மகன் ராஜேஷ் (37) என்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சேதுக்கர சன் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்தார்.
- உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம்
- அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததால் நடவடிக்கை அளிக்கப்பட்டது.
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவே ஆங் காங்கே சுற்றித்திரிவதாக வாணியம்பாடி நகராட்சி அதிகா ரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி நேற்று வாணியம்பாடிசி.என்.ஏ. சாலை பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த மூன்று மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.3ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து சாலைகளில் சுற்றித்திரியும் அனைத்து மாடுக ளையும் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் ஊராட்சிக்குட்பட்ட பாரத கோவில் முதல் குள்ளகிழவன் வட்டம் வரையும் மற்றும் தாமரை குளம் முதல் நேதாஜி நகர் வரையி ரூ. 6 லட்சம் செலவில் சாலை அமைக்கப்படுகிறது. தேவராஜி எம்.எல்.ஏ. பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியை நேற்று தொடங்கி வைத்தார்.
விழாவில் ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் எம்.காவியா விக்டர், நகர மன்ற முன்னாள் துணை தலைவர் பெரியார்தாசன், ஊர் கவுண்டர்கள் கண்ணதாசன், சசிகுமார், ஊர் நாட்டாண்மை சென்றாயன், நகர மன்ற உறுப்பினர் இனியன், ஏலகிரி கிராமம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஹேமாவதி ஜீவா, உள்ளிட்ட ஊர் பெரியோர்கள் பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர் முடிவில் எக்ஸெல் ஜி.குமரேசன் நன்றி கூறினார்.
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி அம்பூர் பேட்டையைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 40). இவர் தனது ஆட்டோவை ஒட்டிக் கொண்டு அண்ணா நகரில் இருந்து நியூடவுன் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
நியூடவுன் பைபாஸ் சாலையில் எதிர் திசையில் ஜெயபால் (42) என்பவர் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ தலைகுபுற கவிழ்ந்தது.
இதில் ஆட்டோ டிரைவர் யுவராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக படுகாயம் அடைந்த யுவராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆட்டோ மற்றும் காரை பறிமுதல் செய்தனர் .
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகரின் முக்கிய பகுதியான ஆசிரியர் நகர், அமீனாபாத், பெரிய பேட்டை, முஸ்லீம்பூர், சென்னம் பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், பூக்கடை பஜார் பகுதி யிலும் கடந்த 3 நாட்களாக 4 மர்ம நபர்கள் வீதி வீதியாக நடந்தே சென்று முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் வீடுகளை நள்ளிரவு நேரத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதே இடத்தில் அவர்களின் வீடுகளுக்கு எதிரே நின்று செல்பி எடுத்துக்கொண்டும் செல்கின்றனர்.
இது சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதனை கண்ட தொழிலதிபர்களும், முக்கிய பிரமுகர்களும் நேற்று மாலை வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அதில் நள்ளிரவு நேரத்தில் 4 நபர்கள் தொடர்ந்து வெவ்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை புகைப்படங்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
- மாணவர்கள் வேதனை
- சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் மதனாஞ்சேரி ஊராட்சி அமைந்துள்ளது.
இங்கு எகுறான் வட்டம் முதல் குட்டை பெருமாள் கோவில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மண் சாலை இருந்தது. இந்த வழியாக அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு பணிகள் நிமித்தமாக கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுவதால் யாரும் அந்த சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும்,இங்கு தார் சாலை அமைக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
ஜல்லி கற்கள் பெயர்ந்து மேலே வந்துள்ளது
இதை கடந்த 2018-2019-ம் ஆண்டு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து ஒரு அடுக்கு ஜல்லி கற்கள் கொட்டி ஜல்லி சாலை போட்டுள்ளனர்.பின்னர் தார் சாலை அமைக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
ஜல்லி போட்டு 5 ஆண்டுகள் ஆகியும் தார் சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டதால் ஜல்லி கற்கள் பெயர்ந்து மேலே வந்துள்ளது.இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் ஜல்லி கற்கள் மட்டுமே போடப்பட்ட அந்த சாலையில் செல்லும் பள்ளி மாணவர்களின் சைக்கிள் மாதம் 5 முறைக்கு மேல் பஞ்சர் ஆகிவிடுகிறது.
சில நேரங்களில் நிலை தடுமாறி கீழே விழுந்தது காயம் ஏற்படுவதாகவும் பள்ளி மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் பலமுறை முதல் அமைச்சர் தனிபிரிவு,மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.






