என் மலர்
திருப்பத்தூர்
- பாதாம், பிஸ்தாவை திருடி சாப்பிட்டனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன் மகன் ராகுல் (வயது 27). இவர் ஓசூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேனகா (25).
மேனகா நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது மாமனார் பரந்தாமன் மற்றும் மாமியார் செல்வராணி ஆகியோரும் வீட்டை பூட்டி விட்டு மருமகளுடன் சென்றனர்.
ஊருக்கு சென்ற பரந்தாமன் மற்றும் செல்வராணி வீட்டுக்கு வந்தனர். வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சடைந்து உள்ளே சென்று பார்த்தனர்.
பீரோ உடைத்து அதன் வைத்து இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் 4 கிராம் வெள்ளி பொருட்களை மரம் நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலும் கொள்ளையர்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து சோபாவில் அமர்ந்து ஆர அமர சாப்பிட்டுவிட்டு, தோலை வீடு முழுவதும் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து போரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார்.
பின்னர் இரவு வீட்டுக்கு வந்தபோது மாடியின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த 2 லேப்டாப்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூர் துணை போலீஸ் சூப் பிரண்டு சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் அதேப்பகுதியை சேர்ந்த டேவிட் (25) என்பவர் பொருட்களை திருடியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- 3 நாட்கள் நடந்தது
- பெண் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
திருப்பத்தூர்:
கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் மையம் மற்றும் நபார்டு வங்கி சார்பில் பெண் விவசாயிகளுக்கு திருப்பத்தூரில் நவீன முறையில் கறவை மாடு வளர்ப்பு குறித்து சிறப்பு பயிற்சி முகாம் கடந்த 3 நாட்கள் நடந்தது.
பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் பிரவீன்பாபு தலைமை தாங்கினார்.
திருப்பத்தூர் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி எழிலரசி வரவேற்றார்.
இதில் பயிற்சி பெற்ற பெண் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- போலீசார் பேச்சுவார்த்தை
- போக்குவரத்து பாதிப்பு
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவலாபுரம் ஊராட்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பொது மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தெருக் குழாய்களில் குடிநீர் சரிவர சப்ளை செய்வதில்லை.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆக்கிரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆம்பூரில் இருந்து பேர்ணாம்பட்டு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்த உமராபாத் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினர்.
உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
- போலீசார் விசாரணை
- ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய மூக்கனூர், லெனின் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 55). விவசாயி.
இவருக்கும் இவரது சித்தப்பா ராமன் மற்றும் அவரது மகன் சிவக்குமார் (46) ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளாக சொத்து தகராறு பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோவிந்தசாமி தனக்கு சொந்தமான நிலத்தில் மாட்டு சாணம் கொட்ட சென்றபோது அங்கிருந்த சிவக்குமார் இங்கு ஏன் வந்தாய் உன்னை ஒழித்து விடுவேன் என தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் இருந்த கல்லை தூக்கி கோவிந்தசாமியின் தலைமீது வீசியுள்ளார்.
மேலும் அவரது மனைவி ஆஷா (35) கைகளால் தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்த கோவிந்தசாமியை அவரது குடும்பத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ஆஷா மீது வழக்கு பதிவு செய்து சிவகுமாரை நேற்று கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் ஆஷாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆவணங்கள் இல்லாமல் இயக்கிவந்தனர்
- வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வரை செல்லும் நெடுஞ்சாலையில் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கட்ராகவன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், புதிய வாகனங்கள் பதிவு செய்யாமலும், வாகனங்களை புதுப்பிக்காமலும் விதிமுறைகளை மீறி இயக்கி வந்த 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 டிராக்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த வாகனங்கள் அனைத்துக்கும் ரூ.80 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- முன்விரோதத்தால் விபரீதம்
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
திருப்பத்தூர்:
ஜவ்வாதுமலை புதூர்நாடு சேம்பரை கிராமம் பகுதியை சேர்ந்தவர் அனுமன் (வயது 50). இவரது மகன் பிரவீன் குமார் (19), சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மாவட்ட கவுன்சிலர் வைகுந்தராவ். இவரின் சகோதரர் பிரசாந்த் மற்றும் சாம்பசிவம் மகன் செஞ் சுபதி. இவர்களுக்கும், அனுமனுக்கும் இடையே முன்விரோ தம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பிரசாந்த், செஞ்சுபதி ஆகியோர் பிரவீன் குமாரை கட்டையால் தாக்கி, நெஞ்சு பகுதியில் கடித்து காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த பிரவீன் குமார் புதூர்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலை யத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2 பேர் தப்பி ஓட்டம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் வடகரை ஊராட்சி பாலாற்றின் அருகே டாஸ்மாக் கடையில் மது வகைகளை காரில் கடத்திச் சென்ற வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் கார் பறிமுதல் செய்தனர்.
மது வகைகளை பறிமுதல் செய்த உமராபாத் போலீஸார் விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய ராஜ்குமார் மற்றும் ஒருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.
- 2 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சணைக்கு தீர்வு
- பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த அம்மணாங்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளியூர் கிராமத்தில் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அந்தபகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பொது வழிப்பாதையை, தனிநபர் ஒருவர் தனக்கும் சொந்தமான இடம் எனக்கூறி பாதையில் கம்பிவேலி அமைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊர் பெரியோர்கள் பேசியும் கூட கடந்த 2 ஆண்டுகளாக இந்த பிரச்சணைக்க தீர்வு காண முடியவில்லை.
இதனால் அந்தவழியாக செல்லும் பொதுமக்களின் போக்குவரத்து முற்றிலும் தடையானது.
இதுகுறித்து கிராம மக்கள், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாரிடம் பொது வழி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.
அதன்பேரில் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினர்.
மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் அதிகாரிகள் அளவீடு செய்தனர்.
அந்த இடம் வருவாய்த்துைறக்கு சொந்தமானது என தெரிந்ததை தொடர்ந்து, அதிகாரிகள் தனிநபர் அமைத்திருந்த கம்பி வேலியை அகற்றினர்.
2 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சணைக்கு தீர்வு காணப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
- அமைச்சர் கேள்விக்கு பெண் பதிலால் சிரிப்பலை
- படிக்காதவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து கூற வேண்டும் என அமைச்சர் அறிவுரை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் தேவஸ்தானம் ஊராட்சியில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறபடுவதை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெரும் திட்டத்தின் கீழ் மகளிர் உரிமை தொகை வழங்குவது யார் என்று கேள்விகளை கேட்டார்.
அப்போது ஒரு பெண் கலைஞர் கொடுக்கிறார் என்று கூறி அமைச்சர் முன்பு வெட்கபட்டார்.
இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது.
மீண்டும் அமைச்சர் அங்கிருந்த மற்றொடு பெண்ணை கேட்டார் அவர் ஸ்டாலின் தான் கொடுக்கிறார் என்று மெதுவாக சொன்னார்.
உடனே ஏன் பயபடுற தைரியமாக சொல்லுமா என்று கூறினார்.
இச்சம்பவம் பெண்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் மகளிர் உரிமை தொகை மனுக்கள் பெரும் போது இந்த திட்டம் யார் மூலம் நிறைவேற்ற படுகிறது என்று படிக்காதவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து கூற வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார்.
- ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்கினர்
- 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக குற்றச்சாட்டு
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் 2 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் அகவிலைப்படி மருத்துவ படி உள்ளிட்டவை அடங்கிய 2022 ம் ஆண்டு முதல் மாத ஊதியம் ரூ.7 ஆயிரத்து 332 வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சம்பளத் தொகையானது ஒவ்வொரு ஊராட்சியிலும் வேறுபடு வதாக கூறப்படுகிறது.
இதனால் ஓட்சா கூட்டமைப்பு தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் கே. லட்சுமணன் தலைமையில் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் தற்போது அரசு நிர்ணயித்துள்ள சம்பள விகிதப்படி அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் துரையிடம் (கி.ஊ) மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வின்போது மாநிலத் துணைத் தலைவர் சரவணன், மாவட்ட தலைவர் கண்ணன் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.
- கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே நாச்சார்குப்பத்தில் வீடு புகுந்து 2 லேப்டாப் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம்(35). இவர் ஆம்பூரில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.
இவரதுவீட்டில் மாடியில் உள்ள ஒரு அறையில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு லேப்டாப், ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை திருடிசென்றுள்ளனர்.
நேற்று இரவு மாடிக்கு சென்ற செல்வம் கதவு திறந்திருப்பதை கண்டு ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்து வருகின்றனர்.






