என் மலர்
திருப்பத்தூர்
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- மின் அதிகாரி தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில், திருப்பத்தூர் கோட்டத்தை சார்ந்த திருப் பத்தூர், கந்திலி, குரிசிலாப் பட்டு, வெலக்கல்நத்தம், மிட் டூர் ஆகிய துணை மின் நிலை யங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக் கிறது.
இதனால் நாளை (சனிக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சி. கே.ஆசிரமம், பொம்மிகுப் பம்,திருப்பத்தூர்டவுன், ஹவு சிங் போர்டு, குரிசிலாபட்டு, மடவாளம், மாடபள்ளி, சவுந் தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூர், மொளகரம்பட்டி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்தி பெண்டா, கொத்தாலக் கொட்டாய், புத்தகரம், பாரண்டபள்ளி, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூர், குரிசிலாப்பட்டு, மூலக்காடு, ஜவ்வாதுமலை புதுர்நாடு, மல் லாண்டியூர், விளாங்குப்பம், இருணாப்பட்டு, பாப்பா னூர், பூங்குளம், பலப்பநத்தம், பரவக்குட்டை, ஜல்தி, பள் ளத்தூர், ரெட்டிவலசை, குண் டுரெட்டியூர், நஞ்சப்பனேரி. டேம் வட்டம், ராணிவட்டம், லக்கன்வட்டம் ஆகிய பகுதி களில் மின்சாரம் நிறுத்தப் படும்.
இந்த தகவலை திருப்பத்துர் மின்வாரிய செயற்பொறியா ளர் அருள்பாண்டியன் தெரி வித்துள்ளார்.
- சோதனையில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம்அடுத்த வெள்ளக்குட்டை அருகே உள்ள நன்னேரி பகுதியில் வனவிலங்குகளை வேட்டை யாட நாட்டுத்துப்பாக்கியை சிலர் பதுக்கி வைத்திருந்தப்பதாக ஆலங்காயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் நன்னேரி பகுதியை சேர்ந்த பழனி என்பவரது வீட்டில் சோதனை செய்த போது உரிய உரிமம் இல்லாமல் வீட்டில் நாட்டுத்துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரிந்து.
உடனடியாக நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த ஆலங்காயம் போலீசார் பழனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த பெரிய வரிகம் புதுமனை கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 65). இவர் தனது வீட்டின் சுற்றுச்சுவர் அருகே கொய்யா மரம் உள்ளது. இதில் கொய்யா பழுத்துள்ளது.
இதனால் பழங்களை பறிப்பதற்காக தமிழரசன் ஏணி போட்டு மரத்தில் ஏறினார்.
கொய்யாவை பறித்துக் கொண்டு கீழே இறங்க முயன்றார். அப்போது நிலை தடுமாறி திடீரென மரத்திலிருந்து தமிழரசன் கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தமிழரசன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தமிழரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபால் தவறி வேடிக்கை பார்த்த நபர்கள் மீது விழுந்தது
- போதை வாலிபர்கள் கல்லால் தாக்கினர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சீதாபதி மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 50), என்ஜினியர். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அதே பகுதியில் கிடைத்த வேலையை செய்து வந்தார்.
இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் பார்சம்பேட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்த தமிழ்வாணன் (26) மற்றும் சூர்யா (25) ஆகியோர் ரேசன் கடை எதிரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வாலிபால் விளையாடினர்.
வாலிபால் தவறி வேடிக்கை பார்த்த நபர்கள் மீது விழுந்தது.
இதனால் கோபாலகிருஷ்ணன் தரப்பினருக்கும், போதை வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் கோபாலகிருஷ்ணை முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக கற்களால் தாக்கி கொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற தமிழ்வாணன் மற்றும் சூர்யா ஆகியோர் மீதும் கல் வீசி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த தமிழ்வாணன், சூர்யா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் திருப்பத்தூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் விசாரணை நடத்தினார்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவின்குமார், மவுரீஸ், நித்திஷ்குமார் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தீயணைப்புதுறையினர் பிடித்தனர்
- வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு பாடம் நடத்திக் கொண்டி ருந்தனர். பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடத்தை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப்பகுதியில் திடீரென்று நல்ல பாம்பு புகுந்தது. இதைபார்த்ததும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியை பத்மாவதியிடம் நாட்டறம்பள்ளி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் சென்று 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் ஏலகிரிமலை காப்பு காட்டில் பாம்பை கொண்டு போய் விட்டனர்.
- குறைந்த விலையில் விற்கப்படுகிறது
- கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர்:
தக்காளி விலை கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்படுவ தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.
திருப்பத்தூர் கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடையில் நேற்று குறைந்த விலையில் தக்காளி விற்பனையை திருப்பத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.பெ. முருகேசன் தொடங்கி வைத்தார். அப்போது பொது மக்க ளுக்கு 1கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தக்காளியை வாங்கி சென்றனர். நிகழ்ச்சியில் பொது வினியோக திட்ட துணை பதிவாளர் சம்பத், கூட்டுறவு சார்பதிவாளர்கள் சதாசிவம், தர்மேந்திரன், ராமசந்திரன், முதுநிலை ஆய்வாளர் திப்புதிலீ பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதே போல் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதியில் மேலும் 4 கூட்டுறவு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.
- காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்
- உயர் கோபுரம் அமைத்து போலீசார் கண்காணிப்பு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள பசலிக்குட்டை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டு சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்காவடி, பன்னீர் காவடி, பால் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 5 அடிமுதல் 20 அடி வரை உள்ள வெள்ளி வேல் அலகு குத்தியும், சிறிய மற்றும் பெரிய தேரை இழுத்து வந்தும், அந்தரத்தில் தொங்கிய படி பறக்கும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருப்பத்தூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி பகுதி களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூரில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலுக்கு செல்லும் வழி முழுவதும் பலர் அன்னதானம் செய்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக சேவலை கோவில் மீது சூறை யிட்டு விட்டு சென்றனர்.
ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் அங்கு விழாக்கோலம் பூண்டது. திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் உயர் கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
- ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை நிதி ஒதுக்கீடு
ஜோலார்பேட்டை:
இந்தியா முழுவதும் ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் 'அம்ரீத் பாரத்' ரெயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை ரெயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.
ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணி களின் எண்ணிக்கையை பொறுத்தும், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரெயில்நிலையங்கள் நவீனமயமாக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, கூடு வாஞ்சேரி ஜோலா ர்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
இந்த அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்ட பணிகளை வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் அதற்கான பணிகளை ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த காணொளி காட்சி மூலம் திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. தேவராஜ் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
- மாங்காய்க சிதறி கிடந்தது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால், லாரி டிரைவர். இவர் இன்று அதிகாலை வேலூரில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மண்டிக்கு, லாரியில் மாங்காய்களை லோடு ஏற்றிக்கொண்டு சென்றார்.
ஆம்பூர் நெடுஞ்சாலை யில் சென்றபோது, லாரி மீது பின்னால் வந்த தனியார் பஸ் மோதியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 5 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
விபத்தால் சாலை முழுவதும் மாங்காய் சிதறி கிடந்தது. அதனை பொதுமக்கள் அள்ளி சென்றனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது
- பல்வேறு கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மிட்டாளம் ஊராட்சி பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற ஊட்டல் தேவஸ்தான கோவிலில் ஆடி பெருக்கு முன்னிட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.
இந்த கோவிலில் இன்று குளத்தில் உள்ள புனித நீர் தொட்டியில் உள்ள நீரை தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்கள் தலை மேல் ஊற்றி பிறகு அங்குள்ள பல்வேறு கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
- டெல்லி குழுவினர் ஆய்வு
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்தவும், வறட்சியை செழிப்பாக்கவும், விவசாயங்களை மேம்படுத்தவும், குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் நடவடிக்கை எடுக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 204 ஊராட்சிகளில் 1,400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் இந்தப் பணி ஆனது தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும்தான் அதிக அளவில் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட முழுவதும் பண்ணை குட்டைகள் வெட்டப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து வந்துள்ள குழுவினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து மாவட்ட முழுவதும் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலையில் ஊராட்சியில் 6 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு நடைபெற்று வரும் பணியை டெல்லியில் இருந்து வந்த டாக்டர் எஸ்வந்த் சாய் ஆய்வு செய்தார்.
அப்போது பண்ணை குட்டையில் நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை அளவீடு செய்தனர். அப்போது பண்ணை குட்டைகள் அமைப்பதால் நிலத்தடி நீர் உயர்வதோடு, குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும், விவசாயம் செழிக்கும், வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இதனால் பண்ணை குட்டை பயனுள்ள ஒன்று என ஆய்வு மேற்கொண்டவர்கள் அங்குள்ள பொது மக்களுக்கு தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆய்வின் போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் அ.திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார், உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
- வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஆத்தூர்குப்பம் பகுதியில் வசிப்பவர் சித்தன். இவரது வீட்டிற்குள் சாரை பாம்பு ஒன்று நுழைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து வீட்டில் இருந்த வர்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலை மையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டிற்குள் நுழைந்த 6 அடி நீள சாரை பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






