என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழே விழுந்தவர் சாவு"

    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பெரிய வரிகம் புதுமனை கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 65). இவர் தனது வீட்டின் சுற்றுச்சுவர் அருகே கொய்யா மரம் உள்ளது. இதில் கொய்யா பழுத்துள்ளது.

    இதனால் பழங்களை பறிப்பதற்காக தமிழரசன் ஏணி போட்டு மரத்தில் ஏறினார்.

    கொய்யாவை பறித்துக் கொண்டு கீழே இறங்க முயன்றார். அப்போது நிலை தடுமாறி திடீரென மரத்திலிருந்து தமிழரசன் கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தமிழரசன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தமிழரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×