என் மலர்
திருப்பத்தூர்
- தீயணைப்பு துறை வீரர்கள் பிடித்தனர்
- வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூர் கிராமத்தை சேரந்தவர் வசந்தன். இவர் வீட்டில் நேற்று இதனை பார்த்த கண்ணாடி விரியன் பாம்பு திடிரென வீட்டிற்கு நுழைந்தது.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே வந்தனர். உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஞா.இரமேஷ் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை உயிருடன் மீட்டு திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனை பெற்று கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.
- 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க சோக கீதம் இசைக்கப்பட்டது
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் பகுதிகளில் சுற்றுப்புற 1980-ம் ஆண்டு நக்சலைட்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. நக்சலைட் தாக்குதல் அதே ஆண்டு ஆகஸ்ட் 6-ந் தேதியான இதே நாளில் ஏலகிரியில் நக்சலைட்க்கு மூளையாக செயல்பட்டுவந்த சிவலிங்கத்தை போலீசார் மடக்கிபிடித்து ஜீப்பில் ஏற்றி சென்றனர்.
திருப்பத்தூர் அருகே சேலம் சாலையில் சென்ற போது நக்சலைட் சிவலிங்கம் மறைத்து எடுத்து வந்த 9 நாட்டு வெடிகுண்டை ஜீப்பில் வீசி விட்டு சினிமா பாணியில் எகிறி குதித்து தப்பி சென்றார். வெடிகுண்டு வெடித்ததில் ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஏட்டு ஆதிகேசவலு மற்றும் போலீஸ்காரர்கள் ஏசுதாஸ், முருகேசன் ஆகிய 4 பேர் பலியாகினர்.
இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி இறுதி சடங்கு நடந்தது. அதில், அப்போதைய முதல் அமைச்சர் எம். ஜி.ஆர். பங்கேற்று சவ ஊர்வலத்தில் நடந்தே சென்றார். மேலும், போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தை, வேலூரில் உள்ள அண்ணாகலை அரங்கத்தில் எம்.ஜி.ஆர் நடத்தினார்.
நக்சலைட்களை அடியோடு ஒழிக்க போலீசாருக்கு அவர் உத்தர விட்டார். இதையடுத்து, வட ஆற்காடு சரக டி.ஐ.ஜி. யாக இருந்த வால்டர் தேவாரம் தலைமையிலான போலீசார் நக்சலைட்டு களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை தொடங்கினர்.
அப்போது, தமிழகத்தில் நக்சலைட்கள் ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் துப்பாக்கியால்' சுட்டுகொல்லப்பட்டனர்.
நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த 4 போலீசாருக்கும் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் மணி மண்டபம் கட்டப்பட்டது.
ஆண்டுதோறும் அங்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி வீர மரணம் அடைந்த போலீசாருக்கு 43-வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க சோக கீதம் இசைக்கப்பட்டது.
முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் கலந் கொண்டு அஞ்சலி செலுத்தினர். வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், எஸ்.பி.க்கள் ஆல்பர்ட் ஜான், மணிவண்ணன், கிரன்ஸ்ருதி, கார்த்திகேயன், அண்ணாதுரை எம்.பி. எல்.ஏ.க்கள் நல்லதம்பி, எம்.தேவராஜ், வில்வநாதன், கியூ பிரான்ச் எஸ்.பி.சசிதரன் ஓய்வு பெற்ற ஏ.டி.ஜி.பி. துக்கையாண்டி தொழிலதிபர்கள் ராஜாராணி என்.தாமோதரன், ஆர்.ஆறுமுகம் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூரை அடுத்த பெரியவரிகம் புதுமனை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 65). இவரது வீட்டின் சுற்றுச்சுவர் அருகே கொய்யா மரம் உள்ளது.
பழங்களை பறிப்பதற்காக தமிழரசன் ஏணி போட்டு மரத் தில் ஏறினார். கொய்யாவை பறித்துக் கொண்டு கீழே இறங்க முயன்றார்.
அப்போது நிலை தடுமாறி திடீரென தமிழரசன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தமிழரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்ணாடிகள் உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி நியூ டவுன் அருகே சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள உள்ள புறவழி சாலையில் அதே பகுதியை சேர்ந்த ஜாவித் என்பவர் கார் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.
இவர் கடையை பூட்டிவிட்டு சென்ற அவர் திரும்பி வந்த போது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பதும் மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த காரின் என்ஜின் உதிரி பாகங்கள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்து அருகே உள்ள பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார்.
அப்போது திருட்டு போன பொருட்கள் அங்குள்ள ஒரு இரும்பு கடையில் இருந் தன. அந்த இரும்பு கடையில் விசாரித்த போது மில்லத் நகர் பகுதியை சேர்ந்த நதீம் (வயது 24) என்பவர் அந்த இரும்பு கடையில் பொருட்களை விற்பனை செய்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. பின்னர் நதீமை பல்வேறு இடங்களில் தேடியபோது குடிபோதையில் இருந்த அவரை ஜாவித்
பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து ஜாவித் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்பு காட்டில் விட்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி சரளா வீட்டில் இருந்த போது திடிரென நல்ல பாம்பு நுழைந்தது இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேனர். உடனடியாக இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூலம் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை ½ மணி நேரம் போராடி பிடித்து
திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர்.
- போலீசார் விசாரணை
- பிணம் தண்ணீரில் மிதந்து கிடந்தது
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் கட்டவாரப்பள்ளியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி நித்யா (வயது 28).
நேற்று மாலை வீட்டில் அருகில் உள்ள கிணற்றில் நித்யாவின் பிணம் தண்ணீரில் மிதந்து கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று போலீசார் நித்தியாவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல மாதனூர் அடுத்த பெரியாங்குப்பம் சேர்ந்த தமிழரசி (60), என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 200 கிலோ சிக்கியது
- குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் நேற்று ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் நோக்கி செல்லும் ரெயில் ஜோலார் பேட்டையில் வந்து நின்றது. ரெயில்வே போலீசார் பொதுப்பட்டியில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது 4 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது. அதனை பிரித்துப் பார்த்தபோது 200 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது. சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 35) என தெரிந்தது. அவர் ரேஷன் அரிசி பெங்களூருக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிந்தது. மேலும் ரெயில்வே போலீசார் விஜயை கைது செய்து திருப்பத்தூர் உணவு பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- மின் அதிகாரி தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில், திருப்பத்தூர் கோட்டத்தை சார்ந்த திருப் பத்தூர், கந்திலி, குரிசிலாப் பட்டு, வெலக்கல்நத்தம், மிட் டூர் ஆகிய துணை மின் நிலை யங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக் கிறது.
இதனால் நாளை (சனிக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சி. கே.ஆசிரமம், பொம்மிகுப் பம்,திருப்பத்தூர்டவுன், ஹவு சிங் போர்டு, குரிசிலாபட்டு, மடவாளம், மாடபள்ளி, சவுந் தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூர், மொளகரம்பட்டி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்தி பெண்டா, கொத்தாலக் கொட்டாய், புத்தகரம், பாரண்டபள்ளி, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூர், குரிசிலாப்பட்டு, மூலக்காடு, ஜவ்வாதுமலை புதுர்நாடு, மல் லாண்டியூர், விளாங்குப்பம், இருணாப்பட்டு, பாப்பா னூர், பூங்குளம், பலப்பநத்தம், பரவக்குட்டை, ஜல்தி, பள் ளத்தூர், ரெட்டிவலசை, குண் டுரெட்டியூர், நஞ்சப்பனேரி. டேம் வட்டம், ராணிவட்டம், லக்கன்வட்டம் ஆகிய பகுதி களில் மின்சாரம் நிறுத்தப் படும்.
இந்த தகவலை திருப்பத்துர் மின்வாரிய செயற்பொறியா ளர் அருள்பாண்டியன் தெரி வித்துள்ளார்.
- சோதனையில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம்அடுத்த வெள்ளக்குட்டை அருகே உள்ள நன்னேரி பகுதியில் வனவிலங்குகளை வேட்டை யாட நாட்டுத்துப்பாக்கியை சிலர் பதுக்கி வைத்திருந்தப்பதாக ஆலங்காயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் நன்னேரி பகுதியை சேர்ந்த பழனி என்பவரது வீட்டில் சோதனை செய்த போது உரிய உரிமம் இல்லாமல் வீட்டில் நாட்டுத்துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரிந்து.
உடனடியாக நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த ஆலங்காயம் போலீசார் பழனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த பெரிய வரிகம் புதுமனை கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 65). இவர் தனது வீட்டின் சுற்றுச்சுவர் அருகே கொய்யா மரம் உள்ளது. இதில் கொய்யா பழுத்துள்ளது.
இதனால் பழங்களை பறிப்பதற்காக தமிழரசன் ஏணி போட்டு மரத்தில் ஏறினார்.
கொய்யாவை பறித்துக் கொண்டு கீழே இறங்க முயன்றார். அப்போது நிலை தடுமாறி திடீரென மரத்திலிருந்து தமிழரசன் கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தமிழரசன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தமிழரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபால் தவறி வேடிக்கை பார்த்த நபர்கள் மீது விழுந்தது
- போதை வாலிபர்கள் கல்லால் தாக்கினர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சீதாபதி மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 50), என்ஜினியர். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அதே பகுதியில் கிடைத்த வேலையை செய்து வந்தார்.
இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் பார்சம்பேட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்த தமிழ்வாணன் (26) மற்றும் சூர்யா (25) ஆகியோர் ரேசன் கடை எதிரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வாலிபால் விளையாடினர்.
வாலிபால் தவறி வேடிக்கை பார்த்த நபர்கள் மீது விழுந்தது.
இதனால் கோபாலகிருஷ்ணன் தரப்பினருக்கும், போதை வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் கோபாலகிருஷ்ணை முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக கற்களால் தாக்கி கொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற தமிழ்வாணன் மற்றும் சூர்யா ஆகியோர் மீதும் கல் வீசி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த தமிழ்வாணன், சூர்யா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் திருப்பத்தூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் விசாரணை நடத்தினார்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவின்குமார், மவுரீஸ், நித்திஷ்குமார் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தீயணைப்புதுறையினர் பிடித்தனர்
- வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு பாடம் நடத்திக் கொண்டி ருந்தனர். பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடத்தை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப்பகுதியில் திடீரென்று நல்ல பாம்பு புகுந்தது. இதைபார்த்ததும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியை பத்மாவதியிடம் நாட்டறம்பள்ளி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் சென்று 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் ஏலகிரிமலை காப்பு காட்டில் பாம்பை கொண்டு போய் விட்டனர்.






