search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nice snake"

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • பாம்பை காப்பு காட்டில் கொண்டுபோய் விட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் கிராமத்தில் வசிப்பவர் ராஜேஸ்வரி. இவரது வீட்டில் நேற்று திடீரென நல்ல பாம்பு நுழைந்தது.

    இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பிடித்தனர்.

    அதனை திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் பாம்பை கொண்டு போய் விட்டனர்.

    • படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு
    • ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் கே.எம்.நகரை சேர்ந்தவர் நடராஜன்.

    இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இந்த நிலையில் தனது வீட்டுத் தோட்டத்தில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வந்தவாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். பாம்பை பிடிக்க முயன்ற போது திடீரென நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    சுமார் ஒரு மணி நேரம் போராடி பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்ட பாம்பை பொன்னூர் காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி சரளா வீட்டில் இருந்த போது திடிரென நல்ல பாம்பு நுழைந்தது இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேனர். உடனடியாக இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூலம் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை ½ மணி நேரம் போராடி பிடித்து

    திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர்.

    ×