search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குனிச்சி சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா
    X

    குனிச்சி சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா

    • 2 வருடம் வரை தாய்ப்பால் கொடுத்த தாய்மார்களுக்கு ஊக்கப்பரிசு
    • உறுதிமொழி எடுத்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே குனிச்சி அரசு சமுதாய சுகாதார நிலை யத்தில் தாய்ப்பால் வார விழா நடந்தது. கந்திலி வட்டார மருத்து அலுவலர் தீபா தலைமை தாங்கினார். சேஞ்ச் நிறுவன நிறுவனர் பழனிவேல்சாமி முன்னிலை வகித்தார்.

    இதில் தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவித்தல், பணிபுரியும் பெற்றோரிடம் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது டாக்டர் தீபா குழந் தைகளுக்கு தாய்ப்பால் சிறந்த உணவாகும், இது பாதுகாப் பானது, சுத்தமானது, குழந்தைகளை நோய்களிலிருந்து பாது காக்க உதவும். எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது. 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று தாய்ப்பா லின் முக்கியத்துவம் பற்றி விளக்கி கூறினார்.

    இதில் 2 வருடம் வரை தாய்ப்பால் கொடுத்த தாய்மார்க ளுக்கு ஊக்கப்பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கினார். பின்னர் அனைத்து தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகளும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முடிவில் சேஞ்ச் நிறுவன இயக்குனர் சரஸ்வதி நன்றி கூறினார்.

    Next Story
    ×