என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stealing car spare parts"

    • கண்ணாடிகள் உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நியூ டவுன் அருகே சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள உள்ள புறவழி சாலையில் அதே பகுதியை சேர்ந்த ஜாவித் என்பவர் கார் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடையை பூட்டிவிட்டு சென்ற அவர் திரும்பி வந்த போது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பதும் மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த காரின் என்ஜின் உதிரி பாகங்கள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்து அருகே உள்ள பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார்.

    அப்போது திருட்டு போன பொருட்கள் அங்குள்ள ஒரு இரும்பு கடையில் இருந் தன. அந்த இரும்பு கடையில் விசாரித்த போது மில்லத் நகர் பகுதியை சேர்ந்த நதீம் (வயது 24) என்பவர் அந்த இரும்பு கடையில் பொருட்களை விற்பனை செய்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. பின்னர் நதீமை பல்வேறு இடங்களில் தேடியபோது குடிபோதையில் இருந்த அவரை ஜாவித்

    பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து ஜாவித் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×