search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் கர்நாடகாவுக்கு ரேசன் அரிசி கடத்திய வாலிபர் கைது
    X

    ரெயிலில் கர்நாடகாவுக்கு ரேசன் அரிசி கடத்திய வாலிபர் கைது

    • 200 கிலோ சிக்கியது
    • குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் நேற்று ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் நோக்கி செல்லும் ரெயில் ஜோலார் பேட்டையில் வந்து நின்றது. ரெயில்வே போலீசார் பொதுப்பட்டியில் ஏறி சோதனை செய்தனர்.

    அப்போது 4 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது. அதனை பிரித்துப் பார்த்தபோது 200 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது. சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 35) என தெரிந்தது. அவர் ரேஷன் அரிசி பெங்களூருக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிந்தது. மேலும் ரெயில்வே போலீசார் விஜயை கைது செய்து திருப்பத்தூர் உணவு பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×