என் மலர்
நீங்கள் தேடியது "Glass viper"
- தீயணைப்பு துறை வீரர்கள் பிடித்தனர்
- வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூர் கிராமத்தை சேரந்தவர் வசந்தன். இவர் வீட்டில் நேற்று இதனை பார்த்த கண்ணாடி விரியன் பாம்பு திடிரென வீட்டிற்கு நுழைந்தது.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே வந்தனர். உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஞா.இரமேஷ் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை உயிருடன் மீட்டு திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனை பெற்று கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.
- விவசாய நிலத்திற்கு சென்ற போது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த சுண்ணாம்புகாளை வட்டம், வடக்குப்பாட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 35), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் முரளி இன்று காலை அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது நிலத்தில் படுத்திருந்த கண்ணாடி விரியன் பாம்பு, முரளியை கடித்தது. வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






