search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பு கடித்து விவசாயி பலி
    X

    பாம்பு கடித்து விவசாயி பலி

    • விவசாய நிலத்திற்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த சுண்ணாம்புகாளை வட்டம், வடக்குப்பாட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 35), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் முரளி இன்று காலை அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது நிலத்தில் படுத்திருந்த கண்ணாடி விரியன் பாம்பு, முரளியை கடித்தது. வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×