என் மலர்
நீங்கள் தேடியது "They fought for a few hours and brought the fire under control"
- பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது
- போக்குவரத்து பாதிப்பு
ஆம்பூர்:
ஆம்பூர் நேதாஜிரோடு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிரபல துணிக்கடை அமைந்துள்ளது. இந்த துணிக்கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக கடையில் இருந்த ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






