என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் அவதிப் பட்டனர்"

    • ½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது
    • 1 மணி நேரம் போராடி மின் கம்பியை மாற்றினர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஆம்பூர்ரெயில் நிலை யத்தில் நேற்று மாலை 4.45 மணிக்கு சென்னை நோக்கி செல்லும் மார்க்கத்தில் 2-வது பிளாட்பாரத்தில் மின்சார ரெயில் என்ஜினுக்கு செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டது.

    இதன் காரணமாக மைசூ ரில் இருந்துசென்னை நோக்கி சென்ற வந்தே பாரத் ரெயில் விண்ணமங்கலம் ரெயில் நிலையத்தில் மாலை 4.54 மணியளவில் நிறுத்தப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி, ஜோலார் பேட்டை ரெயில்வே ஊழியர் கள் மின் கம்பியை சரிசெய் யும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரம் போராடி அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை அகற்றிவிட்டு புதியதாக மின் கம்பியை மாற்றினர்.

    இதனால் சுமார் 1 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. சரிசெய்யப்பட்ட பின்னர் நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரெயில் மாலை 5.27 மணியளவில் அரை மணி நேரம் தாமதமாக மேலும் ஆம்பூர் அருகே பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் டபுள் டெக்கர் ரெயில் சில நிமிடம் நின்று தாமதமாக சென்னை நோக்கி புறப்பட்டது.

    ரெயில்கள் நடுவழியில் நின்றதால் ரெயில் பயணிகள் அவதிப் பட்டனர்.

    ×