என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்பி குத்து"

    • 5 பேர் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் பொன்னாகரத்தை சேர்ந்தவர் தமிழ்செல் வன் (வயது 28). கூலி வேலை செய்து வருகிறார்.

    இவரது தெருவில் இருந்த பொது குடிநீர் குழாயை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனை அதேப் பகுதியை சேர்ந்த சிலர் தட்டிக்கேட்டனர். இதில் அவர்களுக்குள் தக ராறு ஏற்பட்டு ஒருவரை ஒரு வர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஒருவர் இரும்பு கம்பியால் தமிழ்செல்வனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகா யம் அடைந்த தமிழ்செல் வனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன் குமார், அப்பாவு, ரமேஷ்பாபு, ராஜேஷ், ஹரிஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் கைதானவர்களை வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    ×