search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Officials surprise inspection"

    • லேபிள் ஒட்டாத 3 கிலோ பொருட்கள் பறிமுதல்
    • 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுரையின்படி, வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வி.செந்தில் குமார் மற்றும் வாணியம்பாடி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் எம். பழனிசாமி ஆகியோர் வாணியம்பாடி பஸ் நிலையம் பகுதி களில் உள்ள கடைகள், பேக்கரி, சுவீட்ஸ்டால், ஓட்டல்களில் ஆய்வு செய்தனர்.

    அப்போது உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்த ஒரு கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட் டது. மூன்று இனிப்பகத்தில் இனிப்புகளுக்கு அதிகப்படியாக வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த கடைகளுக்கு முன் னேற்ற அறிக்கை அளிக்கப்பட்டது. இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் இருந்ததால் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டு கடைகளில் லேபிள் ஒட்டாத 3 கிலோ பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் போண்டா, பஜ்ஜி போன்றவற்றை வாழை இலை மற்றும் மந்தாரை இலை, சில்வர் பிளேட்டில் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

    • கும்பாபிஷேகம் நடத்த உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்ய பொதுமக்கள் மனு
    • ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக உள்ளதா? என சோதனை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவில், வீரகோவில், ராமநாதீஸ்வரர் கோயில்களில் புதிய அறங்காவலர் குழுவினர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்ட அறங்காவலர் குழு துணை தலைவர் பாண்டுரங்கன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முத்துசாமி, செயல் அலுவலர் சிவாஜி ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், முன்னாள் தலைவர் கோவர்த்தனன், துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள் விஜய் அமிர்தராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வீரகோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் தற்போது நிலவரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ள லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலை ஆய்வு செய்தனர்.

    விரைவில் கும்பாபிஷேகம் நடத்த உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதில் மாவட்ட அறங்காவலர் குழு துணை தலைவர் பாண்டுரங்கன் முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கோவில்களில் உள்ள ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    • தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் அனைத்து ஆவணங்களும் தமிழில் மட்டுமே பராமரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
    • ஆவணங்கள் அனைத்தும் தமிழில் உள்ளதா? புகார்கள் தமிழில் பெறப்படுகிறதா என்றும் சோதனை நடத்தினர்.

    வடமதுரை:

    தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள், சார்பதிவாளர், வருவாய்த்துறை அலுவலகங்களில் அனைத்து ஆவணங்களும் தமிழில் மட்டுமே பராமரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    அரசு அலுவலகங்களுக்கு புகார் தெரிவிக்க வருபவர்கள் தமிழில் மட்டுமே புகார் அளிக்க வேண்டும். அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பராமரிக்கப்படும் ஆவணங்களின் தன்மை ஆகியவற்றையும் தமிழ்வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதன்படி இன்று வடமதுரை போலீஸ் நிலையத்திற்கு வந்த தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களின் நிலை குறித்து ஆய்வு செய்தனர். ஆவணங்கள் அனைத்தும் தமிழில் உள்ளதா? புகார்கள் தமிழில் பெறப்படுகிறதா என்றும் சோதனை நடத்தினர்.

    இதேபோல அனைத்து அலுவலகங்கள் மற்றும் போலீஸ் நிலையங்களில் திடீர் சோதனை நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    ×