என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
- யார் என அடையாளம் தெரியவில்லை
- பல்வேறு கோணங்களில் விசாரணை
ஜோலார்பேட்டை:
குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ரெயில் நிலையம் அருகில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் காட்பாடி- ஜோலார்பேட்டை செல்லும் மார்க்கத்தில் ஏதோ ஒரு ரெயில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் வாலிபர் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து யார் அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






