என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயில் ஊழியரின் பல் உடைப்பு
    X

    ஜெயில் ஊழியரின் பல் உடைப்பு

    • அண்ணன் - தம்பி 3 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் பழனி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி (வயது 42). இவர் வேலூர் மத்திய ஜெயிலில் டெக்னிக்கல் அசிஸ்டெண் டாக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த சுப் பிரமணி குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட் டது.

    நேற்று முன்தினம் ரஜினி வீட்டில் இருந்து வேலூர் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சுப்பிர மணி என்பவரின் மகன்கள் முருகன் (47), காத்தவராயன் (37), சுரேஷ் (35) அன்பழகன் (40) மற்றும் சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்த ஞானஒளி என்பவரின் மனைவி சாலம் மாள் (45) ஆகியோர் ரஜி னியை வழி மறைத்து ஏன் இந்த வழியில் வருகிறாய் என

    திட்டி உள்ளனர்.

    இதில் அவர்களுக்குள் வாக் குவாதம் ஏற்பட்டு, ஆத்திரம் அடைந்த முருகன், காத்தவ ராயன், சுரேஷ், அன்பழகன் ஆகியோர் ரஜினியை தாக்கி உள்ளனர். இதை ரஜினியின் தாயார் ராணி தடுக்க முயன்ற போது அவரை கீழே தள்ளியதில் காலில் முறிவு ஏற்பட் டது. சாலம்மாள் என்பவர் கல்லை எடுத்து ரஜினி மீது வீசியதில் வாய் மீது பட்டு மூன்று பற்கள் உடைந்தது.

    இது குறித்து ரஜினி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக் டர் பிரபு வழக்குப் பதிவு செய்து முருகன், காத்தவரா யன், சுரேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்தார். அன் பழகன் மற்றும் சாலம்மாள் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×