search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் கல்லூரி மாணவர்கள் தர்ணா
    X

    தனியார் கல்லூரி மாணவர்கள் தர்ணா

    • 120 மாணவர்களில் 2 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி
    • தேர்வு முடிவில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த ரெட்டி தோப்பு பகுதியில் ஆண்கள் மட்டுமே பயிலும் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது.

    இந்த கல்லூரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கல்லூரி செமஸ்டர் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் கடந்த ஆண்டு 2-ம் ஆண்டு படித்த 120 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இவர்கள் தற்போது 3-ம் ஆண்டு படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தேர்வு முடிவில் 120 மாணவர்களில் 2 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியானது.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தேர்வு முடிவில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி இன்று காலை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×