search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relatives complain"

    • காப்பகத்தில் இருந்து அவரை வரவழைத்து அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்
    • தகவல் வாட்ஸ்-அப் குழுவில் பகிரப்பட்டதால் கண்டுபிடித்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலைகளில் சுற்றித்திரிந்தார்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு மேட்டுசக்கரக்குப்பம் பகுதியில் உள்ள காப்பகத்தில் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.

    இது குறித்து தகவல் வாட்ஸ்-அப் குழுவில் பகிரப்பட்டது. அந்த தகவலை பார்த்த கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீசார், ஜோலார்பேட்டை போலீசாருடன் தொடர்பு கொண்டு இதுகுறித்த விவரங்களை கேட்டனர்.

    போலீசாரால் மீட்கப்பட்டவர் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த வி.பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த கவுரவன் (வயது 80) என்பதும், இவர் கடந்த 5-ந் தேதி காணாமல் போய்விட்டதாக அவரது உறவினர்கள் புகார் கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

    பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்த அவரின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் காப்பகத்தில் இருந்து அவரை வரவழைத்து அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை வத்தலக்குண்டு திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • தவறான சிகிச்சையால்தான் பெண் இறந்தார் என கூறி ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காந்திஜி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சின்னையா - தனலட்சுமி தம்பதியின் மகள் தேவிபிரியா (வயது35) இவருக்கும், மதுரை மாவட்டம் பாலமேட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நிஷாந்த்குமார் (10) என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் வத்தலக்குண்டு காந்தி நகருக்கு வந்த தேவிபிரி யாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை வத்தலக்குண்டு திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சிகிச்சை பெற்றுவந்த தேவிப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேவிபிரியாவின் கணவர் சுப்பிரமணி, அவரது தந்தை சின்னையா, தாய் தனலட்சுமி மற்றும் உறவினர்கள் தவறான சிகிச்சையால்தான் தேவிபிரியா இறந்தார் என கூறி ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் டாக்டரை தேவிபிரியாவின் உறவினர்கள் தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இதனால் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது நடவடிக்ைக எடுக்காவிட்டால் தாங்கள் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து தேவிபிரியாவின் உடலை அவர்கள் பெற்று சென்றனர். இச்சம்பவத்தால் ஆஸ்பத்திரி முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

    பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவி வீட்டுக்கு போலீசார் வந்து சோதனை நடத்தினார்கள். மேலும் அடியாட்கள் வந்து எங்களை மிரட்டுகிறார்கள் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். #dharmapurigirlstudent

    கம்பைநல்லூர்:

    பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவி வீட்டுக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினார்கள். நேற்று இரவு இந்த சோதனை நடந்தது. 5 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து மாணவியின் அண்ணன் முனீஸ்வரன் கூறியதாவது:-

    எங்கள் குடும்பத்தை அடிக்கடி மிரட்டுகிறார்கள். பகலிலும், இரவிலும் அடியாட்கள் வந்து மிரட்டுகிறார்கள். நீ வழக்கை எப்படி நடத்துவாய் என்று பார்க்கத்தான் போகிறோம் என்றும், நீ வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் மிரட்டி வருகிறார்கள்.


    கைதான சதீஷ்குமாரின் தாயார் நேரில் வந்து என் குடும்பத்தை மிரட்டினார். எனக்கு எல்லா மட்டத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். இதனால் என் மகனை ஜாமீனில் எடுத்து வந்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார். அவரை போலீசார் கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவியின் தந்தை அண்ணாமலை கூறியதாவது:-

    எங்கள் வீட்டுக்கு போலீசார் வந்தார்கள். வீட்டில் சோதனை நடத்தி எதையோ தேடினார்கள். ஆனால் என்ன காரணத்திற்காக வந்தோம் என்பதை சொல்ல மறுத்து விட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    என்னையும், என் கணவரையும் இடித்து தள்ளி விட்டு போலீசார் எங்கள் வீட்டுக்குள் வந்தனர். கொலை செய்யப்பட்ட என் மகளின் பாஸ் புத்தகத்தை கேட்டனர். நான் கொடுக்க முடியாது என்றேன். அவர்கள் என்னை இடித்து தள்ளினர். நான் கீழே விழுந்து விட்டேன். எங்களை அவர்கள் மிரட்டினார்கள். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவியின் உறவுக்கார பெண் ஒருவர் கூறியதாவது:-

    மாணவி கொலை செய்யப்பட்ட பிறகு எங்களுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருகிறது. எங்கள் குடும்பத்தினரை கஷ்டப்படுத்துகிறார்கள். மாணவியின் சாவுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம். எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #dharmapurigirlstudent

    ×