என் மலர்
திருப்பத்தூர்
- மரத்தில் பரண் அமைத்து போதையில் மிதப்பு
- 3 கிலோ கஞ்சா செடியை பறிமுதல் செய்து அழித்தனர்
திருப்பத்துார்:
திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே கும்மிடிகாம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஞானமூர்த்தி (வயது25), மோட்டூரை சேர்ந்த சிவகுமார் மகன் பூந்தமிழன்(21) இவர்கள் கஞ்சா புகைக்கும் பழக்கத்தில் நண்பர்களாகினர்.
நாளைடைவில் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இவர்கள், கஞ்சா அடிக்க தினமும் அதிகவிலை கொடுத்து வாங்குவதை விட வீட்டுக்குள் செடி வளர்த்து புகைக்க முடிவு செய்தனர்.
ஞானமூர்த்தி நாரியூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, வீட்டின் அருகே எருக்கஞ்செடிக்கு நடுவில் கஞ்சா செடி வளர்த்தார்.
வளர்க்கும் கஞ்சாவை ரகசியமாக புகைக்க, ஊரை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குச் சென்ற அவர்கள், அங்கு உயரமான மரத்தின் மீது பரண் அமைத்தனர்.
தினமும் இங்கு வந்து பரண்மீது ஏறி கஞ்சா புகைத்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
தகவல் அறிந்த கந்திலி போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சா செடி வளர்த்தது தெரிந்தது.
இதனையடுத்து போலீசார் ஞானமூர்த்தி, பூந்தமிழனை கைது செய்தனர். அவர்கள் வளர்த்த 3 கிலோ கஞ்சா செடியை பறிமுதல் செய்து அழித்தனர்.
- சுதந்திர தின விழா முன்னிட்டு நடவடிக்கை
- போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
ஜோலார்பேட்டை:
நாடு முழுவதும் நாளை 76-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
குறிப்பாக பேருந்து நிலையங்கள், விமான நிலையம், ரெயில் நிலயங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தனியார் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் நகரின் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி, உஷாராணி உள்ளிட்ட ரெயில்வே போலீசார் நேற்று முதல் ரெயில் நிலையங்களில் உள்ள அனைத்து பிளாட்பாரங்கள், தண்டவாளங்கள் பயணிகளின் இருக்கைகள், உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கைக்குழந்தையுடன் ரம்யா திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் பாஸ்கர்பாண்டியனிடம் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என மனு அளித்தார்.
- சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களால் இயன்ற தொகையை குழந்தையின் சிகிச்சைக்கு வழங்கினர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன் (வயது 36). இவர் தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா(31). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு கவிமித்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் ஆரோக்கியமாக இருந்த குழந்தை, 7 மாதம் ஆன பிறகு, உடல் நிலை பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தது.
அதேபோல் தீபனும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2-வதாக ரம்யாவுக்கு கவியாழினி (6 மாதம்) பெண் குழந்தை பிறந்தது.
பிறந்த உடன் ஆரோக்கியமாக இருந்த குழந்தை உடல் நிலையில் மாற்றம் தெரியவந்தது. 3 மாதங்கள் ஆன பிறகும் கூட குழந்தையின் கால்களில் அசைவு ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து, சில நாட்கள் கழித்து கழுத்தும் நிற்கவில்லை. அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டதால் அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
டாக்டர்கள் குழந்தையை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு பரிந்துரை செய்தனர்.
வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், கவியாழினி உலகிலேயே அரிய வகை நோயான "ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி' வகை நோய் தாக்கியுள்ளதாகவும், உலகில் ஒரு சிலருக்கு மட்டுமே இது போன்ற நோய் பாதிப்பு இருப்பதாகவும், உடனடியாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் குழந்தையை காப்பாற்றுவது சுலபமல்ல, இதற்கான ஊசி இந்தியாவிலேயே இல்லை, அமெரிக்காவில் தான் உள்ளது, அந்த ஊசியின் விலை ரூ.17 கோடி என டாக்டர்கள் கூறினர்.
இதனையடுத்து கைக்குழந்தையுடன் ரம்யா திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் பாஸ்கர்பாண்டியனிடம் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என மனு அளித்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களால் இயன்ற தொகையை குழந்தையின் சிகிச்சைக்கு வழங்கினர்.
ஆனால் அதிகாரிகள் உதவிக்கரம் நீட்டவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மீறினால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
சுதந்திர தினத்தையொட்டி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்)கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் கடைகளுக்கு அருகில் உள்ள மதுபான கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான கூடங்கள் அனைத்தும் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினத்தன்று மூடப்பட வேண்டும்.
அன்றைய தினத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தால் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மது கூட உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி ஆகியோர் தெரிவித்தனர்.
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் நேற்று இரவு சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பார்சம் பேட்டை அருகே ன சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் இடையன்பட்டி பகுதியைச் சேர்ந்த நெல்சன் மண்டேலா (வயது 25) என்பதும், கையில் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதேபோல் இடையும் பட்டியைச் சேர்ந்த ஹரிஷ் (23) என்பவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
அவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் 2 வாலிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகனங்கள் ஊர்ந்து சென்றன
ஆம்பூர்:
ஆம்பூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
இதனால் வாணியம்பாடி, ஆம்பூர் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றனர்.
கடந்த 4 நாட்களாக அவ்வப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசி வருகிறது.இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- குடையை விரித்தபோது பரிதாபம்
- சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி (வயது 50), தொழிலாளி.
இவரது மனைவி சுகுணா (45). வீரமணி மற்றும் சுகுணா ஆகியோர் நேற்று பைக்கில் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றனர். பைக் வீரமணி ஓட்ட, சுகுணா பின்புறத்தில் உட்கார்ந்து சென்றார்.
பொன்னேரி அருகே சென்ற போது லேசான தூரல் மழை பெய்தது. அப்போது சுகுணா, கையில் வைத்திருந்த குடையை விரித்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
அவரை வீரமணி மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சுகுணா சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
வளத்தூர்- குடியாத்தம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் உஷாராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறயுள்ளது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல் நிலை பள்ளி வளாகத்தில் வட்ட அளவிலான செஸ், கேரம், வாலிபால், இறகு பந்து போட்டி, கபாடி போட்டி, டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறயுள்ளது.
இதில் அரசு பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்கின்றனர்.
இப்போட்டி வருகிற செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி ஆய்வாளர் குணசுந்தரி பள்ளி மாணவ, மாணவி களுக்கு இடையே நடைபெறும் செஸ் போட்டியை தொடங்கி வைத்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம் அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைவர் சி.எஸ்.பெரியார்தாசன், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக துணை தலைவர் ம.அன்பழகன், நகர மன்ற துணை தலைவர் இந்திராபெரியார்தாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விளையாட்டு போட்டியில் நகர மன்ற கவுன்சிலர் புன்னகை கமலசேகரன், பெற்றோர் ஆசிரியர் சங்கம் துணை தலைவர் முகிலன், சங்க இணை செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் சண்முகம், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மதன் குமார் நன்றி கூறினார்.
- வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 52). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார்.
ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த பிரதாப் குமார் (24) என்பவர் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக செல்வகுமார் செல்போன் மூலம் கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு பிரதாப் குமாரிடம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் பணத்தை வசூலிப்பதற்காக செல்வகுமார், பிரதாப் குமார் வீட்டிற்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே பணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த பிரதாப் குமார் செல்வகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் செல்வகுமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப் குமாரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் விசாரணை
- இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி, குன்னத்தூர் பகு தியை சேர்ந்த மாணவர் ஒரு வர் வாணியம்பாடி தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த மே மாதம், மாணவர் ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத் துள்ளார்.
இது குறித்து ஜோலார் பேட்டை போலீஸ் நிலையத் தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மங் கையர்கரசி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரே நடந்தது
- 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் கேத்தான்டப்பட்டியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரே அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சர்க்கரை ஆலை நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அண்ணா தொழிற்சங்க மாநில பேரவை தலைவர் (சர்க்கரைப் பிரிவு) திருப்பதி, ஐ.என்.டி.யுசி. மாநில பேரவை பொருளாளர் (சர்க்கரை பிரிவு) தங்கராஜ் பாட்டாளி தொழிற்சங்க தலைவர் அன்பழகன் உள்பட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களிடையே கடந்த 1990 முதல் 33 ஆண்டுகளாக வழங்கி வரும் இரட்டை ஊதிய முறையை கலைந்து அனைவருக்கும் ஒரே மாதிரியான அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி தாசில்தார் குமார் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.






