என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுதந்திர தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
- மீறினால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
சுதந்திர தினத்தையொட்டி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்)கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் கடைகளுக்கு அருகில் உள்ள மதுபான கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான கூடங்கள் அனைத்தும் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினத்தன்று மூடப்பட வேண்டும்.
அன்றைய தினத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தால் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மது கூட உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி ஆகியோர் தெரிவித்தனர்.






