என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • மேம்பால பணிகள் நடந்து வருகிறது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பம் ரெயில்வே கேட் பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயில்வே மேம்பால பணியின் பில்லர் அமைக்க வெட்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சேதுக்கரசன் மற்றும் போலீசார் பில்லர் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடந்த வாலிபரை கயிறு கட்டி வெளியே எடுத்தனர் அதன் பிறகு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள அக்ரகாரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் வினோத்குமார் (வயது 29) என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் டிப்ளமோ படித்துவிட்டு வீட்டிலிருந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் திருப்பதி கோயிலுக்கு செல்லவும், இதனால் தனது மோட்டார் சைக்கிளை ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு ரெயில் மூலம் திருப்பதி செல்ல இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் குடியானகுப்பம் ரெயில்வே கேட் பகுதியில் நடைபெற்று வரும் வழியில் ரெயில்வே மேம்பாலப் பணிக்கு பில்லர் அமைப்பதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து விபத்துக்குள்ளாகி படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இதனை அடுத்து வினோத் குமாரின் தந்தை ஜெயராமன் என்பவர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் பேச்சுவார்த்தை
    • 120 மாணவர்கள் பி.காம் தேர்வு. எழுதினர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் ரெட்டித்தோப்பு பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 120 மாணவர்கள் பி.காம் தேர்வு. எழுதினர். அதில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாககல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவர் கள் 50-க்கும் மேற்பட்டோர் கல்லூரி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் கல்லூரி நிர்வாகத்தின ரிடம் இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறு தியளித்ததன் பேரில் மாணவர்கள் போராட்டத்தைகைவிட்டு கலைந்து சென்றனர்.

    • ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது
    • செயல்விளக்கம் அளிக்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே கத்தாரி பகுதியில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் சுமார் 120 மாணவ-மாணவிகளுக்கு தென்மேற்கு பருவமழை பேரிடர் காலங்களில் நீர் நிலைகளிலும், தீ விபத்து போன்ற சம்பவங்களிலும் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    தீயணைப்புத்துறை மாவட்ட துணை இயக்குனர் சரவண குமார் தலைமையில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் மற்றும் தீயணைப்பு குழுவினர் செயல்வி ளக்கம் செய்து காட்டினர்.

    தீ விபத்து ஏற்படும் சூழ்நிலையில் எப்படி முன் அப்போது னெச்சரிக்கையாக நடந்து கொள்வது, விபத்தில் சிக்கியவர் களை காப்பாற்றுவது, பாதுகாப்பு உபகரணங்களை கையாள் வது, உயரமான மாடி கட்டிடங்களில் சிக்கிக் கொள்பவர்களையும் நீர்நிலைகளில் மூழ்கியவர்களையும் உபகரணங்களை பயன்படுத்தி காப்பாற்றுவது போன்றவைகளை செயல்விளக் கம் மூலம் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தினர்.

    • ரோந்து பணியில் ஈடுபட்டனர்
    • 10 பாக்கெட் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சேதுக்கரசன் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பார்சம்பேட்டை ரெயில்வே மேம்பாலம் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

    அதில் அவர் புது ஓட்டல் தெருவை சேர்ந்த விக்னேஸ்வ ரன் (வயது 46) என்பதும், மது மற்றும் சாராயம் விற்றதும் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 20 மது பாட்டில்கள், 10 பாக்கெட் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • கூடுதல் நிதி உட்பட பல்வேறு சலுகைகள் மத்திய அரசு வழங்கும்
    • அனைத்து கோணங்களிலும் ஆராய்வார்கள்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய அளவில் மத்திய அரசு சுகாதார துறை சார்பில் அரசு தேசிய தரச்சான்றிதழ் வழங்கி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருகிறது.

    இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த பட்டியல் மத்திய சுகாதார துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதன் பின்னர் தேசிய தரச்சான்றிதழ் மதிப்பீட்டு குழுவினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 அல்லது 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது, அங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, வசதிகள், தினசரி நிகழும் பிரச வங்கள் எண்ணிக்கை, வெளி நோயாளிகள் எத்தனை பேர் வரு கின்றனர்.

    மருத்துவமனையில் போதுமான செவிலியர்கள் பணியில் உள்ளனரா? உட்பட அனைத்து கோணங்களிலும் அலசி ஆராய்வார்கள்.

    பின்னர் இது தொடர்பாக அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் அளிக்கும் மதிப்பெண் அடிப் படையில் தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்படும். இதனால், கூடுதல் நிதி உட்பட பல்வேறு சலுகைகள் மத்திய அரசு வழங்கும்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜமுனாபுதூர், ராம நாயக் நடந்தது.

    தேசிய நல கன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதுப் பேட்டை சமுதாய சுகாதார நிலையம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு தேசிய தரச் சான்றிதழ் பெற்றதாக அறிவிப்பு வெளியானது. இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் கலந்துகொண்டு தேசிய தரச் சான்றிதழ்களை பெற்றனர்.

    • 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் உமேஸ்வரன் (வயது 30). இவர் நண்பர்களுடன் காரில் நேற்று வாணியம்பாடியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் (24). இவர் கூரியர் வேனை ஓட்டிக்கொண்டு வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் அருகே வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது முன்னாள் உமேஸ்வரன் ஓட்டி சென்ற கார் மீது சஞ்சய் ஓட்டி வந்த வேன் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் கார் சாலை தடுப்பில் மோதி நின்றது. வேன் கவிழ்ந்தது.

    இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சாலையில் இருந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

    இந்த விபத்தில் காரும், கூரியர் வேனும் முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 120 மாணவர்களில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக புகார்
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

    ஆம்பூர்:

    திருப்பூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் மஜிருலூம் கல்லூரி இயங்கி வருகிறது.

    இங்கு 120 மாணவர்கள் பி.காம் தேர்வு எழுதினர். அதில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கல்லூரி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • 10 பாட்டில்களை பறிமுதல்
    • சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள சோலையூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ெரயில்வே குடியிருப்பு பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மது பாட்டில்களை விற்பனை செய்த குமார் (52) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தன்.

    மேலும் குமாரை திருப்பத்தூர் கோர்ட்டி ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

    • மரத்தில் பரண் அமைத்து போதையில் மிதப்பு
    • 3 கிலோ கஞ்சா செடியை பறிமுதல் செய்து அழித்தனர்

    திருப்பத்துார்:

    திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே கும்மிடிகாம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஞானமூர்த்தி (வயது25), மோட்டூரை சேர்ந்த சிவகுமார் மகன் பூந்தமிழன்(21) இவர்கள் கஞ்சா புகைக்கும் பழக்கத்தில் நண்பர்களாகினர்.

    நாளைடைவில் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இவர்கள், கஞ்சா அடிக்க தினமும் அதிகவிலை கொடுத்து வாங்குவதை விட வீட்டுக்குள் செடி வளர்த்து புகைக்க முடிவு செய்தனர்.

    ஞானமூர்த்தி நாரியூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, வீட்டின் அருகே எருக்கஞ்செடிக்கு நடுவில் கஞ்சா செடி வளர்த்தார்.

    வளர்க்கும் கஞ்சாவை ரகசியமாக புகைக்க, ஊரை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குச் சென்ற அவர்கள், அங்கு உயரமான மரத்தின் மீது பரண் அமைத்தனர்.

    தினமும் இங்கு வந்து பரண்மீது ஏறி கஞ்சா புகைத்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

    தகவல் அறிந்த கந்திலி போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சா செடி வளர்த்தது தெரிந்தது.

    இதனையடுத்து போலீசார் ஞானமூர்த்தி, பூந்தமிழனை கைது செய்தனர். அவர்கள் வளர்த்த 3 கிலோ கஞ்சா செடியை பறிமுதல் செய்து அழித்தனர்.

    • சுதந்திர தின விழா முன்னிட்டு நடவடிக்கை
    • போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

    ஜோலார்பேட்டை:

    நாடு முழுவதும் நாளை 76-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    குறிப்பாக பேருந்து நிலையங்கள், விமான நிலையம், ரெயில் நிலயங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் தனியார் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    அத்துடன் நகரின் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி, உஷாராணி உள்ளிட்ட ரெயில்வே போலீசார் நேற்று முதல் ரெயில் நிலையங்களில் உள்ள அனைத்து பிளாட்பாரங்கள், தண்டவாளங்கள் பயணிகளின் இருக்கைகள், உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கைக்குழந்தையுடன் ரம்யா திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் பாஸ்கர்பாண்டியனிடம் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என மனு அளித்தார்.
    • சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களால் இயன்ற தொகையை குழந்தையின் சிகிச்சைக்கு வழங்கினர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன் (வயது 36). இவர் தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா(31). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது.

    இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு கவிமித்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் ஆரோக்கியமாக இருந்த குழந்தை, 7 மாதம் ஆன பிறகு, உடல் நிலை பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தது.

    அதேபோல் தீபனும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.

    இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2-வதாக ரம்யாவுக்கு கவியாழினி (6 மாதம்) பெண் குழந்தை பிறந்தது.

    பிறந்த உடன் ஆரோக்கியமாக இருந்த குழந்தை உடல் நிலையில் மாற்றம் தெரியவந்தது. 3 மாதங்கள் ஆன பிறகும் கூட குழந்தையின் கால்களில் அசைவு ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து, சில நாட்கள் கழித்து கழுத்தும் நிற்கவில்லை. அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டதால் அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

    டாக்டர்கள் குழந்தையை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு பரிந்துரை செய்தனர்.

    வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், கவியாழினி உலகிலேயே அரிய வகை நோயான "ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி' வகை நோய் தாக்கியுள்ளதாகவும், உலகில் ஒரு சிலருக்கு மட்டுமே இது போன்ற நோய் பாதிப்பு இருப்பதாகவும், உடனடியாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் குழந்தையை காப்பாற்றுவது சுலபமல்ல, இதற்கான ஊசி இந்தியாவிலேயே இல்லை, அமெரிக்காவில் தான் உள்ளது, அந்த ஊசியின் விலை ரூ.17 கோடி என டாக்டர்கள் கூறினர்.

    இதனையடுத்து கைக்குழந்தையுடன் ரம்யா திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் பாஸ்கர்பாண்டியனிடம் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என மனு அளித்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களால் இயன்ற தொகையை குழந்தையின் சிகிச்சைக்கு வழங்கினர்.

    ஆனால் அதிகாரிகள் உதவிக்கரம் நீட்டவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மீறினால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    சுதந்திர தினத்தையொட்டி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்.

    தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்)கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் கடைகளுக்கு அருகில் உள்ள மதுபான கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான கூடங்கள் அனைத்தும் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினத்தன்று மூடப்பட வேண்டும்.

    அன்றைய தினத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அதேபோல் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தால் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மது கூட உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி ஆகியோர் தெரிவித்தனர்.

    ×